

கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி. இவர் நேற்று மதியம் பார்வதிபுரம் பாய்பான்குட்டைஏரிக்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த சமயம் மின்னல் தாக்கியதில் ராசாங்கம்படு காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குபரி சோதித்த டாக்டர் ஏற்கனவே ராசாங்கம் உயிரி ழந்ததாக கூறியுள்ளார். மேலும்மின்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.