என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
- இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- சென்னையை பொறுத்தவரையில் கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக் பெய்தது.
சென்னையில் பாரிமுனை, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு, மெரினா, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Next Story






