search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை தீவிரம் கரையோர மக்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு செல்ல வேண்டும்கடலூர் கலெக்டர் வேண்டுகோள்
    X

    பருவமழை தீவிரம் கரையோர மக்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு செல்ல வேண்டும்கடலூர் கலெக்டர் வேண்டுகோள்

    • கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப் பட்ட கனமழை எச்சரிக்கை
    • கரைக ளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லவேண்டும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது - சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறி விப்பின்படி, டெல்டா மாவட்டமான கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப் பட்ட கனமழை எச்சரிக்கை மற்றும் மோசமான வானி லை காரணமாக கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இதன் காரணமாக இடிமின்னலுடன் கனமழை பெய்து வரும்போதுதிறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச்செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறும், தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின்இரு கரைக ளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லவேண்டும். கால்நடைகளை பாது காப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். கடலூர் மாவட்ட மீன வர்கள் யாரும் மறு அறி விப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது.

    கடலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கை கள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல் படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலை பேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி எண்கள் கட்டணமில்லால்லாதது.04142-220700, தொலைபேசி எண் - 107704142-௨௩௩௯௩௩ மேற்படி தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இதில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு நேரடி யாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×