search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unannounced"

    • விருதுநகரில் முன்னறிவிப்பில்லாத மின்தடை ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் மின் பாதை பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. ஆனால் அன்றைய நாளில் பல நேரங்களில் மாலை 5 மணிக்கு தான் மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக முறையான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின்தடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் திடீர் திடீரென மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், குடும்ப பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    விருதுநகர் நகர் பகுதியில் இன்று குறிப்பிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் விருதுநகர் நகர் முழுவதும் இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். சிறு தொழில் செய்வோர், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

    எனவே இனிமேலாவது மின்வாரிய அதிகாரிகள் மின்தடை குறித்த பகுதிகள் தொடர்பான முறையான அறிவிப்பு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×