search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power outages"

    • திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக இருப்பதால், இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது.
    • நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது.

    கள்ளக்கறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் கோரத்தாண்டவம் பொது மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக அடிக்கிறது. இதனால் இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது. ஆனால், திருக்கோவிலூர் மின்வாரய ஊழியர்களின் செயல்பாடு சுட்டெரிக்கும் சூரியனே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது. அவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்போது கூடுதலான மின்னழுத்தத்துடன் வருகிறது. இதனால் மின்சாதன பொருட்கள் ஆங்காங்கே பழுதடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டால் பதில் ஏதும் இல்லை   கோடை காலம் தொடங்கியதால் மின் பற்றாக்குறையால் இந்த மின்தடை ஏற்படுவதாக வைத்துக் கொண்டால் கூட நாள் ஒன்றுக்கு எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவித்துவிட்டு மின்சாரத்தை நிறுத்தலாம். அதை விடுத்து திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் உயர் மின்னழுத்தத்தில் மின்விநியோகம் நடைபெறுவதும் பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.மேலும் 24 மணி நேரத்தில் எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என்பதை உடனடியாக பட்டியலிட்டு திருக்கோவிலூர் மின்வாரியம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
    • இதனால் பலஇடங்களில் காலை9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை (சனிக் கிழமை) நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.

    இதனால் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அண்ணாநகர், பர்மாகாலனி , சாந்தி நகர், ராஜராஜன் நகர், சித்ரா நகர், நாஞ்சிக்கோட்டை ரோடு, பாத்திமா நகர், முனியாண்டவர் காலனி, சிட்கோ, மேரீஸ்கார்னர், பூக்காரத் தெரு, கல்லுக்குளம், அன்பு நகர், ஜெகநாதன் நகர், கோரிகுளம், துளசிராமன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் மின்நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால் மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம் பாக்கம், பக்க மேடு, கலிங்கமலை, கோண்டூர், வெள்ளா ழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரிய பாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம் பாளையம், குயிலா ப்பாளையம், தாண்டவ மூர்த்திகுப்பம், அம்மண ங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்பு துப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம், ரசப்புத்திரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கி ழமை) நடை பெற உள்ளது. இதன் காரணமாக சங்கரா புரம், பாண்டலம், வடசிறு வள்ளூர், வட செட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடை யாம்பட்டு, ஆருர், ராமராஜ புரம், அரசம்பட்டு, அர சராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க் குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார் பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    • சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (9-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அரண்மனைப்புதூா், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூா், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி.நகா், கே.எம்.நகா், பட்டுக்கோட்டையாா் நகா், திரு.வி.க. நகா், கவுண்டம்பாளையம், கோபால் நகா், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகா், கே.வி.ஆா். நகா், பூச்சக்காடு, மங்கலம் சாலை, பெரியாா் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி சாலை, யூனியன் மில் சாலை, மிஷின் வீதி, காமராஜா் சாலை, புதுமாா்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதா்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூா் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
    • ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 46 கிராம ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. கண்டமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் உள்ள சாலை மிக முக்கியமான சாலை. இச்சாலை அம்பேத்கர் நகர் பகுதிக்கு செல்லும் சாலை. இதேபோல கண்டமங்கலம் சுடுகாட்டு பாதையும் இது தான்.இப்படி மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல கண்டமங்கலம் ஒன்றியத்தில் மழைநீர் விவசாய நிலங்களில் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்பு, வாழை, கத்தரிக்காய் செடிகள், பூச்செடிகள், சவுக்கு பயிர்கள் மழைநீர் தேங்கி நிற்பதால் அழுகும் நிலை உள்ளது. மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் அதிக அளவு மழை நீர் சூழ்ந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு அழுகிவிடும் என விவசா யிகள் புலம்பி வருகின்றனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். பல இடங்களில் மின் மோட்டா ர்கள் மூலம் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் வெளியேற்ற முடியாமலும் உண்ண உணவின்றியும் பொது மக்கள் பெரிதும் கஷ்டப்படு கின்றனர். பல இடங்க ளில் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் பொது மக்களை கண்ட மங்க லம் ஒன்றிய குழு தலை வர் ஆர்.எஸ்.வாசன், துணை த்தலைவர் நஜீரா பேகம்தமின், கண்டமங்க லம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் அறிவுறு த்தலின் பேரில் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவ ர்கள் அந்தந்த பகுதி ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கண்டமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு பகலாக கொட்டும் மழை யையும் பொருட்படுத்தா மல் சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்து பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கினார்கள்.

    • 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • கவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் துணை மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
    • அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

    கடலூர்:

    அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24-ந் தேதி புயலாக உருவெடுக்க கூடும் என கூறப்படுகிறது.

    இதையொட்டி இன்று அதிகாலை 2 மணி முதல் விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 7 மணி வரை தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது. மழை காரணமாக அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

    • பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது.
    • முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றி உள்ள ராமநத்தம், வாகையூர், பாளையம், கீழ்ச்செருவாய், ஆவினங்குடி, பெண்ணாடம் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது. மழையின் காரணமாக திட்டக்குடி நகரில் மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் அதிகாலை 3 மணிக்கு வந்துள்ளது.

    இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிறுவர்களை வைத்துக்கொண்டு தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். தற்பொழுது இதுபோன்று பகல் நேரங்களிலும் எந்த முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

    • மின் துறை ஊழியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

    புதுச்சேரி:

    மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்த காரைக்காலில் மின் துறை ஊழியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்தப்போராட்டத்தால், காரைக்காலின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டு, மின் ஊழியர்கள் அதனை சரி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக, காரைக்காலின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். அதேபோல், காரைக்கால் அருகே அம்பகரத்தூரில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு ஏற்பட்ட மின்தடை பகல் 2.30 மணிவரை சரிசெய்யப்ப டவில்லை யென கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் தண்ணீர் விநியோகமும் தடைபட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். 

    தொடர்ந்து, அத்திர மடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் அம்பகரத்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த திருநள்ளாறு போலிசார், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், சம்பவ இடத்திற்குசென்று, மின் ஊழியர்களிடம் பேசுவதாகவும், தண்ணீர் விநியோகத்தை டீசல் மின் மோட்டார் மூலம் சரி செய்வதாக உறுதியளித்ததையடுத்து, பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு சென்றனர்.

    • வருகிற 20-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை.

    விழுப்புரம்:

    கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) ஏழுமலை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் வருகிற 20-ந் தேதி மாதா ந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம் பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால் காப்பேரி, நவ மால்மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்க மலை, கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரிய பாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பா ளை யம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்தி குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப் புதுப்பட்டு, கரைமேடு, திரு மங்கலம், ரசப்புத்திர பாளையம், வி.பூதூர், பூசாரிப் பாளையம், வெள்ளாழங்குப்பம், அரங்க நாதபுரம், உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினி யோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    ×