search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post-mortem"

    • கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார்.
    • இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது.

    கடலூர்:

    காட்டுமன்னா ர்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் வெள்ளாலர் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். ஜவுளிக்கடையில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் பிஸ்கட் கேட்டனர். இதனை வாங்க சைக்கிளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றார்.

    அப்போது வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார். இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்  இத்தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கோவிந்தராஜின் உடலை மீட்டு போலீசாரிடம் ஓப்படைத்தனர் பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைத்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி மீது மலர் கொடியின் கை பட்டது.
    • மின்சாரம் தாக்கியதில் மலர்கொடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் வசிக்கும் சாமிகண்ணு. இவரது மனைவி மலர்கொடி வயது 46, தினகூலி தொழிலாளி. இன்று காலை திட்டக்குடி பொன்னுசாமி நகரில் 3-வது கிராசில் உள்ள ஆசைத்தம்பி வீட்டின் மேல் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த மலர்கொடி மற்றும் கூலி தொழிலாளர்களுடன் சாப்பிட்டுவிட்டு பின் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வீட்டு மாடியில் பின்புறம் தண்ணீரை ஊற்றினார்.   

      அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி மீது மலர் கொடியின் கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் மலர்கொடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.   இறந்து போன மலர்கொ டியின் உடலை பார்த்து கூலித் தொழிலாளிகள் கதறி அழுததால் அப்போதில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

    • கண்ணபிரான்.திண்டிவனம் தண்ணீர் டேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையில் இயங்கி வருகின்ற பார் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
    • சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது, அவர் படுத்த நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர். கண்ணபிரான்.திண்டிவனம் தண்ணீர் டேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையில் இயங்கி வருகின்ற பார் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.இவர் இன்று காலை திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகம் எதி ரில் உள்ள கடை யின் அருகே வந்து அமர்ந்துள்ளார் .பின்பு அந்த இடத்தில் படுத்தவர் வெகு நேரம் படுத்து இருந்ததால், சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது, அவர் படுத்த நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பொது மக்கள் போலீஸ் நிலை யத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவர் யார் என்ற கோணத்தில் விசாரணை செய்து பின்பு அவரது ஆதார் அட்டையில் உள்ள முகவரிக்கு தகவல் தெரி வித்தனர். பின்பு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடலை மருத்துவமனைக்கு வெளியே சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய் அன்று மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் பார்மெர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, நேற்று அவர்களது உடலுக்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்வதாக திட்டமிடப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு வெளியே இருந்த சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் அம்மாநில செய்திகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.



    இந்நிலையில், இன்று இதுதொடர்பாக பேசிய மாவட்ட கூடுதல் ஆட்சியர், செய்திகளில் வெளியானவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். #Rajasthan
    மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை வாலிபர் பிரேத பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    மத்தியபிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய்.

    சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்து விட்டது. அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

    இதுதொடர்பாக ராஜேஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவரிடம் குன்வார்பாய் உடலை திகாம்கரில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரும்படி கூறினார்கள்.

    ஆனால், உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல போலீசார் வாகன வசதி செய்து தர மறுத்து விட்டனர். ராஜேசிடம் வாகன வசதி செய்வதற்கு போதிய பணமும் இல்லை.

    இதனால் வேறு வழியில்லாமல் குன்வார்பாய் உடலை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி வைத்து திகாம்கர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார்.

    அவரது ஊரில் இருந்து திகாம்கர் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரத்துக்கு பிணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தனர்.

    சிலர் இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து இணைய தளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அபிஜித் அகர்வால் கூறும்போது, 108 ஆம்புலன்சுக்கு அவர் தகவல் கொடுத்திருந்தால் ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்து இருப்போம்.

    அது போன்ற எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனாலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.

    சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் பணம் கொடுத்து வாகன வசதி செய்ய வழி இல்லாததால் தொழிலாளி ஒருவர் இறந்த தனது மனைவியின் உடலை பல கி.மீட்டர் தூரம் சுமந்து சென்ற சம்பவம் நடந்தது.

    இதேபோல் வாகன வசதி கிடைக்காமல் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் பிணத்தை ஏற்றி செல்லும் அவலநிலை பல மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 
    குற்றாலம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 43). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார் மாரியம்மாள் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டியில் பலியான 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 வக்கீல்கள் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

    அதன்படி பலியான 13 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலேயே அனைத்து உடல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

    நேற்று முன்தினம் வரை 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த 6 பேரின் உறவினர்கள் யாரும் வராததால் அந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இன்றும் அந்த 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
    ×