என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் தொழிலாளி பலி"
- எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி மீது மலர் கொடியின் கை பட்டது.
- மின்சாரம் தாக்கியதில் மலர்கொடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் வசிக்கும் சாமிகண்ணு. இவரது மனைவி மலர்கொடி வயது 46, தினகூலி தொழிலாளி. இன்று காலை திட்டக்குடி பொன்னுசாமி நகரில் 3-வது கிராசில் உள்ள ஆசைத்தம்பி வீட்டின் மேல் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த மலர்கொடி மற்றும் கூலி தொழிலாளர்களுடன் சாப்பிட்டுவிட்டு பின் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வீட்டு மாடியில் பின்புறம் தண்ணீரை ஊற்றினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி மீது மலர் கொடியின் கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் மலர்கொடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர். இறந்து போன மலர்கொ டியின் உடலை பார்த்து கூலித் தொழிலாளிகள் கதறி அழுததால் அப்போதில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்