என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police searching"
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 22-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் வீரேந்திரகவுதம் (வயது 38). இவரது மனைவி அனுராதா (32). இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கணவனும், மனைவியும் நெய்வேலி மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்க ஆள்இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து வீரேந்திரகவுதம் தனது சித்தப்பா மகள் பலாக் (15) என்ற சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். வீரேந்திரகவுதமும், அனுராதாவும் வேலைக்கு சென்றிருந்தபோது குழந்தையை சிறுமி பலாக் கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றிருந்தனர். இரவு அவர்கள் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தை மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. பலாக்கை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதனைத்தொடர்ந்து நெய்வேலி தெர்மல் போலீசில் அனுராதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி பலாக்கை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி தொழில் அதிபர் விஜயரங்கனை நேற்று முன்தினம் மர்ம மனிதர்கள் தாக்கி காரில் கடத்தி சென்றனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கடத்தப்பட்ட விஜயரங்கனை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கடத்தல்காரர்களை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று விஜயரங்கன் வீடு திரும்பினார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபரை கடத்தியது கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
விஜயரங்கனுக்கு, புதுவையை சேர்ந்த சிலருடன் தொழில் ரீதியாக பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் பிரச்சினை ஏற்பட்டு புதுவையை சேர்ந்த கூலிப்படையினர் விஜயரங்கனை கடத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கூலிப்படையினரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
கூலிப்படையினர் பிடிபட்டால்தான் விஜயரங்கன் கடத்தப்பட்டது ஏன்? என்பதற்கான முழு விவரங்களும் தெரியவரும்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம், சாலை பாலம் உள்ளது.
இந்த நிலையில் இந்த பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி வந்தது. அதில் பேசியவன், “பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்” என கூறி விட்டு போனை வைத்து விட்டான்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் பாம்பன் பாலம் விரைந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
போனில் பேசிய மர்ம மனிதன் பாம்பன் பாலம் என்று மட்டுமே கூறிய நிலையில் எந்த பாலம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் ரெயில் மற்றும் சாலை பாலங்களை அதிரடியாக சோதனை செய்தனர். இதன் காரணமாக பாம்பன் பாலம் பகுதியில் இன்று பரபரப்பு காணப்பட்டது. #PambanBridge #BombThreat
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் கடயம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22) வீட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டி.வி. பார்க்க செல்வார். அவ்வாறு வீட்டுக்கு சென்று வந்த நிலையில் சுரேஷ், அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனைக்கண்ட அவரது பெற்றோர் உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டுபோய் டாக்டரிடம் காண்பித்தனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சிறுமியை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிறுமியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்