search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing woman"

    • கைக்குழந்தையுடன் பெண் மாயமானார்
    • விவசாய கூலித்தொழிலாளி.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள காஞ்சிகாங்குடி கிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், சுகுணாவுக்கும் (22) திருமணமாகி 5 வயதில் செல்வலெட்சுமி என்ற மகளும், மூன்றரை வயதில் செல்வதுரை என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனது கைக்குழந்தையுடன் சுகுணா திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் செந்தில்குமார் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீடாமங்கலம் அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோனாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகள் சூர்யா என்ற சுப்புலெட்சுமி. பி.ஏ. முடித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார்.

    அவருக்கு பெற்றோர்கள் மாப்பிளை பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் சூர்யாவை பல இடங்களில் தேடினர். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாததால் இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து மாயமான சூர்யாவை தேடி வருகிறார்கள். 
    ×