என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைக்குழந்தையுடன் பெண் மாயம்
- கைக்குழந்தையுடன் பெண் மாயமானார்
- விவசாய கூலித்தொழிலாளி.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள காஞ்சிகாங்குடி கிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், சுகுணாவுக்கும் (22) திருமணமாகி 5 வயதில் செல்வலெட்சுமி என்ற மகளும், மூன்றரை வயதில் செல்வதுரை என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனது கைக்குழந்தையுடன் சுகுணா திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் செந்தில்குமார் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






