search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pokso law"

    ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அடுத்த கோலபையிலு கிராமத்தை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இவர் தனது தாய், தந்தையுடன் தர்பார் சிவாஜி பாஷா என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். தாபார் சிவாஜி பாஷா (20) மதனப்பல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று 4 வயது சிறுமிக்கு பாடம் கற்று கொடுப்பதாக அழைத்து சென்று உள்ளார். பின்னர் தன்னுடைய அறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி அலறி கூச்சலிட்டதால் சிறுமியின் தாயார் மற்றும் பொதுமக்கள் சென்று கதவை திறக்குமாறு கூறினர்.

    ஆனால் தர்பார் சிவாஜி பாஷா கதவை திறக்காததால் கதவை உடைத்து அறையின் உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். இதுகுறித்து மதனப்பல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சிறுமியை சிகிச்சைக்காக மதனப்பல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதனப்பல்லி எம்.எல்.ஏ. தேசாய் சிப்பாரெட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும் சிறுமிக்கு தேவையான வசதிகள் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை உடனடியாக கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து மதனபல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருமங்கலம் அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் அய்யனார் (வயது 26). விழாக்களுக்கு ரேடியோ செட் போடும் தொழிலாளி.

    இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். அப்போது திருமண ஆசை காட்டி சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அய்யனார் நடவடிக்கையில் சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தன்னை திருமணம் செய்யும்படி சிறுமி கூறினார். ஆனால் அய்யனார் அதற்கு உடன் படவில்லை.

    எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் சிறுமி புகார் செய்தார். திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தற்போது ஏமாற்றுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யனாரை கைது செய்தனர். #tamilnews
    திமுக நிர்வாகி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகியின் மகள் சத்யா (வயது 13). அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அத்தியூர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த ராஜவேல் மகன் சக்திவேல் (18), திரிசங்கு மகன் சங்கர் (19), செல்வராசு மகன் பிரதீப் (19) உள்ளிட்ட 4 வாலிபர்கள் சத்யாவை பின் தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்துள்ளனர். மேலும் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சத்யா, நடந்த சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தார். அதன்பின்னர் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சிறுமியிடம் அத்துமீறிய சக்திவேல், சங்கர், பிரதீப் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு வாலிபரை தேடி வருகிறார்.

    கைது செய்யப்பட்டவர்களில் சங்கர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். பிரதீப் அரியலூர் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×