search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OPS team"

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    • ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    புளியங்குடி:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து புளியங்குடியில் ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர் மூர்த்தி பாண்டியன் புளியங்குடி நகர நிர்வாகிகள் முருகன், துரைப்பாண்டியன், கணபதி, பம்பாய் மாடசாமி, மாரியப்பன், மகளிரணி மாவட்ட செயலாளர் சுவர்ணா, ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    • தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர்.

    நெல்லையில் மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட அவை தலைவர் கணபதி சுந்தரம், பொருளாளர் நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் சிவ அருண், கந்தசாமி, கதிரேசன், செல்வ சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் ஆடித்தபசு கொடியேற்ற விழாவில் கலந்து கொள்ள இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்தனர்.
    • வருகிற 31-ந் தேதி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை மற்றும் நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

    நெல்லை:

    ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் இன்று காலை கே. டி.சி. நகர் பகுதியில் நிர்வாகிகளை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், வருகிற 31-ந் தேதி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை மற்றும் நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்பட உள்ளது. இதில் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சங்கரன்கோவில் ஆடித்தபசு கொடியேற்ற விழாவில் கலந்து கொள்ள இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முருகேசன், ஜெயலலிதா பேரவை தலைவர் கணபதி சுந்தரம், தாழையூத்து மாடசாமி, மானூர் கந்த சாமி,சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மருது அழகுராஜ் ஆகியோர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஆர்.அசோகனுக்கு திருப்பத்தூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று வரவேற்பு கொடுத்தனர்.

    முன்னதாக கே.ஆர்.அசோகன், செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் ஆகியோர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினர்.

    ×