search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online fraud"

    ஆன்லைனில் ஐபோன் வாங்க முயன்று ரூ.26,000 விலையுள்ள சாதனத்திற்கு பேடிஎம் மூலம் ரூ.73,000 கொடுத்த வாலிபர், தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி புலம்புகிறார். #iPhone #SCAM


    இந்தியர்கள் விலை குறைந்த பொருட்களை வாங்க ஆர்வம் செலுத்துவது புதிதல்ல. எனினும் விலை குறைந்த பொருட்களை வாங்கும் அனுபவம் எப்போதும், அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதில்லை. ஆன்லைன் வர்த்தக பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதன் மூலம் பணம் இழப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    அந்த வரிசையில் சித்தார்த் என்ற டெக்கி புதிதாக இணைந்திருக்கிறார். தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வரும் சித்தார்த் ஓ.எல்.எக்ஸ் (OLX) வலைத்தளத்தில் ஐபோன் விளம்பரம் ஒன்றை பார்த்து, அதனை வாங்க திட்டமிட்டுள்ளார். இவர் ஆன்லைனில் பார்த்த ஐபோன் 8 பிளஸ் மாடலின் விலை ரூ.26,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், சித்தார்த் அதனை உடனடியாக வாங்க ஆர்வம் காட்டினார்.

    சந்தையில் புத்தம் புதிய ஐபோன் 8 பிளஸ் (64 ஜி.பி. மாடல்) ரூ.68,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விலை குறைவாக இருந்ததால் ஐபோன் 8 பிளஸ் மாடலை வாங்க அந்த விளம்பரத்தை பதிவிட்ட சாஹில் குமாரை சித்தார்த் தொடர்பு கொண்டு பேசினார். மறுபுறம் அழைப்பை ஏற்று பேசிய நபர் பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்து பணம் கொடுத்து ஐபோனை பெற்றுக் கொள்ள கூறியிருக்கிறார்.



    இதை நம்பி விமான நிலையம் விரைந்த சித்தார்த் ஐபோனினை விற்க தயாராக இருந்த சாஹிலை தொடர்புகொண்டார். மறுபுறம் பேசிய சாஹில் வேலை சுமை காரணமாக வெளியில் வர முடியாது என்றும், ஐபோனிற்கான முதல் தவணையாக ரூ.5,000 செலுத்தி சுங்க பிரிவில் ஐபோனை பெற்றுக் கொண்டு மீதித் தொகையான ரூ.21,500 செலுத்த சித்தார்த்திடம் கேட்டார். 

    ஆர்வ மிகுதியில் சித்தார்த் தனது பேடிஎம் அக்கவுன்ட் மூலம் சாஹில் அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினார். எனினும், தனக்கு பணம் வரவில்லை என கூறியதால் சித்தார்த் தொடர்ச்சியாக 11 தவணையாக சாஹில் அக்கவுன்ட்டில் மொத்தம் ரூ.73,091 தொகையை செலுத்தியிருக்கிறார்.

    பின் தனக்கான ஐபோனினை வாங்க விமான நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்து பின் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். வீடு திரும்பிய சித்தார்த் தனக்கு நடந்த சம்பவத்தை நண்பரிடம் பகிர்ந்து கொண்ட பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார். ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் உடனடியாக காவல் நிலையம் விரைந்த சித்தார்த் சாஹில் மீது புகார் தெரிவித்தார்.

    காவல் நிலையத்தில் சாஹில் மீது இந்திய குற்றப்பரிவு எண் 420 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    இணையத்தில் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை இழந்த பெண்மணி கூகுள் சர்ச் அனுபவத்தை புலம்பி தவிக்கிறார். #Google #OnlineScam



    இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு அடுத்தப்படி இ-வாலெட் எனும் இணைய பணப்பரிவர்த்தனை முறை அதிக பிரபலமாகி வருகிறது. மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் இ-வாலெட் சேவையை பயன்படுத்தி வந்த டெல்லியை சேர்ந்த பெண் கூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்திருக்கிறார். நூதன முறையில் நடைபெற்ற மோசடியில் சிக்கிய பெண் தன்னை அறியாமல் கொடுத்த தகவல்கள் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் தேவையற்ற செலவாக மாறியிருக்கிறது.

    தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்மணி தனது இ-வாலெட் சேவையில் முறையற்ற பணப்பரிமாற்றம் சார்ந்த குற்றச்சாட்டை தெரிவிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள, பலரையும் போன்று கூகுள் உதவியை நாடியிருக்கிறார் அந்த பெண்.



    அந்த வகையில் கூகுளில் கிடைத்த தொடர்பு எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டு தனது புகாரை தெரிவிக்க துவங்கினார். மறுபக்கம் பேசியவர் பெண்ணின் குறைகளை தீர்க்கும் வகையில் பதில் அளிக்க துவங்கி, பேச்சுவாக்கில் பெண்ணின் கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டு அவற்றை குறித்து வைத்துக் கொண்டார்.

    புகார் அளித்த பெண்மணி தனது பிரச்சனை சரியாகி விடும் என்ற நம்ப துவங்கியதும், அவருக்கான அதிர்ச்சி அழைப்பின்றி வந்து சேர்ந்தது. இ-வாலெட் சார்ந்த குற்றச்சாட்டு தெரிவித்தவரின் கிரெடிட் கார்டில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இ-வாலெட் சேவை பற்றிய கசப்பான அனுபவத்தை வெளியே கூறிய பெண், தான் தொடர்பு கொண்டு பேசிய எண் போலி என்பதை புரிந்து கொண்டார்.



    கூகுள் சர்ச் ஆபத்தானது எப்படி?

    டெல்லியை சேர்ந்த பெண் பணம் பறிகொடுத்த விவகாரத்தில் கூகுள் தரப்பில் பிழை எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் கூகுள் தேடலில் போலி மொபைல் நம்பர் தோன்ற கூகுள் மேப்ஸ் தான் காரணம். கூகுள் மேப்ஸ் சேவையில் தகவல்களை சரியாக வழங்கும் நோக்கில், பயனர்கள் தகவல்களை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. 

    இந்த வசதியை பயன்படுத்தி, வங்கிகள், விற்பனையகங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் தொடர்பு விவரங்களை பயனர்கள் தங்களது மொபைல் நம்பரை மட்டும் கொடுத்து, மாற்றிவிட முடியும். கூகுள் வழங்கும் தகவல்களில் பிழை இருக்காது என்ற நம்பிக்கையில், பயனர்கள் தொடர்ந்து கூகுள் உதவியை நாடுகின்றனர். 

    இதை பயன்படுத்தியே மோசடியாளர்கள், பயனர்களிடம் பணம் பறிக்க துவங்கி இருக்கின்றனர். சில சமயங்களில் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் முயற்சியாக மோசடியாளர்கள் ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் பதிவு செய்யப்பட்ட டெலிபோன் குரல்களை மாற்றி பேசுகின்றனர். இவற்றை நம்பி பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டு மற்றும் இதர வங்கி விவரங்களை வழங்கி, பின் ஏமாந்து போகின்றனர்.

    கூகுள் தரப்பில் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், மொபைல் நம்பர்களை எடிட் செய்யும் வசதி தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆன்லைனில் இதுபோன்ற விவகாரங்களில் சிக்காமல் இருக்க பயனர்கள் கூகுளில் இருந்து கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

    மேலும் பயனர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கடவுச்சொல் மற்றும் இதர விவரங்களை எவர் கேட்பினும் வழங்காமல் இருக்க வேண்டும்.
    ×