search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேடிஎம்"

    • டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மற்றும் நிதி சேவைகளை வழங்கும் தளம் பேடிஎம்
    • பேடிஎம் வங்கியின் 51 சதவீத பங்குகளை விஜய் சேகர் சர்மா வைத்துள்ளார்

    2010ல், விஜய் சேகர் சர்மா (Vijay Shekhar Sharma) என்பவரால் தலைநகர் புது டெல்லிக்கு அருகே உள்ள நொய்டா (Noida) பகுதியை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் "ஒன்நைன்டிசெவன் கம்யூனிகேஷன்ஸ் (One97 Communications)".

    இந்நிறுவனத்தால் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மற்றும் நிதி சேவைகளை வழங்க தொடங்கப்பட்ட தளம், பேடிஎம் (Paytm). பேடிஎம், டிஜிட்டல் வங்கி சேவையிலும் ஈடுபட்டு வந்தது.

    கடந்த ஜனவரி 31 அன்று, பேடிஎம் வங்கி, வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த விவரங்களை முறையாக சேகரிக்கவில்லை என்றும், நிதி பரிமாற்றம் தொடர்பான பல சட்டதிட்டங்களையும் அந்நிறுவனம் மீறி உள்ளதாகவும் மத்திய ரிசர்வ் வங்கியால் (RBI) குற்றம் சாட்டப்பட்டு பேடிஎம் வங்கி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது


    இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையில் பேடிஎம் நிறுவனத்தின் சந்தை மூலதனம் சரிவை கண்டது.

    இதன் தொடர்ச்சியாக, ஒன்நைன்டிசெவன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இயக்குனர்கள் குழு இந்த நெருக்கடியை சமாளிக்கும் வழிவகைகள் குறித்து ஆலோசித்து வந்தது.

    இந்நிலையில், பேடிஎம் இயக்குனர் குழுவில் தான் வகித்து வந்த தலைவர் பதவியை, விஜய் சேகர் சர்மா (45) ராஜினாமா செய்தார்.

    இதைத் தொடர்ந்து இயக்குனர் குழு மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய தலைவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

    பேடிஎம் வங்கியின் 51 சதவீத பங்குகளை விஜய் சேகர் சர்மா வைத்துள்ளார்.

    மார்ச் 15 தேதியுடன் பேடிஎம் நிறுவனம் நிதி சேவைகளை நிறுத்த வேண்டும் என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.
    • பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் யு.பி.ஐ. தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக செயல்பட விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்ய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் 15, 2024-க்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தனது அக்கவுண்ட்கள் மற்றும் வாலெட்களில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

    பண பரிமாற்றங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணத்தை தற்காலிகமாக வைத்துக் கொள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு பயனர்கள் கியூ.ஆர். கோடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்களில் பரிமாற்றம் செய்யலாம்.

    தற்போது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால், பேடிஎம்-இன் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் இருந்து புதிய வங்கிகளுக்கு மாறிவிடும். எனினும், இது தொடர்பான உத்தரவுகள் வெளியாகும் வரை புதிய பயனர்கள் இந்த சேவையில் இணைக்கப்பட மாட்டார்கள்.

    • புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிப்பு.
    • தொடர்ந்து விதிமுறைகளை மீறியதால் தடை விதிக்கப்பட்டது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலரும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர். அந்த வகையில், நாடு முழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.


     

    வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.

    வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம். 

    • பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.
    • செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் தனது விற்பனை, பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த 100-க்கும் அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.

    செலவீனங்களை குறைக்கும் நோக்கிலும், பணிகளை எளிமையாக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.

     


    முன்னதாக 2021-ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் 500-இல் இருந்து 700 பேர் வரை பணிநீக்கம் செய்தது. அப்போது ஊழியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என குற்றம்சாட்டி பணிநீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டது. 

    • பே.டி.எம். தரப்பில், தங்கள் நிறுவனத்தில் பணபரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது.
    • வாடிக்கையாளருக்கு தெரியாமலோ அல்லது அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பண பரிவர்த்தனை நடைபெறாது என வாதிடப்பட்டது.

    சென்னை:

    திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவி பவித்ரா. இவர், கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட ஊதிய தொகையான 3 லட்சம் ரூபாய், தனது (தனியார்) வங்கி கணக்கில் போட்டு வைத்திருந்தார். இந்த கணக்குடன் பே.டி.எம். கணக்கை இணைத்து, டிஜிட்டல் முறையில் பணத்தை செலவு செய்து வந்தார்.

    திடீரென இவர் கணக்கில் இருந்த பணம் மர்மநபரால் திருடப்பட்டது. இதுகுறித்து முதலில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இந்த பணத்தை வங்கி நிர்வாகம் திருப்பித் தர மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பவித்ரா வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அப்போது தனியார் வங்கி தரப்பில், மாணவியின் பணம் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை. அவரின் பே.டி.எம். கணக்கிலிருந்து காணாமல் போய் உள்ளது. இதற்கு வங்கி எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என வாதிடப்பட்டது.

    பே.டி.எம். தரப்பில், தங்கள் நிறுவனத்தில் பணபரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது. வாடிக்கையாளருக்கு தெரியாமலோ அல்லது அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பண பரிவர்த்தனை நடைபெறாது என வாதிடப்பட்டது.

    பே.டி.எம். மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் தலையிடுவதில்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

    அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மின்னணு பண பரிவர்த்தனைகள் செய்யும்படி, பொது மக்களை ஊக்குவிக்கும் நிலையில், மோசடிகளால் பாதிக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

    எந்த தவறும் செய்யாத நிலையில் மாணவி பணத்தை பறிகொடுத்து உள்ளார். பணத்துக்காக அலைக்கழிக்கப்படுகிறார்.

    ரிசர்வ் வங்கி விதிப்படி, பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்காமல், வங்கி நிர்வாகமும், பே டிஎம் நிறுவனமும் மாறி மாறி பழி போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

    2 வாரங்களில் மாணவியின் பணத்தை திரும்ப அளிக்க வேண்டுமென பே.டி.எம் நிறுவனத்திற்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    • பேடிஎம் மற்றும் கேஷ் ப்ரீ நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
    • போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியர்கள் போலி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் சுமார் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சீன கடன் செயலிகளும் இதில் அடங்கும்.

    இந்த செயலிகள், இந்தியர்களை கடன் வலையில் வீழ்த்தி, ரூ.500 கோடிவரை முறைகேடாக சம்பாதித்துள்ளன. அவர்களின் மிரட்டலுக்கு 52 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், சீனர்களால் நடத்தப்படும் மொபைல்போன் மூலம் சட்ட விரோதமாக கடன் வழங்கும் செயலிகள் குறித்த வழக்கு தொடர்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான ரேசர்பே, பேடிஎம் மற்றும் கேஷ் ப்ரீ நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 6 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.

    சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்தில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்தியர்களை போலி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    ×