search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online fraud"

    • நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
    • சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

    'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?

    சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ''சத்தம் போட்டால் குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை'' என்கிறார்.

    பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார்.

    இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

    கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

    இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.

    இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    * வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.

    அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

    * வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

    * நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

    * கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

    * கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

    சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.

    சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

    'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

    புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.

    சைபர் கிரைமில் பணியாற்றிய போலீஸ் துணை கமிஷனர் (தலைமை அலுவலகம்) எஸ்.ஆர்.செந்தில்குமார்:- சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது, சுயவிவரங்கள் அடங்கிய 'புரோபைல்', பகிரும் தகவல்களை நம்பிக்கையானவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் 'லாக்' செய்து வைக்க வேண்டும். சமூக ஊடகம் என்பது பரந்து விரிந்தது. அதில் பெண் என்ற பெயரில் ஆண் கூட இருக்கலாம். அதனால் யாரிடம் பழகும்போதும், குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். யாராவது தனிப்பட்ட படங்களை திருடி 'மார்பிங்' செய்து, 'பிளாக்மெயில்' செய்தால் சைபர் கிரைம் போலீசில் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால், அவர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்.

    சமூக ஊடக கணக்குகளை முடக்கி, அதில் தொடர்பில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புமாறு தகவல் வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தன்னுடைய வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். உள்பட வெவ்வேறு ஊடகங்களின் மூலமாக தங்களுடைய தொடர்புகளுக்கு, யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் 'ஓ.டி.பி'. கேட்பது இல்லை. எனவே எந்த காரணத்தை கொண்டும் 'ஓ.டி.பி.'யை யாரும் பகிரக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் 'லிங்க்'குகளை ஒருபோதும் திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இருந்தால் சைபர் குற்றங்களை தவிர்க்கலாம்.

    பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி?

    * இணையதள வங்கி பரிவர்த்தனைகளுக்காக தரமான மற்றும் 'லைசென்ஸ்' பெற்ற 'ஆபரேட்டிங் சிஸ்டத்தை' பயன்படுத்தவேண்டும்.

    * தகவல்களை உள்ளீடு செய்வதற்கு முன்பு, எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் 'யூ.ஆர்.எல்.'களை பரிசோதிக்கவேண்டும்.

    * பொதுவாக பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத இணைய இணைப்புகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

    * இ-மெயில், இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில், யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் 'பாஸ்வேர்டு'களை தேர்வு செய்யவேண்டும்.

    உங்களுக்கு தெரியுமா?

    இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 139 கோடி. இவர்களில் சுமார் 55 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் நடப்பாண்டு முதல் காலாண்டில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 198 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2-வது காலாண்டில் 15.3 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 37 ஆயிரத்து 658 ஆக உள்ளது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவாகிய சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெறும் 748 மட்டும்தான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 'ஜெட்' வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கின்றது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 707 ஆகும்.

    சைபர் குற்றங்களுக்கு கடிவாளம் போட்டால் மட்டுமே, வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் தப்பிக்கும் என்பதே நிதர்சனம். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புனே :

    கொரோனா தடுப்பூசியை தயாரித்து வழங்கும் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவராக இருந்து வருபவர் ஆதார் புனாவாலா. இவரது நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் சதீஷ் தேஷ்பாண்டே. அண்மையில் இவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆதார் புனாவாலா புகைப்படம் இட்ட குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், நான் மீட்டிங்கில் பிசியாக இருப்பதாகவும், என்னை அழைக்க வேண்டாம். நான் அனுப்பிய 8 வங்கி கணக்கிற்கு உடனடியாக பணத்தை அனுப்பி விடவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை நம்பிய சதீஷ் தேஷ்பாண்டே சிறிதும் தாமதிக்காமல் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 10 ஆயிரத்து 554-ஐ அனுப்பி விட்டார். மறுநாளில் தேஷ்பாண்டே நிறுவன தலைவர் ஆதார் புனாவாலாவிடம் செல்போனில் உரையாடியபோது பணம் அனுப்பிய தகவலை தெரிவித்தார். இதனை கேட்ட அவர் தான் எந்தவொரு குறுந்தகவலும் அனுப்பவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதன்பிறகு தான் அவர்கள் மோசடி போன விவகாரம் தெரியவந்தது.

    ஆதார் புனாவாலாவின் செல்போன் நம்பரை மர்மகும்பல் 'ஹேக்' செய்து குறுந்தகவல் அனுப்பி பணமோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக பந்த்கார்டன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்தனர்.

    இதில், மோசடி ஆசாமிகள் தங்கள் பெயரை எங்கும் குறிப்பிடாமல் பணம் பரிமாற்றம் செய்து உள்ளனர். இதைத்தவிர பீகார், அசாம், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், பணம் டெபாசிட் ஆன பின்னர் மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.

    வங்கி கணக்கு வைத்திருந்த செல்போன் நம்பரை கொண்டு விசாரித்ததில் 7 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூவ்குமார் பிரசாத், சந்திரபூஷன் ஆனந்த் சிங், கன்னையா குமார், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ரவீந்திரா குமார், மத்திய பிரதேச மாநிலம் ரபி கவுசல் குப்தா, யாசிர் நசீம் கான், ஆந்திராவை சேர்ந்த பிரசாத் சத்தியநாராயணா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    இதில் பிரசாத் சத்தியநாராயணா என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், ரபி கவுசல் குப்தா வணிக வங்கி ஊழியராகவும் இருந்து வந்தனர். இவர்களின் உதவியுடன் பணமோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பூஜா ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், ரூ.2,27,205 மாற்றப்படுவதை தடுத்து பணத்தை மீட்டனர்.

    மும்பை புறநகர் அந்தேரியில் வசிப்பவர் பூஜா ஷா. 49 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் புட் டெலிவரி ஆப் மூலம் இனிப்பு ஆர்டர் செய்துள்ளார்.

    இதற்காக ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பண பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது. இதனால், பூஜா சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணைக் கண்டுபிடித்து போன் செய்து தொடர்புக் கொண்டார்.

    பண பரிவர்த்தனை ஆகவில்லை என கடைக்காரரிடம் கூறியதை அடுத்து, பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் கார்டு மற்றும் ஓடிபி விவரங்களை பெற்றுள்ளார்.

    பூஜா தனது விவரங்களை கொடுத்த அடுத்த நொடியில், அவரது கணக்கில் இருந்து ரூ.2.4 லட்சம் எடுத்து மோசடி செய்துள்ளனர். தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பூஜா ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், ரூ.2,27,205 மாற்றப்படுவதை தடுத்து பணத்தை மீட்டனர்.

    • நாடு முழுவதும் ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடந்து வருகிறது.
    • சைபர் கிராம் போலீசார் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    சேலம்:

    நாடு முழுவதும் ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் அறிமுகமில்லாத நபர்களின் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என சைபர் கிராம் போலீசார் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    வங்கியில் இருந்து பேசுவதாகவோ செல்போன் நிறுவனங்களிலிருந்து பேசுவதாகவும் கூறி ஆதார் எண், கணக்கு எண், ஓ.டி.பி. விவரங்களை கேட்டால் தெரிவிக்க கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.அதே வேளையில் ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் தெரிவித்து சைபர் கிராம் போலீசாரின் உதவியுடன் அந்த பணத்தை மீட்கலாம் எனவும் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த பல்வேறு ஆன்லைன் முறையீடு வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு மோசடியாளர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்கி மீண்டும் பாதிக்கப்பட்ட புகாரின் கணக்கில் சேர்த்து வருகின்றனர்.

    அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பணம் இழந்ததாக வந்த பல்வேறு புகார்களின் பேரில் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் உத்தரவில் சைபர் கிரைம் போலீசார் கூடுதல் எஸ்.பி. செல்ல பாண்டியன், இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையிலான போலீசார் பண மீட்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதுவரையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு பணத்தை சுருட்டிய மோசடியாளர்களின் வங்கி கணக்கிலிருந்து 4.6 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    • மொபைல் பேங்கிங் செயலியை வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது அனைத்து விவரங்களையும் திருடி விடும்.
    • இந்திய இணையவெளியில் ‘சோவா’ வைரஸ் உலவி, இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்துள்ளது.

    புதுடெல்லி :

    நாட்டில் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு நேற்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.

    செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நிழல் உலக சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'சோவா' என்ற வைரஸ் முதல்முறையாக விற்பனைக்கு வந்தது. அது, யூசர்நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை திருடக்கூடியது.

    முதலில், அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை அந்த வைரஸ் குறிவைத்தது. கடந்த ஜூலை மாதம், இந்தியா உள்பட பல நாடுகளை தனது இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளது.

    அந்த வைரசை உருவாக்கியவர்கள், தற்போது அதன் 5-வது தலைமுறையை உருவாக்கி விட்டனர். இந்த வைரஸ், குரோம், அமேசான் போன்ற சட்டப்பூர்வ செயலிகளின் சின்னத்தை காட்டும் போலி ஆன்ட்ராய்டு செயலிகளுக்குள் தன்னை மறைத்துக் கொள்ளும். அந்த செயலிகளை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அப்படி ஏமாற்றும்.

    போலி ஆன்ட்ராய்டு செயலிகளை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்தவுடன், அந்த போனில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகளின் விவரங்களை வைரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வருக்கு தெரிவிக்கும்.

    அதன்மூலம், குறிவைக்கப்படும் செயலிகள் தேர்வு செய்யப்படும். அந்த செயலிகளின் முகவரிகளை 'சோவா' வைரசுக்கு சர்வர் தெரிவிக்கும். அவை 'எக்ஸ்.எம்.எல்.' பைலில் சேமிக்கப்படும். குறிவைக்கப்பட்ட செயலிகள் பற்றி வைரசுக்கும், சர்வருக்கும் இடையே கருத்து பரிமாற்றம் நடைபெறும்.

    'சோவா' வைரஸ், மொபைல் பேங்கிங் செயலிகள், பணம் செலுத்தும் செயலிகள், கிரிப்டோகரன்சி செயலிகள் என 200-க்கு மேற்பட்ட செயலிகளை குறிவைத்து செயல்படுகிறது. அந்த செயலிகளுக்கு மேலே ஒரு அடுக்கை உருவாக்கி, ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களை ஏமாற்றக்கூடியது.

    மொபைல் பேங்கிங் செயலியை வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது, யூசர்நேம், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருடி விடும். இது, வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடு போவதற்கு வழி வகுக்கும். இந்திய இணையவெளியில் 'சோவா' வைரஸ் உலவி, இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்துள்ளது.

    இந்த வைரஸ், ஆன்ட்ராய்டு போனுக்குள் ஊடுருவி, அதை முடக்கி விடக்கூடியது. 'செட்டிங்ஸ்' பகுதிக்கு சென்று வைரசை நீக்குவதும் கடினம். நீக்கினாலும், 'இந்த செயலி பாதுகாப்பானது' என்ற செய்தியுடன் திரும்ப வந்து விடும்.

    எனவே, வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். முறையான 'ஆப் ஸ்டோர்' மூலமாக செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலிகளின் விவரங்களை படித்து பார்க்க வேண்டும். அவ்வப்போது 'அப்டேட்' செய்ய வேண்டும். செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை அளிக்கக்கூடாது.

    நம்பகத்தன்மையற்ற வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடாது. மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் சந்தேகத்துக்குரிய 'லிங்க்'குகளை திறக்கக்கூடாது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • உங்களது அந்தரங்க தருணங்களை ஹேக்கர்கள் படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.
    • ‘பாஸ்வேர்ட்', ‘ ‘கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    பெண்கள், இளைஞர்கள் போன்றோர் அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் அளவுக்கு அதிகமாக நேரம் செலவிடுவதால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கியிருந்தேன். நமது மாணவச் செல்வங்கள் 'ஆன்லைன்' விளையாட்டுக்களில் மூழ்கினால், அது மனச்சிதைவு நோயாக மாறிவிடும் ஆபத்து குறித்து கவலையோடு பகிர்ந்திருந்தேன். புதிது, புதிதாக முளைக்கும் கொரோனா வைரஸ் 'வேரியண்ட்'டுகளைப் போன்று, 'சைபர்' கிரிமினல்கள் புதுப்புது தொழில்நுட்ப அவதாரம் எடுப்பதால், 'சைபர்' மோசடிகள் குறித்து அனைவரும் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும் என்று எச்சரித்திருந்தேன்.

    புகைப்படங்களை 'மார்பிங்' செய்வதற்கான செயலிகள் எளிதாக கிடைப்பதால், முன்னாள் நண்பர்கள் கூட 'மார்பிங்' 'பிளாக்மெயிலர்'களாக மாறி சில பெண்களை வதைப்பது, வளைப்பது பற்றி விளக்கியிருந்தேன். உங்களது செல்போன் அல்லது கணினி கேமராக்களையே பயன்படுத்தி, உங்களது அந்தரங்க தருணங்களை 'ஹேக்கர்'கள் படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து எச்சரித்திருந்தேன். டி.ஜி.பி.க்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் பல பிரபலங்களின் பெயர்களில், அவர்களது புகைப்படங்களுடன் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் பற்றி எச்சரித்திருந்தேன். ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி செயல்படும் பல 'டுபாக்கூர்' கடன் செயலிகள், பயனர்களை 'பிளாக்மெயிலிங்' செய்து அநியாய வட்டி வசூலிப்பது பற்றி விரிவான தகவல்களுடன் பதிவிட்டிருந்தேன்.

    ஆரம்பக் கட்டத்தில் உங்களுக்கு சிறு வெற்றிகள் தந்து ஆசைகாட்டும் 'ஆன்லைன்' சூதாட்டங்களில் உங்களுடன் ஆடுவது தனிநபர் அல்ல, ஆயிரம் பேரின் மூளை வலிமைகொண்ட 'கம்ப்யூட்டர் புரோகிராம்' என்பதால், இறுதியில் தோற்பதும் ஓட்டாண்டி ஆகப்போவதும் நீங்கள்தான்- ஏமாறாதீர்கள் என்று விளக்கி இருந்தேன். 'பிட்காயின்' போன்ற 'கிரிப்டோ கரன்சிகளை' எலான் மஸ்க் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் ஆதரித்தாலும்கூட, எந்த ஒரு அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்தமுடியாத 'கிரிப்டோ கரன்சி'களில் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் ஏமாறவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். அழகிய பெண்களின் புகைப்படங்களுடன் சில 'ஆன்லைன்' திருமண தகவல் மையங்கள் விதவிதமாக மோசடி செய்வது குறித்த பல தகவல்களுடன் அம்பலப்படுத்தி இருந்தேன். பிரபல வங்கிகளின் தலைமையகத்திலிருந்து பேசுவதுபோல் பேசி, உங்களது வங்கி விவரங்களை கேட்டுவாங்கி கொள்ளையடிக்கும் 'சைபர்' கிரிமினல்களைப் பற்றி பல சம்பவங்களுடன் விளக்கி இருந்தேன்.

    நல்ல சம்பளத்துடன் வேலைவாங்கித் தருவதாக ஆசைகாட்டி, 'அட்வான்ஸ்' தொகை கட்டச்சொல்லி பணம்பறிக்கும் 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருந்தேன். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, நமது கம்ப்யூட்டர்களின் குறைபாடுகளை சரிசெய்வதற்கான தொலைநிலை அணுகல் செயலிகளை தவறாகப் பயன்படுத்தி, நமது கம்ப்யூட்டரில் உள்ள வங்கி கணக்கு உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருடும் 'சைபர்' கிரிமினல்கள் பற்றி எச்சரித்திருந்தேன்.

    'வாட்ஸ் அப்' போன்ற தளங்கள் மூலமாக, முன்பின் தெரியாத யாராவது ஒருவர் ' கியூ.ஆர்' குறியீடுகளை அனுப்பி அதனை 'ஸ்கேன்' செய்யுமாறு கேட்டால் திட்டவட்டமாக மறுத்துவிடுங்கள் என்று தெரிவித்திருந்தேன். 'டேட்டிங்' செயலிகள் வெளியிடும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப்பார்த்து இளைஞர்கள் ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், இந்த 'டேட்டிங்' செயலிகளை பின்தொடர்ந்துவரும் 'பிளாக்மெயில்' கும்பல்களிடம் உங்கள் பணத்தையும் மானம், மரியாதையையும் இழக்காதீர்கள் என்று எச்சரித்திருந்தேன்.

    ஆபாசப் படங்களை 'ஆன்லைனில்' பார்த்ததால், உங்களது 'பிரவுசர்' முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கும் போலியான 'பாப்-அப்' விளம்பரங்கள் மூலமாக நடைபெறும் 'பிளாக்மெயில்' மோசடிபற்றி விளக்கமாக குறிப்பிட்டிருந்தேன். 'ஜிபே', 'பேடிஎம்' போன்ற 'யூபிஐ' 'பேமெண்ட்' செயலிகளை பயன்படுத்தி 'சைபர்' கிரிமினல்கள் பணம் பறிப்பது பற்றி சம்பவங்களுடன் விளக்கியிருந்தேன். 'பேமெண்ட்' செயலிகளின் 'பாஸ்வேர்ட்', ' 'கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்திருந்தேன். 'சைபர்' கிரிமினல்களிடம் சிக்கிக்கொண்ட ஏராளமானவர்களின் வழக்குகளை காவல்துறைப் பணியின்போது கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், இனியாவது மக்கள் ஏமாறாமல் இருக்கவேண்டும் என்ற அக்கறையுடன்தான் இந்த தொடரை எழுத முன்வந்தேன். இந்த தொடர், மிகச்சிறந்த எச்சரிக்கை உணர்வை விதைத்திருப்பதாக பாராட்டிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

    முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி

    • ‘பாஸ்வேர்ட்’, ‘கியூ.ஆர்’ குறியீடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
    • செயலிகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

    நீங்கள் 'ஜிபே' (GPay), 'பேடிஎம்' (Paytm), 'போன்பே' (PhonePe)போன்ற யு.பி.ஐ. (UPI) 'பேமெண்ட்' செயலிகளைத்தொடர்ந்து பயன்படுத்துகிறவரா? இந்த செயலிகள் நமது பணப் பரிவர்த்தனையை மிக எளிதாக்கியிருக்கின்றன என்பது உண்மை. அதேவேளையில் இந்த செயலிகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

    மும்பையை சேர்ந்த 27 வயது பெண் ஆஷா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். தோழியின் பிறந்த நாள் கேக்கை வடிவமைக்க 'விஸ்கி' பாட்டில் தேவைப்பட்டதால், ஆன்லைனில் ஒரு 'ஒயின்' கடையைத் தொடர்புகொண்டார் ஆஷா. 'ஒயின் ஷாப்'பில் இருந்த மோகன், கூகுள் பேயில் 'கியூ.ஆர்'குறியீடு மூலம் பணம் அனுப்பச் சொன்னார். அதன்படி அந்த பெண் ரூ.550 செலுத்தினார். அடுத்து 'டெலிவரி எக்ஸிகியூட்டிவ்' ஒருவர் விரைவில் உங்களை அழைப்பார் என்று மோகன் தெரிவித்தார்.

    அதன்படி, சில நிமிடங்களில் திலீப் என்பவர் ஆஷாவை அழைத்தார். மதுவை 'டெலிவரி' செய்ய பதிவு கட்டாயம் என்று கூறிய திலீப், 'கூகுள் பேயை' 'ஓப்பன்' செய்து அதில் ரசீதின் எண் "19,051" என்பதைப் பதிவிடுமாறு கூறினார். ஆஷா அப்படி பதிவிட்டதைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.19 ஆயிரத்து 51 'டெபிட்' செய்யப்பட்டுவிட்டது. குழப்பமடைந்த ஆஷா, திலீப்பிடம் இது பற்றி கூறியபோது, ​​"அதைப் பற்றி கவலைப்படவேண்டாம். எங்கள் கணினியில் பிழை ஏற்பட்டுள்ளது. முழு செயல்முறையையும் மீண்டும் செய்தால் சரியாகிவிடும்" என்று கூறினார். அந்த பெண் மீண்டும் அப்படி செய்தவுடன், அவரது கணக்கில் இருந்து மேலும் ரூ.19 ஆயிரத்து 51 மீண்டும் 'டெபிட்' செய்யப்பட்டது.

    பணத்தை திருப்பித்தருமாறு திலீப்பிடம் அந்த பெண் கேட்டபோது, ​​கணினியில் சிக்கல் இருப்பதாகவும், அந்த தொகையை வரவு வைப்பதற்கு பதிலாக, அந்த 'புரோகிராம்' 'டெபிட்' செய்துவிடுவதாகவும் நொந்துபோய் பேசுவதுபோல் பேசி, மேலும் ஏமாற்றியுள்ளார் திலீப். "உங்களது பணத்தைத் திரும்பப்பெறுவதற்காக உங்கள் வங்கி 'டெபிட்' அல்லது 'கிரெடிட்' கார்டு விவரங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கேட்ட திலீப்பிடம் தனது கார்டின் 'சிவிவி'(CVV) எண் மற்றும் கார்டு காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்துள்ளார் ஆஷா.

    அடுத்து, "உங்கள் வங்கி பரிவர்த்தனை வரம்பு குறைவாக உள்ளதால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை" என்று திலீப் சொன்னவுடன் தனது வங்கி பரிவர்த்தனை வரம்பை 'ஆன்லைன்' மூலமாகவே அதிகரித்துள்ளார் ஆஷா. இதையடுத்து மறுமுனையில் இருந்த 'சைபர்' கிரிமினல்கள், பல்வேறு பரிவர்த்தனைகள் மூலமாக ஆஷாவின் கணக்கில் இருந்து ரூ.5.35 லட்சத்தை திருடி விட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த ஆஷா 'சைபர் கிரைம்' போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    சென்னை போன்ற பெருநகரங்களில் 'ரியல் எஸ்டேட்' துறையிலும் 'சைபர்' கிரிமினல்கள் புகுந்துவிட்டனர். வீடு வாடகைக்கு விடப்படும் என்று ஆன்லைனில் விளம்பரம் வெளியிடும் வீட்டு உரிமையாளர்களை குறிவைத்து இந்த கும்பல் செயல்படுகிறது. இந்த கும்பலில் ஒருவன், வீட்டு உரிமையாளரை செல்போனில் அழைத்துப் பேசுவான். வீடு எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றும், அட்வான்ஸ் தொகையை உங்களுக்கு 'ஜிபே' மூலமாக அனுப்பி வைக்கிறோம் என்றும் ஆசை காட்டுவான்.

    "முதலில் உங்களுக்கு சாம்பிளுக்காக 'ஜிபே' மூலமாக ஒரு ரூபாய் அனுப்பியுள்ளேன். அந்த ஒரு ரூபாயை உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த 'லிங்க்'-க்கு திருப்பி அனுப்புங்கள். அதைவைத்து உங்களுக்கு 'அட்வான்ஸ்' தொகையை மொத்தமாக அனுப்பிவிடுவேன்" என்று கூறி, ஒரு 'லிங்க்'-கை அனுப்புவான். அந்த 'லிங்க்' வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கு விவரங்களை திருடிவிடும் 'மால்வேர்' ஆகும். அதையும், உரிமையாளர் சொல்லும் தகவல்களையும் வைத்து வீட்டு உரிமையாளரின் வங்கி சேமிப்பு முழுவதையும் கொள்ளை அடித்துச் செல்கிறது இந்த 'சைபர்' கிரிமினல் கும்பல்.

    இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்கவேண்டுமானால், 'ஜிபே', 'பேடிஎம்' போன்ற 'யு.பி.ஐ.' 'பேமெண்ட்' செயலிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள். 'பேமெண்ட்' செயலிகளின் 'பாஸ்வேர்ட்', 'கியூ.ஆர்' குறியீடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். நீங்கள் வீட்டு உரிமையாளராக இருந்தால், வாடகைக்கு வருபவரை நேரில் பார்க்காமலும், அவரது சுய விவரங்களை சோதிக்காமலும் 'ஆன்லைன்' முறையில் பணம் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம்.

    முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி

    • எந்த வங்கியும் தொலைபேசி மூலம் உங்களுடைய முக்கியமான விவரங்களை கேட்க மாட்டார்கள்.
    • உங்களுக்கு வங்கியில் இருந்து வரும் எஸ்எம்எஸ்யை தடை செய்யாதீர்கள்.

    டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மக்கள் ஏமாந்து போவதற்கு மிக முக்கியமான காரணங்கள், அறியாமை, பேராசை, பயம் அல்லது பதட்டம் ஆகியவை தான் என்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் டிஜிட்டல் துறை பொது மேலாளர், லட்சுமி வெங்கடேஷ். மேலும் அவர்கள் கூறியது பின்வருமாறு:-

    நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும்போது அதன் அடிப்படை என்ன, எந்தெந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், என்பது அவசியம்.

    உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்து உள்ளது, உங்களுக்கு வேண்டுமானால் நாங்கள் அனுப்பியுள்ள இணைப்பை நீங்கள் கிளிக் செய்து மேற்கொண்டு நாங்கள் கேட்கும் விவரங்களை கொடுத்தால், உங்களுக்கு அந்த பரிசு கிடைக்கும் என்று சொல்கிறார்கள் அல்லது வங்கியில் இருந்து அழைப்பது போலவும் அல்லது எலக்ட்ரிசிட்டி டிபார்ட்மெண்டில் இருந்து அழைப்பது போலவோ அழைத்து நீங்கள் இந்த விவரங்களை உடனடியாக கொடுக்காவிட்டால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் அல்லது உங்களுடைய ஏடிஎம் கார்டு முடக்கப்படும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து நம்மை பயமுறுத்துகிறார்கள். இந்த சந்தர்ப்பங்களில் நாம் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும்.

    டெபிட் கார்டின் பின்னாலேயே அதற்கு உண்டான பாஸ்வேர்டு என்ன என்று நாம் எழுதி வைக்கிறோம் அல்லது மொபைல் போனில் விபரங்களை சேமித்து வைக்கிறோம் அல்லது நண்பர்கள் யாருக்காவது நாம் வாட்ஸப் மூலமாக அனுப்புகிறோம். இது எல்லாமே தவறு. உங்கள் மொபைல் காணாமல் போய் தீயவர்கள் கைகளில் கிடைத்தால் இந்த விவரங்களை அவர்கள் மிகவும் எளிதாக தவறான வழியில் பிரயோகித்து உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து எல்லா பணத்தையும் எடுக்க முடியும்.

    முக்கியமாக பொதுவெளியில், ரயில்வே ஸ்டேஷன் அல்லது பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வைபை உபயோகித்து எந்த விதமான பணப்பரிவினை செய்யக்கூடாது. நீங்கள் அங்கே பொது வெளியில் உள்ள வைபை உபயோகித்து பொழுதுபோக்கு அம்சங்களை பார்க்கலாம். பொதுவெளியில் உள்ள வைபை மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஏனென்றால் பொது வெளியில் உங்களுடைய வங்கி கணக்கின் சம்பந்தப்பட்ட விவரங்கள் சேகரிக்கப் படலாம்.

    ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்கும் போதோ நீங்கள் ஒரு புதிய இடத்துக்கு சென்றாலோ அல்லது சுற்றுலா தலங்களுக்கு சென்றாலும், அந்த இடங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை க்ளோனிங் செய்யக்கூடிய ஸ்கின்னிங் என்று சொல்லப்படக்கூடிய ஒரு கருவியை பொருத்தி உங்களுடைய கார்டு விவரங்களை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகவே நீங்கள் சுற்றுலா தலங்களில் எப்போதெல்லாம் ஏடிஎம் கார்டு உபயோகிக்கிறீர்களோ உடனடியாக அதனுடைய பின் நம்பரை நீங்கள் மாற்றிவிட்டால் உங்களுக்கு பாதுகாப்பு அதிகமாகும்.

    உங்கள் கணக்கில் ஏதேனும் தவறான பரிவர்த்தனை யாராவது செய்தால் உங்களுக்கு எஸ்எம்எஸ் வங்கியில் இருந்து அனுப்பப்படும். நீங்கள் எஸ்எம்எஸ் வசதியை டிஆக்டிவேட் செய்து வைத்திருப்பீர்களே ஆனால் உங்களுக்கு அந்த எஸ்எம்எஸ் கிடைக்காது. பணம் பறிபோன பின்னர்தான் உங்களுக்கு அந்த விஷயம் தெரிய வரும். எனவே உங்களுக்கு வங்கியில் இருந்து வரும் எஸ்எம்எஸ்யை தடை செய்யாதீர்கள்.

    நீங்கள் பணம் பெறுவதற்கு எந்த காரணத்தை கொண்டும் யு பி ஐ பின் நம்பரை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் பணம் பெறுவதற்காக இதை கேட்பார்கள் அதை கொடுத்தவுடன் உங்களுடைய பணம் பறிபோய்விடும்.

    உங்களுடைய மொபைல் தொலைந்து விட்டால் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கையே நீங்கள் முடக்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் கணக்கில் எந்த பரிவர்த்தனம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உங்களுடைய இமெயில் முகவரி ஏதாவது இருந்தால் அந்த ஈமெயில் முகவரிக்கான பாஸ்வேர்டு உடனடியாக மாற்றிவிடவும்.

    எந்த வங்கியும் தொலைபேசி மூலம் உங்களுடைய முக்கியமான விவரங்களை கேட்க மாட்டார்கள். உங்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுக்காமல் எந்த வங்கியும் உங்களுடைய கணக்குகளையும் உங்களுடைய டெபிட் கார்டை முடக்க முடியாது.

    நீங்கள் டிஜிட்டல் வழியாக ஏமாற்றப்படும் போது உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக அழைத்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அது தேசிய சைபர் கிரைம் தொடரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு எவ்வளவு விரைவில் அந்த பணம் எங்கிருந்து எந்த கணக்கு சென்று அங்கிருந்து வேறு எந்த கணக்கு சென்றாலும் அந்த தொடரில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் உடனடியாக அரசாங்கமே முடக்கிவிடும். என்று கூறி முடித்தார்.

    • ஆபாசப் படங்களை பார்க்கும்போது ‘பாப்-அப்’ ‘வார்னிங்’ வந்தால், இதை செய்து மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.
    • மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு, ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பதுதான் மிகச் சிறந்த வழி.

    இணைய பயன்பாடு இல்லாமல் இனி மனித வாழ்க்கையே சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகி வருகிறது. அதற்கேற்ப 'ஆன்லைன்' மோசடிகளும் புதுப்புது அவதாரம் எடுத்து வருகின்றன. அந்தவகையில், ஆபாச இணையதளங்களை பார்ப்பவர்களிடம் பணம் பறிக்கும் 'பிரவுசர் லாக்' என்ற புதிய மோசடி பற்றி எச்சரிக்க விரும்புகிறேன்.

    டெல்லியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விஷ்வா, ஆபாச 'வெப் சீரிஸ்' ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தபோது, "ஆபாச படத்தை பார்ப்பது சட்டவிரோதமானது" என்ற 'திடீர்' எச்சரிக்கை அவரது கம்ப்யூட்டர் திரையில் வந்தது. அவர் குற்ற உணர்ச்சியில் திகைத்து நின்ற அடுத்த நொடியில், "நீங்கள் உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டும்" என்று எச்சரிக்கை வந்தது. 'அபராதம்' செலுத்துவதற்கான 'யூ.பி.ஐ.' 'பேமெண்ட்' மற்றும் 'கியூ.ஆர்.' குறியீடு விவரங்களும் அதில் இருந்தன. இந்திய சட்ட அமைச்சகத்தின் அறிவிப்பு போன்ற தோற்றத்தில் இந்த அறிவிப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

    விஷ்வாவுக்கு லேசாக சந்தேகம் ஏற்படவே அந்த இணைய முகவரியை சரிபார்த்து, அது போலி என்பதை கண்டுபிடித்தார். இதேபோன்ற அனுபவம் அவரது நண்பர்களுக்கும் ஏற்பட்டதால், அவர்கள் கூட்டாக சேர்ந்து 'சைபர்' கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், கம்போடியாவை தலைமையகமாகக்கொண்டு செயல்படும் ஒரு 'சைபர்' கிரிமினல் கும்பலின் வேலை இது என்பதை கண்டறிந்தனர். கடந்த 6 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து ஏராளமான பணத்தை இந்த கும்பல் கொள்ளையடித்திருந்ததை கண்டறிந்தனர். இந்த கும்பல், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணத்தை பெற்றதை கண்டறிந்த போலீசார், இங்கு வந்து விசாரணை செய்து உள்ளூர் மூளையாக செயல்பட்டவனையும் உடன் இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

    இந்த வகை நூதன மோசடி குறித்த 'ஸ்க்ரீன் ஷாட்'டை பகிர்ந்துள்ள 'சைபர்' பாதுகாப்பு நிபுணர் ராஜசேகர் ராஜஹரியா இதுதொடர்பான விரிவான எச்சரிக்கையை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். ஆபாச தளங்களை பார்த்துக்கொண்டிருப்பவர்களின் திரையை மறைத்தது போல திடீரென போலியான 'பாப்-அப்' ஒன்று தோன்றும். இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட ஆபாச படங்களை 'ஆன்லைனில்' பார்த்ததால், உங்களது 'பிரவுசர் ' முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கும். அந்த 'பாப்-அப்', பார்ப்பதற்கு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில், இந்திய தண்டனைப்பிரிவு 173-279 ஆகியவற்றின் கீழ் உங்களது கணினி செயல்பாடு முடக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கும்.

    மேற்கண்ட தகவல்களை பார்த்து அதிர்ச்சியடையும் பயனர்கள் செய்வதறியாது திகைத்து நிற்பார்கள். இந்த அதிர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அந்த 'சைபர்' கிரிமினல் கும்பல், முடக்கப்பட்ட கணினியை 'ஆன்லாக்' செய்வதற்கு உடனடியாக ரூ.29 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என அந்த 'பாப்-அப்' மூலமாகவே தெரிவிப்பார்கள். என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் பயனர்களை தங்களது வழிக்கு கொண்டு வரும் வகையில், "நீங்கள் 6 மணி நேரத்துக்குள் அபராத தொகையை செலுத்தத் தவறினால், உங்கள் கணினி பயன்பாடு குறித்த விவரங்கள் இந்தியாவின் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உங்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிப்பார்கள்.

    தொடர்ந்து, அதில் அபராத தொகையை செலுத்துவதற்கான விவரங்களையும் கொடுப்பார்கள். 'விசா' அல்லது 'மாஸ்டர்' கார்டுகளை பயன்படுத்தி பயனர்கள் கட்டணம் செலுத்தலாம் என்ற தகவல் அதில் இடம்பெறும். தனிமையில் ஆபாசப் படம் பார்க்கும் பயனர்களின் பதற்றத்தை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிக்கும் இந்த புதுவகை 'சைபர்' கிரிமினல் கும்பல்களிடம் ஏமாறவேண்டாம் என்று ராஜசேகர் ராஜஹரியா குறிப்பிட்டுள்ளார்.

    ஆபாசப் படங்களை பார்க்கும்போது இதுபோன்ற 'பாப்-அப்' 'வார்னிங்' வந்தால், அதனை உடனடியாக 'க்ளோஸ்' செய்து இந்த மோசடியில் இருந்து தப்பிக்கலாம். ஒருவேளை அந்த 'பாப்-அப்' பிரவுசரை 'க்ளோஸ்' செய்ய முடியவில்லை என்றால், 'ctrl+alt+delete' செய்து அந்த பிரவுசரின் செயல்பாட்டை நிறுத்திவிடலாம். இந்த முறைகள் எதுவும் உங்களுக்கு உதவாத பட்சத்தில், கணினியை 'ஷட் டவுன்' செய்து, இந்த மோசடியில் இருந்து தப்பிவிடலாம். இதுபோன்ற மோசடியில் நீங்கள் ஒருபோதும் சிக்காமல் இருப்பதற்கு, ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பதுதான் மிகச் சிறந்த வழி.

    ஆபாசப் படங்களை பார்க்கும்போது 'பாப்-அப்' 'வார்னிங்' வந்தால், அதனை 'க்ளோஸ்' செய்யலாம். அது முடியவில்லை என்றால்,

    'ctrl+alt+delete' செய்து அந்த பிரவுசரின் செயல்பாட்டை நிறுத்திவிடலாம். இந்த முறைகள் உதவாத பட்சத்தில், கணினியை 'ஷட் டவுன்' செய்து, மோசடியில் இருந்து தப்பிவிடலாம். இதுபோன்ற மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு, ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பதுதான் மிகச் சிறந்த வழி.

    முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி

    • தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர்.
    • பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும்.

    சென்னை :

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை 'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:-

    ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளது. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பெரிய அதிகாரி, கலெக்டர், டி.ஜி.பி. போன்றவர்கள் செல்போனில் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன். அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன்.' என்று கூறுவார்கள்.

    நீங்கள் பரிசு கூப்பன் வாங்க தெரியாது என்று சொன்னால், அந்த லிங்கை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் ரூ.1 லட்சத்துக்கு 10 கூப்பன் வாங்கி அனுப்பினால், அடுத்து உங்களுக்கு இந்த கூப்பன் போதாது. இன்னும் 20 பரிசு கூப்பன் கூடுதலாக வேண்டும் என்று குறுந்தகவல் வரும். இப்படி 50 கூப்பன் என்று சொன்னால் ரூ.5 லட்சம் ஆகும். இதெல்லாம் முடிந்த பின்னர், எங்கள் அதிகாரி இப்படி கேட்க மாட்டார். நான் ஏமாந்துவிட்டேன் என்பது உங்களுக்கு தெரியும்.

    இதுபோன்ற மோசடி நடைபெற்றால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். காவலன் உதவி செயலியை உங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய் விடும். இதன் மூலம் உங்களுடைய பணத்தை காப்பாற்றி கொள்ளலாம்.

    தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு 'பாஸ் ஸ்கேம்' என்று பெயர் ஆகும். உங்களுக்கு வரும் அழைப்பை பார்த்தால் உங்கள் அதிகாரி பெயர், புகைப்படம், எண் போன்றே இருக்கும். ஆனால் அது அவர்கள் கிடையாது. எனவே மோசடி பேர்வழி தான் நம்மை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எனவே இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் விழுந்து உங்கள் பணத்தை இழந்துவிடாதீர்கள். பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    • தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை மக்கள் ஏற்க வேண்டாம்.
    • பல போலி ஆன்லைன் மார்க்கெட் செயலிகள் உலாவுகின்றன.

    ஆன்லைனில் எந்த பொருட்களுக்காவது விண்ணப்பிக்கும் முன்பும் அல்லது ஏதேனும் இணைப்பை கிளிக் செய்யும் போதும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை மக்கள் ஏற்க வேண்டாம்.

    இவ்வாறு அழைக்கும் எண்களில் பெண்கள் ஆபாசமாக தோன்றி எதிரில் இருப்பவர்களுடன் பேசுகின்றனர். பின்னர் இந்த வீடியோவை வைத்து போலீஸ் அதிகாரிகள் போல மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

    எனவே இதுபோன்ற அழைப்புகளை ஏற்கவேண்டாம். மீண்டும், மீண்டும் அதுபோன்ற அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை போனில் தடை செய்யவேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

    இதேபோல் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கைகளையும் ஏற்க கூடாது.

    மோசடி செய்பவர்கள் பெண்களின் புகைப்படங்களை போலியாக பயன்படுத்தி, தங்கள் வலையில் விழும் நபர்களிடம் நெருக்கமாக பேசி நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் தங்களுக்குள் நடந்த அந்தரங்க பேச்சுகளை வைத்து போலீசில் புகார் செய்ய போவதாக மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்கின்றனர்.

    இதேபோல மின்கட்டண நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி அவர்களிடம் பணத்தை அபேஸ் செய்கின்றனர். இதுபோன்ற 400-க்கும் மேற்பட்ட புகார்கள் எங்களுக்கு வந்துள்ளது. இதுபோன்று அழைப்பவர்களுக்கு எந்த ஒரு பண பரிவார்த்தனையும் செய்வதற்கு முன்பு மின் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பிரிவை தொடர்புகொண்டு உண்மை தன்மையை அறிந்துகொள்வது நன்மை பயக்கும்.

    கடன் வழங்கும் செயலிகளின் முகவர்கள் துன்புறுத்தல் காரணமாக சமீப காலமாக மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளது.

    இதுபோன்ற கடன் செயலிகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் அவர்களில் பலர் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். கடன் பெற அவர்கள் வங்கிகளை அணுக வேண்டும்.

    இதேபோல ஆன்லைன் மார்க்கெட் மூலமாக பொருட்கள் வாங்கும்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில் பல போலி ஆன்லைன் மார்க்கெட் செயலிகள் உலாவுகின்றன. எனவே பொருட்களை வாங்கும்போதோ விற்பனை செய்யும்போதோ இவைகள் மூலம் பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் வாங்குபவர்கள், விற்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். பொருளை வாங்கும்போது பணம் செலுத்த வேண்டும்.

    ஆன்லைனில் செல்போன் வாங்கியவரிடம் நூதன முறையில் ரூ.2¾ லட்சத்தை ேமாசடி செய்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மும்பை:

    நவிமும்பையை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் சமீபத்தில் ஆன்லைனில் ரூ.18 ஆயிரத்து 549-க்கு கிரெடிட் கார்டை பயன்படுத்தி புதிய செல்போன் வாங்கினார். இந்தநிலையில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து 2 முறை ரூ.18 ஆயிரத்து 549 எடுக்கப்பட்டு இருப்பதை பின்னர் அவர் தொிந்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கியில் முறையிட்டுள்ளார். அப்போது வங்கி ஊழியர் சில நாட்களில் தவறுதலாக எடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிடும் என்றார்.

    அதே நேரத்தில் பணம் விரைவாக கிடைக்க சம்மந்தப்பட்ட ஆன்லைன் வணிக நிறுவனத்தையும் தொடா்பு கொள்ளுமாறு கூறினார்.

    இதையடுத்து அந்த நபர் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை இணையத்தில் தேடினார். அப்போது அவர் இணையத்தில் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் தொடர்பு எண்ணை எடுப்பதற்கு பதிலாக, ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் போலியாக பதிவு செய்யப்பட்டு இருந்த மோசடி ஆசாமியின் எண்ணை எடுத்து தொடர்பு கொண்டார்.

    இதில் மோசடி ஆசாமி 55 வயது நபரின் கிரெடிட் கார்டில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை திருப்பி தருவதாக கூறி, ஒரு செயலியை அவரை பதிவிறக்கம் செய்ய வைத்தார். பின்னர் அந்த செயலி மூலமாக மோசடி ஆசாமி, அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 783 மற்றும் கிரெடிட் கார்டில் இருந்த ரூ.63 ஆயிரத்து 325-ஐ அபேஸ் செய்தார்.

    இந்தநிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் சம்பவம் குறித்து நவசேவா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ×