என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nandi"
- தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.
- சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.
பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிர்ந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.
காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவாதர் நிலத்தை உழும்போது தங்கப்பேழை ஒன்றைக் கண்டார். அதில் தங்க விக்ரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவாதர் காதில் சிவபெருமான் ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களைக் கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்டு நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசரீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.
நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமான குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவர் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.
இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.
- நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம்.
- நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன.
சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர்.
நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.
சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார்.
நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ
என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.
- சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் நந்தி.
- நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன.
சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர், நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இதனை 'பஞ்ச நந்திகள்' என்பார்கள். அது பற்றி இங்கே பார்க்கலாம்.
போக நந்தி
ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். இவனே போக நந்தி ஆவான். போகநந்தி அல்லது அபூர்வ நந்தி என்று அழைக்கப்படும் இந்த நந்தியானது, கோவிலுக்கு வெளியே அமைந்திருக்கும்.
பிரம்ம நந்தி
பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். இதனை `பிரம்ம நந்தி' என்பார்கள். இந்த நந்தி, சுதைச் சிற்பமாக பிரகார மண்டபத்தில் காணப்படும்.
ஆன்ம நந்தி
பிரதோஷ கால பூஜையை ஏற்கும் நந்தியையே, 'ஆன்ம நந்தி' என்கிறோம். இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.
மால்விடை
மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இந்த நந்தியானது, கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.
தரும நந்தி
இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழிகாலத்தின் முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.
பழமும், பூவும், நெய்யும், குண்டலங்களும் கொடுத்ததுடன் வேதியர்களையும் அனுப்பி திருமணத்தை சிறப்பாக நடத்த உதவினர். இப்படி திருமணம் நடத்தி சிறப்பித்தவர்களக்கு நன்றி கூறினார் நந்திதேவர். இந்த நன்றி கூறும் திருவிழாவிற்கு ஏழூர் பெருவிழா எனப்பெயர்.
ஏழு ஊர்களுக்கும் சென்று நன்றி கூறி, அவர்களின் மரியாதைகளை ஏற்றபின், இரு பல்லக்குகளுடன் அந்த ஏழு ஊர்களின் பெருமான்களும் பிராட்டியும் உடன் வந்த திருவையாறு அடைவார்கள். பின் எல்லா ஊர்பெருமான்களும் கல்யாண தம்பதிகளிடமும் பிரபஞ்ச தம்பதிகளிடமும் (சிவ-பார்வதி) விடை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர் போய்ச் சேருவார்கள்.
முதல் ஊர் திருப்பழனம், அடுத்து திருச்சோற்றுத் துறை, தொடர்ந்து திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், இறுதியாக திருவையாறு என ஏழு ஊர்களுக்கும் செல்வது தான் இவ்விழா.
இந்த ஊர்வலத்துடன் பக்தர்கள், இசை வித்வான்கள், நடனக்காரர்கள், நாயனக்காரர்கள் எல்லாரும் போவார்கள். எல்லா இடங்களிலும் இசை, நாதஸ்வரம், குசல விசாரிப்புகள், விருந்து உபசாரம் கேளிக்கை, கொண்டாட்டம் என உற்சாகமாகவும் கோலா கலமாகவும் இவ்விழா நடைபெறும்.
வெள்ளை நிறம் கொண்ட அவர், தூய்மைக்கும், அறத்திற்கும் உரியவர் ஆவார். சிவபெருமானின் வாகனமாக நந்தி விளங்குகிறார். கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை யார் ஒருவர் பார்க்க வேண்டும் என்றாலும், அதற்கான முன் அனுமதியை நந்தியிடம் பெற வேண்டியது அவசியம்.
அந்த முறை தான், தற்போது கோவில்களிலும் உள்ளது. சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பாக நந்தி வைக்கப்பட்டிருப்பதன் காரணம் இது தான். நந்தியை வழிபட்டு அனுமதி வாங்கிய பிறகே, கருவறையில் இருக்கும் சிவபெருமானை தரிசிக்கச் செல்ல வேண்டும்.
இந்திர நந்தி
வேத நந்தி
ஆத்ம நந்தி
மால்விடை நந்தி
தரும நந்தி
ஆகியவைதான் அவை.
இவைகளில், இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர்.
வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும், சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைக்கின்றனர்.
ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது. இதற்கே, பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணுத்துள் அமைகிறது.
தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ
சிவனின் வாகனமும், சிறந்த ஞானியும் ஆன நந்தி பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த நந்தி ஸ்லோகத்தை தினமும் இது. குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடலாம். மாத சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி ஆகிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை இந்த ஸ்லோகத்தை கொண்டு 9 முறை துதித்த பின்பு சிவபெருமான் மற்றும் பார்வதியை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, உங்களின் கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார் நந்தி பகவான்.
இந்த ருத்ராபிஷேகத்தின் போது 500 லிட்டர் பால், 200 லிட்டர் தயிர், 100 லிட்டர் தேன், திவ்ய, திரவிய பொருட்கள் என 47 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிறப்பு அலங்காரம், பூஜையும் நடத்தப்படுகிறது.
இந்த தகவலை நந்தி மகா ருத்ராபிஷேக குழு தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
3 முறை பிரதட்சணம் செய்தால் - நாம் விரும்பும் இஷ்ட சித்தி கிடைக்கும்.
5 முறை பிரதட்சணம் செய்தால் - எடுத்த காரியத்தில் ஜெயம் கிடைக்கும்.
7 முறை பிரதட்சணம் செய்தால் - அனைவரும் போற்றக் கூடிய சற்குணங்கள் கிடைக்கும்.
9 முறை பிரதட்சணம் செய்தால் - உலகம் மெச்சும் புத்திரப் பிராப்தம் கிடைக்கும்.
11 முறை பிரதட்சணம் செய்தால் - நோய் நொடி இல்லாத ஆயுள் விருத்தி கிடைக்கும்.
13 முறை பிரதட்சணம் செய்தால் - எண்ணிய பிரார்த்தனை சித்தி அடையும்.
15 முறை பிரதட்சணம் செய்தால் - கணக்கில்லா தனப்பிராப்தி கிடைக்கும்.
17 முறை பிரதட்சணம் செய்தால் - கிடைத்த தனம் விருத்தி அடையும்.
108 முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.
1008 முறை பிரதட்சணம் செய்தால் - ஒரு வருட தீட்சையாகப் பலன் கிடைக்கும்.
அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனையே நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். இறை தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நந்தியின் கர்வத்தை அடக்கும் நேரமும் வந்தது. இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார்.
அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஏனென்றால் இறைவன் அப்போது நந்தியுடன் இருந்தார். ஆனால் ஆணவம் உண்டாகி, இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியின் பாரம் கூட தாங்க முடியவில்லை.
தனது வல்லமையின் மீது கர்வம் கொண்டிருந்த நந்தீஸ்வரரும் தனது தவறை உணர்ந்து கர்வம் நீங்கினார். அவனன்றி இவ்வுலகில் எது அசையும்!
* ‘நந்தி’ என்பதற்கு ‘மகிழ்ச்சியைத் தருபவர்’ என்று பொருள். ஈசனை வழிபடுவதற்கு, பக்தர்களுக்கு அனுமதி கொடுத்து மகிழ்ச்சியை வழங்குபவர் என்பதால் இந்தப் பெயர்.
* கயிலாயத்தின் வாசலை காவல் காப்பவர் நந்தி பகவான். இவரிடம் அனுமதி பெற்றுதான், கயிலையில் வீற்றிருக்கும் ஈசனைப் பார்க்க முடியும். அதே வழிமுறையைதான் நாம் சிவாலயங்களிலும் பின்பற்றுகிறோம். முதலில் நந்தியை வணங்கிய பிறகே, மூலவரை வணங்க வேண்டும்.
* பிரதோஷ காலங்களில் நந்தீஸ்வரருக்குத் தான் முன்னுரிமை. ஆலகால விஷத்தை அருந்திய ஈசன், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிந்தார். அது ஒரு பிரதோஷ வேளையாகும். எனவேதான் பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. பிரதோஷங்களில் தவறாது கலந்து கொண்டு நந்தியை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
* நாகப்பட்டினம் மாவட்டம் ஆத்தூரில் மந்தாரவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இங்கு நந்தியம்பெருமான், சிவபெருமானை பூஜை செய்யும் அற்புதக் காட்சியை தரிசிக்கலாம்.
* தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நந்தி என்று சொன்னால், அது தஞ்சை பெரியகோவிலான பிரகதீஷ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லில் வடிக்கப்பட்டது.
* ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல் நந்தியே, இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கருங்கல் நந்தி என்று கூறப்படுகிறது.
* சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் ஆதிபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்கு பிரமாண்டமான அதிகார நந்தி வாகனம் இருக்கிறது.
* அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இதன் கிரிவலப்பாதையின் ஒரு பகுதியில் மலையில் நந்தி படுத்திருப்பது போன்ற உருவம் தென்படும். இதனை ‘நந்தி முக தரிசனம்’ என்று அழைக்கிறார்கள்.
* திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ‘ஜோதி நந்தி’ உள்ளது. இதன் முன்பாக தீபம் ஏற்றி, மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
* மதுரை ஆவணி மூல வீதியில் ‘மாக்காளை’ என்று அழைக்கப்படும், சுதையால் வடிக்கப்பட்ட பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. இதுபோன்ற மாக்காளை நந்திகளை, திருநெல்வேலி, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களிலும் காண முடியும்.
* கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
* மராட்டிய மாநிலம் புனேயில் கருவறை நந்தி என்ற நந்திக் கோவில் இருக்கிறது.
* மைசூர் பகுதியில் உள்ள சாமுண்டி மலை மீது காணப்படும் நந்தி, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது.
* திருவாரூர் தியாகராஜர் கோவிலில், ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் கோலத்தில் நந்தி காணப்படுகிறது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
* திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக திகழ்ந்தவர் நந்தியம்பெருமான். திருமூலருக்கு இவர்தான், வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.
* கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி மலை உள்ளது. இந்த மலையே பெண்ணாறு, பாலாறு, பொண்ணையாறு ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறதாம். கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் பழமை வாய்ந்த நந்தி கோவில் ஒன்றும் உள்ளது.
* சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரபாதர், திருமூலம் ஆகிய 8 பேரும் நந்தியம் பெருமானின் சீடர்கள் ஆவர்.
* நந்தியம்பெருமானின் வரலாற்றைப் பற்றி லிங்க புராணம் விளக்கமாக எடுத்துரைக்கிறது. சிவபெருமானே, நந்தியம்பெருமானாக பிறந்து, கணங்களில் தலைவராக மாறினார் என்றும் கூறப்படுகிறது.
* தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றி வைத்தவராக, நந்திகேஸ்வரர் என்ற பெயரில் ஒரு முனிவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
* சிவபெருமான் நாட்டியக் கலையை பிரம்மாவுக்கு கற்றுக் கொடுக்க, அதனை அறிந்த நந்தியம்பெருமான், அந்த நாட்டியக் கலையை பரத முனிவருக்கு போதித்ததாக அபிநய தர்ப்பணம் என்ற நூல் கூறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்