search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagaraja Temple"

    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் நாக வழிபாட்டுக்கு சிறந்த ஸ்தலமாக திகழ்கிறது. நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் நாக வழிபாட்டுக்கு சிறந்த ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைக்கு தனி சிறப்பு உண்டு. அன்றைய தினம் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமியை வழிபடுவார்கள்.

    அதே போல இந்த ஆண்டும் ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டனர். அதிலும் நேற்று ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் நாகராஜருக்கு அபிஷேகங்கள் தொடங்கின. கோவில் நடை திறப்பதற்கு முன்பாகவே ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவிலில் குவிந்தனர். வெளியூர் பக்தர்கள் நேற்றுமுன்தினம் இரவே கோவிலுக்கு வந்துவிட்டனர். சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்து இருந்தனர்.

    நாகராஜா கோவிலில் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனால் நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் வழக்கமான நேரத்தில் கோவில் நடை அடைக் கப்படவில்லை. பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பிறகே நடை அடைக்கப் பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    நாக வழிபாட்டுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு நாகராஜர் குடியிருக்கும் மூலஸ்தானம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். கோவிலில் பிரசாதமாக மண் வழங்கப்படுகிறது. இந்த பிரசாத மண் 6 மாதம் கருப்பாகவும், 6 மாதம் வெள்ளையாகவும் இருக்கிறது. இவ்வளவு சிறப்புகள் இருப்பதால் நாகராஜரை தரிசனம் செய்ய குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்றால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை அன்று நாகராஜரை தரிசித்தால் சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில் ஆவணி மாத 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவிலில் குவிந்த பக்தர்கள் முதலில் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு வரிசையாக நின்று பால் ஊற்றி அபிஷேகம் செய்தும், மஞ்சள் வைத்தும் வழிபட்டனர். அதோடு அங்கு அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நாகராஜரை தரிசனம் செய்ய ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை நேற்று கோவிலின் நுழைவு வாயிலையும் தாண்டி வெளியே உள்ள ரத வீதி வரை நீண்டு இருந்தது. வெகு நேரம் காத்திருந்து நாகராஜரை வழிபட்ட பின் சிவன், துர்க்கை அம்மன், முருகன் ஆகிய தெய்வங்களையும் பக்தர்கள் வழிபட்டார்கள்.

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி யாரேனும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
    நாக வழிபாட்டுக்கு உகந்த கோவிலாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் கருதப்படுகிறது. இந்த கோவில் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் திகழ்கின்றது. இங்கு நீருற்றில் இருந்து எடுக்கப்படும் மண் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மண் 6 மாதங்கள் கருப்பாகவும், 6 மாதங்கள் வெள்ளையாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜரை தரிசனம் செய்ய கோவிலில் பக்தர்கள் குவிவார்கள். அதிலும் ஆவணி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு தனி சிறப்பு உண்டு. அதாவது ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாகராஜரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே போல ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டும் இன்றி நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து சாமியை தரிசனம் செய்தார்கள். பெரும்பாலும் கேரள பக்தர்களே அதிகமாக காணப்பட்டனர்.

    இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. கோவில் நடை திறப்பதற்கு முன்பே அங்கு பக்தர்கள் வரிசையில் காத்து இருந்தனர். மூலஸ்தானத்தில் இருந்து கோவிலின் வெளியே உள்ள நுழைவு வாயில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து சாமியை தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு பிரசாதமாக பால் பாயாசம் வழங்கப்பட்டது.

    நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி உள்ள நாகர் சிலைகளை வழிபடுவது வழக்கம். அதே போல நேற்றும் அலைமோதிய பக்தர்கள் முதலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து,. பின்னர் மஞ்சள் தூவியும் வழிபட்டனர். மேலும் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை வணங்கிய பிறகு நாகராஜரை தரிசனம் செய்யச் சென்றனர்.

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவிலின் மூலஸ்தானம் வரையும் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். மேலும் அறநிலையத்துறை நிர்வாகிகளும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அதோடு மட்டும் அல்லாது கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவிலில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு இருந்தன. கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவில் ரத வீதியில் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 
    ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
    உலகம் முழுவதும் நாக வழிபாடு பிரபலமாக இருக்கிறது. நாக வழிபாட்டுக்கு பல கோவில்கள் இருந்தாலும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. நாகராஜா கோவிலில் மூலஸ்தானம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். இங்கு நீருற்றில் இருந்து எடுக்கப்படும் மண் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் மண் 6 மாதங்கள் கருப்பாகவும், 6 மாதங்கள் வெள்ளையாகவும் இருக்கும்.

    இதுபோன்ற பல சிறப்புகளை கொண்ட நாகராஜா கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. ஆவணி மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாகராஜா கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் ஆவணி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலையிலேயே கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். மேலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.

    அவர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி உள்ள நாகர் சிலைகளை வழிபட்டார்கள். அப்போது நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் அபிஷேகம் செய்தனர். சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து வழிபாடு செய்தனர்.

    நாகராஜா கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.


    அதைத் தொடர்ந்து நாகர் சிலைகளுக்கு நடுவே அமைந்துள்ள விநாயகரை வணங்கிவிட்டு நாகராஜரை தரிசிப்பதற்காக சென்றார்கள். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் நீண்ட வரிசை உருவானது. நாகராஜரை வணங்குவதற்காக வெகு நேரம் வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தர்களாக மூலஸ்தானத்துக்குள் சென்றனர். நாகராஜரை வேண்டி வணங்கியதோடு இடப்புறம் இருக்கும் சிவனையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு அங்கு புல்லாங்குழலுடன் காட்சி அளிக்கும் கிருஷ்ணரை வணங்கிவிட்டு நேராக துர்க்கை அம்மன் சன்னதிக்கு பக்தர்கள் வந்தனர். பின்னர் துர்க்கை அம்மனுக்கு குங்குமமிட்டு தரிசனம் செய்தனர்.

    ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையை காட்டிலும் நேற்று நாகராஜா கோவிலில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த மரக்கம்புகளை கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    கோவிலின் மூலஸ்தானம் வரையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்தது.ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி வெளிப்புறத்தில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு நாகராஜா கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. 
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் ஆவணி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் லைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. நாகராஜரை ஞாயிற்றுக்கிழமை வழிபட்டால் நினைத்தது கைகூடும் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு. இதனால் ஆவணி மாத ஞாயிறன்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் நேற்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை பூஜைக்கே பக்தர்கள் குவிந்து விட்டனர். பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக இருபக்கமும் கம்புகளால் கட்டப்பட்டு பாதை உருவாக்கப்பட்டிருந்தன.

    நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.


    எனவே இதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் அரச மரத்துக்கு அடியில் ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். விநாயகர் சன்னதியை சுற்றிலும் நாகர் சிலைகள் அருகருகே வரிசையாக உள்ளன.

    இந்த நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட்ட பிறகு விநாயகரை வணங்கினால் தோஷம் தீரும் என்று பக்தர்களால் கூறப்படுகிறது. எனவே நேற்று கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட்டனர்.

    பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க நாகராஜா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
    ×