search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ministerial speech"

    • தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் பேசினர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.

    பின்னர் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:-

    மாவட்டத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உதவும் சங்கங்கள் அமைத்து அதன்மூலம் பொது மக்களுக்கு உதவலாம் என்ற அடிப்படையிலும் மற்றும் ஒன்றிணைந்து அந்த உதவும் சங்கங்களின் பங்களிப்பு தொகையை பதிவு செய்வதன் மூலம் அரசின் சார்பில் வழங்கப்படும் அந்த தொகைக் கான 2 மடங்கு தொகையும் வழங்குவதற்கான வழிவகை யையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி உள்ளார்.

    பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் போன்ற திட்டங்களை அறிவித்து பெண்களின் உரிமையை நிலை நாட்டுகின்ற வகையில் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோன்று தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பராமரிப்பதற்காக முதற்கட்டமாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் 77 பள்ளிவாசல்களில் பராமரிப்புப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற கூட்டத்தொடரின் போது அதனை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுபோன்று சிறுபான்மை யினர் மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத் தப்பட்டு, அவர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    கருணாநிதி வழியில் மக்களுக்கான ஆட்சியை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மை யினர் மக்களின் நலன் காக்கின்ற வகையில் அதற்கான திட்டங்களை அறிவித்து அவர்களின் நலனை காத்து வருகிறார்.

    குறிப்பாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் சிறப்பான நிர்வாகம் முதல்-அமைச்சர் தலைமையில் அரசில் நடைபெற்று கொண்டி ருக்கிறது. தமிழக மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையிலும், அமை தியை நிலைநாட்டுகின்ற வகை யிலும் ஒரு சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 940 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலை வர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழடி அருங்காட்சியகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தொல்லியல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், கீழடி அருங்காட்சியகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    கீழடி அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்கும் வகையில், செட்டி நாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பெருமை சேர்த்துள்ளார்.

    நமது முன்னோர்களான சங்ககால தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிவியல் ரீதியாக எடுத்துச் செல்லும் வகையில், அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா ஆய்வகத்தின் மூலம் அகழ் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற பொருட்களை ஆய்விற்குட்படுத்தப்பட்டது.

    அதில் அந்த பொருட்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே, நமது முன்னோர்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த பயிற்சிக்கென ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1,000 ஆசிரியர்களுக்கு சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், கோவை, தர்மபுரி ஆகிய 9 மண்டலங்களில் பயிற்சி நடத்திடவும் திட்ட மிடப்பட்டு, அதன் முதல் சுற்றாக மதுரை மண்டலத்தில்இந்த பயிற்சி தொடங்கப்பட்டு, வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஆர்வத்தின் அடிப்படையில் தேர்ந்தெ டுக்கப்பட்டு, இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் இந்த பயிற்சியின் வாயிலாக தாங்கள் அறியப்படும் வரலாற்று சிறப்பு அம்சங்கள் குறித்து மாணவ செல்வங்களிடம் எடுத்துரைத்து, தமிழின் பெருமையையும், தமிழர்களின் புகழையும் அறியச்செய்கின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமன்றி இந்த வரலாற்று சிறப்பு அம்சங்களை மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் மாநில அளவில் கல்வி சுற்றுலாவும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, இயக்குநர்கள் அறிவொளி (தொடக்கக்கல்வி இயக்ககம்), லதா (மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்), இணை இயக்குநா்கள் குமார், ஸ்ரீதேவி, ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.

    ராஜபாளையம்

    மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, ஆவின் பால் விலை, சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி,மின் கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்ப டவில்லை. ஆனால் இன்று குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரியையும் உயர்த்தி உள்ளனர்.மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.

    பொதுமக்களின் அன்றாட பிரச்சினை குறித்தும், மின் கட்டண உயர்வு குறித்தும் தெரியாமல் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்ப தமிழன், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவி லான கலைத்திருவிழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சரால் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு வரும் திட்டங்களின் அடிப்படையில், கல்வி பயில்வதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாணவர்களின் திறனை வெளிக்கொணருவ தற்கென தற்போது பள்ளிக்கல்வி துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டார அளவில் பங்கு பெற்றுள்ளனர்.

    இந்த கல்வித்திரு விழாவில் ஒவ்வொரு வகுப்புகளின் பிரிவின் அடிப்படையில் தனிப்போட்டிகளும், குழுப்போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    இதில் முதலிடம் பெறவுள்ள மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    அதில் வெற்றி பெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கல்வி சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புக்களையும் பெற உள்ளனர். இதுதவிர, மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு எனது சார்பிலும், ஊக்கத்தொகையாக முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

    மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கி, எதிர்கால இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பை அளித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் பயில்வது பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிவகங்கை கோட்டையூர் தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்-ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார்அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    தற்போது அரசுப்பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    பெற்றோர்கள் தனியார்பள்ளிகளில் தங்களது குழந்தைகள் கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தினை களைந்து அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட அரசுப்பள்ளியில் 2021-2022-ம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து முதல் பரிசுத்தொகையாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

    விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், மின்வாரியத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை எழுத்தறிவு பயிற்சியை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் மூலம் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்தரத்தில் மிகவும் குறைந்து இருந்தது. இப்பொழுது மாவட்டத்தின் வளர்ச்சி, கல்வியறிவு என அனைத்திலும் முதலிடம் பெறுவதற்கு முதலமைச்சர் வேண்டிய வசதிகளை செய்து தருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதை நிவர்த்தி செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு என ரூ.587 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தவர்கள், அப்படி என்றால் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பிலாமல் வேலைக்கு செல்பவர்கள், கிராமப்பகுதிகளில் உள்ள எழுத படிக்க தெரியாத பெரியவர்கள் என உள்ள அனைவருக்கும் எழுத படிக்க சொல்லி கொடுத்து அவர்களது பெயரை கூட கையொப்பம் இடும் அளவிற்கு படிக்க சொல்லி கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    கடந்த ஆண்டு சுமார் 3.10 லட்சம் பேருக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் என இலக்கும் அதற்கான பயிற்சியையும் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இன்றைக்கு எங்களது முழு முயற்சியின் காரணமாக 3.10 லட்சம் பேரில் இருந்து 3.19 லட்சம் பேருக்கு எழுத படிக்க சொல்லி கொடுத்து உயர்த்திக் காட்டி உள்ளோம்.

    இதுபோன்ற தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிசாரா குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கான இந்த பயிற்சியை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் குப்புசாமி, இணை இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திசைவீரன், திருப்புல்லாணி ஒன்றியக் குழுத்தலைவர் புல்லாணி, மாயாகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×