search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச சைக்கிள்"

    • ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
    • உதயேந்திரம் பேரூராட்சி பள்ளியில் நடந்தது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா தாளாளர் மாறன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் ஆ.பூசாராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆ.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினர்.

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அந்தோணிதாஸ் நன்றி கூறினார்.

    • பிளஸ்-2 வகுப்பு பயிலும் 172 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்களை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார். முதுகலை தமிழாசிரியர் பேச்சியம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் 87 மாணவர்களுக்கும், 85 மாணவிகளுக்கும் மொத்தம் 172 பேருக்கு இலவச சைக்கிளையும், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற 19 மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ், விருதுகளை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் கவுன்சிலர்கள் சித்ராதேவி, அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகமாயி, கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள் வீரகுமார், காசிராஜன், மோகன், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

    • ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரி குட்டி தலைமை தாங்கிளார்.

    சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு 42 மாணவ மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களைவழங்கி பேசினார்.

    இதனை தொடர்ந்து நாகவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில்தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் 27 மாணவர்க ளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்க ப்பட்டது.

    இதில் நெமிலி ஒன்றிய குழு துணைத்த லைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதி அருணாச்சலம் (சிறுணமல்லி), ஆனந்தி பாலசுப்பிர மணியன் (நாகவேடு), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கரி செல்லப்பன், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைஞர்தாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா முன்னிலை வகித்தார். சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்னம் கலந்துகொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

    முன்னதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் மயூரநாதன், நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குலோத்துங்கன், சாரதி, செந்தமிழ்செல்வன், சகிலா விநாயகமூர்த்தி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து நெமிலி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் வழங்கினார்.

    இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் ஜனார்த்தனன், நகர இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நகர கூட்டுறவு வங்கி தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்களை வங்கி தலைவர் அன்பரசு வழங்கினார்.

    முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

    • எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமை ஆசிரியர் கலைபாஸ்கர் தலைமை தாங்கினார். போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிஅண்ணாமலை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இந்த விழாவில் கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 66 மாணவளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.

    இதேபோல் படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை 77 மாணவ மாணவிகளுக்கு கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர் வி சேகர், படவேடு ஆசிரியர் சங்க தலைவர் முருகன், உதவி தலைமை ஆசிரியர் சிங்காரகிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இங்கு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி யில் சிறந்து விளங்க வேண்டும்.
    • மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி நன்கு படித்து முன்னேற வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு அரசு இலவச மிதி வண்டி வழங்கும் திட்டம் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு 158 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகை யில் இந்த பள்ளியில் கடந்த ஆண்டு படித்த சதீஷ்குமார் என்பவர் கோயம்புத்தூர் தனியார் மருத்துவ கல்லூரியிலும், இளங்கோ வன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி யிலும், மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    எனவே இங்கு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி யில் சிறந்து விளங்க வேண்டும்.

    மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி நன்கு படித்து முன்னேற வேண்டும் என்றார்.

    விழாவில் உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், எஸ்.எம்.சி. தலைவி கண்ணகி, முருகன், சிவக்குமார், தமிழ் ஆசிரியர் ஜெயவேல், கோவிந்தம்மாள், ஜெய்சங்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் 59 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை உஷா நிர்மலா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 59 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெஜிகுமாரி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் சற்குரு கண்ணன், ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி டேனியல் ரஞ்சன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடத்தூர் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    கடத்தூர் 

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன், பள்ளி தலைமை ஆசிரியை ரமாதேவி,கடத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் சக்திவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன்,ஒன்றிய துணைச் செயலாளர் ரவீந்திரன், கடத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா, பொரிமாது, சென்னகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஆதிமூலம் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • பலர் கலந்துக் கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு கல்வி மாவட்டத்தைச சேர்ந்த கொருக்கை, வாழ்குடை, செங்காடு, கோவிலூர், அனக்காவூர், புரிசை, உக்கல், ஆக்கூர் ஆகிய அரசு மேல் நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் எம்எல்.ஏ வு மான எஸ்.பி.ஜே.கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், அனக்காவூர் ஒன்றியக்குழுத் தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் (பொ) தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு 585 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    முன்னதாக கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் கட்டிடம் கட்டும் பணியினை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருள் நரசிம்மன், டி.பாஸ்கர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மீனாட்சி தமிழரசன், ஒன்றியக் கவுன்சிலர் மகாலட்சுமி அருள், ஒப்பந்ததாரர் கதிரேசன் குமரவேல், திமுக நிர்வாகிகள் மோ.ரவி, சி.கே.ரவிக்குமார், பார்த்தீபன், ஜெ.ஜெ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • அரசு பள்ளியில் பயில்வது பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிவகங்கை கோட்டையூர் தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்-ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார்அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    தற்போது அரசுப்பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    பெற்றோர்கள் தனியார்பள்ளிகளில் தங்களது குழந்தைகள் கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தினை களைந்து அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட அரசுப்பள்ளியில் 2021-2022-ம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து முதல் பரிசுத்தொகையாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

    விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், மின்வாரியத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 300 பேர் பயனடைந்தனர்
    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி (ஜோலார்பேட்டை) நல்லதம்பி(திருப்பத்தூர்), ஏ.சி. வில்வநாதன்(ஆம்பூர்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு உலமாக்களுக்கு சைக்கிள்கள், திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் இடுப்பொருட்கள் உட்பட 713 பயனாளிகளுக்கு 7 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 300 உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவர் எஸ். ராஜேந்திரன், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி, பேரூராட்சி செயலாளர்கள் ஆ. செல்வராஜ், ஸ்ரீதர், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளர் சுனா கைசர் அஹமத், பல்வேறு துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா நன்றி கூறினார்.

    ×