என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலத்தில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் - மேயர் மகேஷ் வழங்கினார்
- விழாவில் 59 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
- பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை உஷா நிர்மலா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 59 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெஜிகுமாரி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் சற்குரு கண்ணன், ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி டேனியல் ரஞ்சன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






