search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்கள் 585 பேருக்கு இலவச சைக்கிள்
    X

    அரசு பள்ளி மாணவர்கள் 585 பேருக்கு இலவச சைக்கிள்

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • பலர் கலந்துக் கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு கல்வி மாவட்டத்தைச சேர்ந்த கொருக்கை, வாழ்குடை, செங்காடு, கோவிலூர், அனக்காவூர், புரிசை, உக்கல், ஆக்கூர் ஆகிய அரசு மேல் நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் எம்எல்.ஏ வு மான எஸ்.பி.ஜே.கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், அனக்காவூர் ஒன்றியக்குழுத் தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் (பொ) தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு 585 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    முன்னதாக கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் கட்டிடம் கட்டும் பணியினை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருள் நரசிம்மன், டி.பாஸ்கர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மீனாட்சி தமிழரசன், ஒன்றியக் கவுன்சிலர் மகாலட்சுமி அருள், ஒப்பந்ததாரர் கதிரேசன் குமரவேல், திமுக நிர்வாகிகள் மோ.ரவி, சி.கே.ரவிக்குமார், பார்த்தீபன், ஜெ.ஜெ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×