search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Geetha Jeevan"

    • இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது
    • புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் 8.12.2022 வரை நடக்கிறது. வருகிற 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

    ஆகையால் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறம் முகாம்களில் சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் அனைவரும் வாக்காளர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

    18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, ஆதார் விவரம் சேர்க்க படிவம் 6ஏ, நீக்கம் செய்ய 7, பெயர், முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும். இந்த பணிகளில் தி.மு.க.வினர் மெத்தன போக்கு காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

    புதுமைபெண் திட்டம்

    மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடர்வதற்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. தற்போது ஒன்று முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தெற்கு வளர்ச்சியில்லை என்ற நிலை மாறி தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது.

    மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி தமிழர்களின் நலனை பாதுகாத்து கொள்வோம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். டோல்கேட் கட்டணம் உயர்வு சிலிண்டர் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் மோடி அரசு தான். எதுவுமே செய்யாமல் விலைவாசி உயர்வுக்கு வழிவகை செய்ய எற்படுத்தியுள்ளது.

    ரூ.1000 உதவித்தொகை

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக 530 கொடுக்கப்பட்டு 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கான 1000 உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, திண்டுக்கல் லியோனி , மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ் புதியவன், ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, மதியழகன், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், முருகஇசக்கி, டேனியல், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், பவானிமார்ஷல், ஜான்சிராணி, வைதேகி, சுயும்பு, கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, ஜான் அலெக்ஸாண்டர், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வ மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ளனர்.
    • திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்ததனர்.

    இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ளனர். 6-ந் தேதி காலை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு மாணவர்கள் உயிரிழந்தும், மீதமுள்ள 12 மாணவர்கள் மற்றும் ஒரு காவலர் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளனர்.

    உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு மேலும் ஒரு மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    நேற்றைய தினம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசால் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசகம் தலைமையிலான குழுவினர் மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழுவினர் நேரில் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை எனவும் காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனபோக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுவதாக அறிவித்தார் .

    இதனையடுத்து இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் உள்ளிட்டார் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவாய் துறையினருக்கு காப்பகத்தை மூட உத்தரவிட்டனர் . இதனை தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் காப்பகத்திற்கு பூட்டு போட்டு மூடப்பட்டது. மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து திருப்பூர் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் வார்டன் உடன் இல்லை.
    • காப்பகத்தின் நிர்வாகியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மு.பி.சாமிநாதன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் தங்கி இருந்த காப்பகத்தில் ஆய்வு செய்தனர். இப்போது மாணவர்கள் தங்கி இருந்த அறை, சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம், இடங்களை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவியாக அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    ஆய்வுக்கு பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    3 மாணவர்கள் பலியான சம்பவம் அறிந்து தமிழக முதல்வர் மிகவும் வருத்தப்பட்டார்.

    உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டோம். அப்போது காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் வார்டன் உடன் இல்லை. நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே காப்பகத்தின் நிர்வாகியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள் தங்குமிடம் குறுகலான தகர கொட்டகையாக உள்ளது. இதனை முறையான ஆய்வு செய்யாத மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படுகிறது. காப்பகத்தில் உள்ள மாணவர்கள் ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்படுவார்கள்.

    காப்பகத்தில் மாணவர்களுடன் தங்கியிருந்த நபர் வேறு அறையில் தங்கி இருந்துள்ளார். இவர்களின் அஜாக்கிரதை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அஜாக்கிரதை கண்கூடாக தெரிகிறது.

    தயாரிக்கப்பட்ட வெளி உணவுகளை வாங்குவது சட்டப்படி தவறு. அதிலும் தவறு செய்துள்ளார்கள். நிர்வாகி செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

    அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும். வெளியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை காப்பகங்களில் பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத் துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், ஜேசையா, நலம்ராஜேந்திரன், மரியதாஸ், சங்கர், சீனிவாசன், ஆபிரகாம், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சண்முகராஜ், சரவணன், சின்னத்துரை, முருகன், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கஸ்தூரி, மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், டேனி, தேவதாஸ், தனபால், அருண்சுந்தர், முத்துராமன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், மெட்டில்டா, பவானிமார்ஷல், ஜான்சிராணி, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், தெய்வேந்தி ரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன்,செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதி கண்ணன், காசிவிஸ்வ நாதன், சின்னபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், ரவீசந்திரன், கங்காராஜேஷ், ரவீந்திரன், அந்தோணிராஜ், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், பெனில்டஸ், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, அருணாதேவி, பார்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 99 மாணவ- மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
    • நீங்கள் பெற்ற கல்வியின் மூலம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முதல்வர் இளங்குமரன் தலைமை தாங்கினார்.

    கீதாஜீவன் பேச்சு

    99 மாணவ மாணவி களுக்கு பட்டமளித்து வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும். நான் படித்த காலத்தில் இதுபோன்ற தகவல் தொழில்நுட்பங்கள் இருந்ததில்லை. இருந்தாலும் எனது தந்தை என்னை படிக்க வைத்து ஆளாக்கிய போது நான் ஓர் ஆசிரியராக தான் பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருந்தேன்.

    கால சூழ்நிலை என்னை பொது வாழ்க்கையில் ஈடுபட செய்து தலைவர் கலைஞர் அமைச்சரவையில் ஒருமுறையும், தளபதியாளர் அமைச்சரவையில் இரண்டாவது முறை அமைச்சராகும் பாக்கியம் எனக்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.

    அறிவை வளர்க்க வேண்டும்

    இதே போல் உங்கள் அனைவருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சி கிடைக்கும் வகையில் கல்வி படிப்பு தகவல் தொழில்நுட்பம் என்ற படிப்போடு சேர்த்து பொது அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். உங்கள் தாய் தந்தையர் இன்றைய பட்டமளிப்பு விழாவில் மகிழ்ச்சியடைவதை கண்டு நீங்களும் மகிழ்ச்சியடைந்துள்ளீர்கள்.

    உங்களுக்கு சில சமயங்களில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை தாய் தந்தைகளிடம் கூறி அதற்கு தீர்வு கண்டு கொள்வீர்கள். இனி வரும் காலங்களில் நீங்கள் பெற்ற கல்வியின் மூலம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும். அதற்கேற்றார் போல் அரசு பணியிடம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் இருக்கின்ற பணிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

    வழிகாட்டி

    படிக்கின்ற காலத்தில் பெற்றோர்கள் கண்காணித்ததை போல் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இருக்க வேண்டும். பெற்றோர்கள் முக்கியமாக இருந்ததை போல் ஆசிரியர்களும் உங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    நாம் பயின்ற கல்வி ஏதாவது ஓரு வகையில் மற்றவர்களுக்கும் உதவி செய்திடும் வகையில் அமைய வேண்டும். நீங்கள் இன்று இருக்கும் நிலைமைய அடைய பல சிக்கல்களை கடந்து தான் இந்த வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். உங்கள் அனைவருடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் நன்றாக அமைய மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில், கல்லூரி செயலாளர் ஜீவன்ஜேக்கப், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதா, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி முதல்வர் பாலஷண்முக தேவி, செயின்ட் மேரிஸ் கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் ரூபா, டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், கல்லூரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தூத்துக்குடியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை காலை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

    தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தியாவின்75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர நகர் நல அலுவலர்டாக்டர் அருண்குமார், பொதுசுகாதார அலுவலர்கள், டாக்டர் சூரிய பிரகாஷ் மற்றும் செவிலியர்கள் மாநகராட்சியின் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    ×