search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் காப்பகம்"

    • கடந்த 7-ந்தேதி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
    • மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட பின்னர் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 மாணவர்கள் கடந்த 5-ந்தேதி உயிரிழந்தனர். 11 மாணவர்கள் மற்றும் காவலாளி என 12 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள அரசு காப்பகம் மற்றும் வீடுகளுக்கு திரும்பினர்.

    இதற்கிடையே கடந்த 7-ந்தேதி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், "குழந்தைகள் தங்கியிருந்த இடத்தை மெத்தனப்போக்காக கையாண்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் மூடப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சமூகபாதுகாப்பு த்துறையின் நன்னடத்தை அலுவலர் நித்யா (பொறுப்பு) பதவி ஏற்றார். 3 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ளனர்.
    • திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்ததனர்.

    இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ளனர். 6-ந் தேதி காலை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு மாணவர்கள் உயிரிழந்தும், மீதமுள்ள 12 மாணவர்கள் மற்றும் ஒரு காவலர் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளனர்.

    உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு மேலும் ஒரு மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    நேற்றைய தினம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசால் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசகம் தலைமையிலான குழுவினர் மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழுவினர் நேரில் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை எனவும் காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனபோக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுவதாக அறிவித்தார் .

    இதனையடுத்து இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் உள்ளிட்டார் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவாய் துறையினருக்கு காப்பகத்தை மூட உத்தரவிட்டனர் . இதனை தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் காப்பகத்திற்கு பூட்டு போட்டு மூடப்பட்டது. மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து திருப்பூர் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் வார்டன் உடன் இல்லை.
    • காப்பகத்தின் நிர்வாகியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மு.பி.சாமிநாதன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் தங்கி இருந்த காப்பகத்தில் ஆய்வு செய்தனர். இப்போது மாணவர்கள் தங்கி இருந்த அறை, சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம், இடங்களை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவியாக அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    ஆய்வுக்கு பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    3 மாணவர்கள் பலியான சம்பவம் அறிந்து தமிழக முதல்வர் மிகவும் வருத்தப்பட்டார்.

    உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டோம். அப்போது காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் வார்டன் உடன் இல்லை. நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே காப்பகத்தின் நிர்வாகியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள் தங்குமிடம் குறுகலான தகர கொட்டகையாக உள்ளது. இதனை முறையான ஆய்வு செய்யாத மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படுகிறது. காப்பகத்தில் உள்ள மாணவர்கள் ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்படுவார்கள்.

    காப்பகத்தில் மாணவர்களுடன் தங்கியிருந்த நபர் வேறு அறையில் தங்கி இருந்துள்ளார். இவர்களின் அஜாக்கிரதை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அஜாக்கிரதை கண்கூடாக தெரிகிறது.

    தயாரிக்கப்பட்ட வெளி உணவுகளை வாங்குவது சட்டப்படி தவறு. அதிலும் தவறு செய்துள்ளார்கள். நிர்வாகி செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

    அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும். வெளியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை காப்பகங்களில் பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×