search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welcomes"

    • இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • இந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்தார்.

    மங்கலம்  :

    பா.ஜ.௧. மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மங்கலம் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளித்தனர் . இந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்தார்.

    இதனைத்தொடர்ந்து பா.ஜ.௧.கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். கட்சியின் மாநில செயலாளர் மலர்கொடி, மாநில நிர்வாகி ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், , இந்து மக்கள் கூட்டமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் சி.பி.சுப்பிரமணியம், பொருளாளர் கோபிநடராஜமூர்த்தி, துணைச்செயலாளர் மோகன்குமார் , இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளான ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, மகேந்திரன், கோகுல் சுப்பிரமணியம், சுவாமிடெக்ஸ், ஈஸ்வரன் ,அமிர்தம் டெக்ஸ் ஈஸ்வரன்,ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜ் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எம்.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத் துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், ஜேசையா, நலம்ராஜேந்திரன், மரியதாஸ், சங்கர், சீனிவாசன், ஆபிரகாம், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சண்முகராஜ், சரவணன், சின்னத்துரை, முருகன், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கஸ்தூரி, மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், டேனி, தேவதாஸ், தனபால், அருண்சுந்தர், முத்துராமன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், மெட்டில்டா, பவானிமார்ஷல், ஜான்சிராணி, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், தெய்வேந்தி ரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன்,செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதி கண்ணன், காசிவிஸ்வ நாதன், சின்னபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், ரவீசந்திரன், கங்காராஜேஷ், ரவீந்திரன், அந்தோணிராஜ், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், பெனில்டஸ், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, அருணாதேவி, பார்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும்.

    கோவில்பட்டி:

    கோவில் பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து ள்ளார். இதற்கு ம.தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    விமான ஓடுதளம்

    இது தொடர்பாக 2 பேரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். மீதமுள்ளவை ஏஏஐ அல்லது இந்திய ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன.

    கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம் ஆகியவை இந்திய விமானப் படை கட்டுப்பாட்டில் உள்ளன. நெய்வேலி விமான ஓடுதளம் என்எல்சியிடம் உள்ளது.

    திட்டத்திற்கு வரவேற்பு

    இந்நிலையில் கோவில்பட்டி விமான ஓடுதளத்தை முக்கிய திட்டமாக கையில் எடுக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அதனை விமானப் பயிற்சி நிறுவனமாக நிறுவி பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

    அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். கோவில்பட்டி அருேக உள்ள மொட்டை மலையில் அமைந்துள்ள விமான ஓடுதளம் பயன்பாடின்றி உள்ளதால் இதை எப்படி விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றுவது என்பதை டிட்கோ மூலம் அதற்கான திட்டத்தை வகுக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அது வரவேற்க கூடியது.

    வேலை வாய்ப்பு பெருகும்

    இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அமைந்தால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

    கோவில்பட்டி பகுதியில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஆகியோரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கையை ம.தி.மு.க. முழு மனதுடன் வரவேற்கிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • புதுவை பா.ஜனதா நகர மாவட்ட செயற்குழு கூட்டம்
    • அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா நகர மாவட்ட செயற்குழு கூட்டம் நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார். மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், செயலாளர் மற்றும் நகர மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல், நகர மாவட்ட பொதுச்செயலாளர் ஆனந்த கண்ணன் மற்றும் நகர, மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி, அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    நாட்டின் வளர்ச்சிக்கும் முழுமையான பாதுகாப்புக்கும் இளைஞர் களை நல்வழிப்படுத்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஏரா ளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இளைஞர்களின் நலன்களை மனதில் கொண்டு பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு துறை மந்திரி ஆகியோர் ஒட்டுமொத்த நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்திய அக்னிபாத் திட்டத்தை இந்த நகர மாவட்ட செயற்குழு வில் முழுமையாக ஆதரித்து பாராட்டு தெரிவிப்பது.

    ரஷ்யா-உக்ரைன் போரில் புதுவையை சேர்ந்த 19 மாணவர்களை மிக சாதுர்யமாக செயல்பட்டு வந்தே பாரத் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்ததற்கு பிரதமருக்கு பாராட்டு தெரிவிப்பது.

    கடந்த 24.4.2022 அன்று புதுவைக்கு வருகை தந்து மக்களின் நலனை கருதி வில்லியனூர் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை மந்திரிக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். #Qatar #SyrianRefugees #UNChiefAntonioGuterres
    நியூயார்க்:

    சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்தப் போரினால் கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 24 லட்சம் பேர் அகதிகளாக பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

    சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.355 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இந்த தாராள நிதி உதவியை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

    இதுபற்றி அவர் சார்பில் ஐ.நா. சபை துணை செய்தி தொடர்பாளர் பர்கான் ஹக் கூறும்போது, “இந்த நிதி உதவிக்காக கத்தார் நாட்டு மன்னருக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்” என குறிப்பிட்டார். #Qatar #SyrianRefugees #UNChiefAntonioGuterres
    ×