search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage Pariharam"

    • இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது
    • ஆயில்ய நட்சத்திரத்தன்று இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில். கேட்டவர்க்கு கேட்டதையெல்லாம் வழங்கி அருளும் வரப்பிரசாதி என்று கமலவல்லி நாச்சியாரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    அரங்கன் என்கிற பரமாத்மாவை, கமலவல்லி எனும் ஜீவாத்மாவாக இருந்து, மன்னருக்கு மகளாக் அவதரித்து, திருமணம் புரிந்து கொண்டவளின் திருக்கோயில் இது. உறையூர் மன்னனின் இளவரசியாக மகாலக்ஷ்மியே அவதரித்த ஒப்பற்ற பூமி இது என்கிறது ஸ்தல புராணம்.

    இங்கே கல்யாண விமானம் எனப்படும் கமல விமானத்தில் கோயில் கொண்டு தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அழகு ததும்பத் தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் கமலவல்லி நாச்சியார். வெளியூர் அன்பர்களுக்கு, இது கமலவல்லி நாச்சியார் கோயில். கமலவல்லித் தாயார் கோயில். ஆனால், உள்ளூர்க்காரர்கள், திருச்சிவாசிகள்... நாச்சியார்கோயில் என்றுதான் சொல்லுகிறார்கள்.

    இங்கே உள்ள விமானம் கல்யாணவிமானம் என்பது போல் இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. சூரிய புஷ்கரணி என்றும் போற்றப்படுகிறது.

    கமலவல்லி நாச்சியாரின் திருநட்சத்திரம்... ஆயில்யம். எனவே மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. அதேபோல், பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, ஆயில்ய நட்சத்திர நாளில், ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கன் இங்கே உறையூர் நாச்சியார்கோயிலுக்கு வருவார். அப்போது இருவருக்கும் திருமண வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

    இந்த திருமண வைபவத்தை நேரில் வந்து தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம். அதேபோல், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரநாளில், கமலவல்லி நாச்சியாரை மனமுருக வேண்டிக்கொண்டால், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தாயாரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்தால், அவர்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். வழக்கில் வெற்றிகிடைத்து இனிதே வாழ்வார்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    ஆயில்ய நட்சத்திர நாளில், நாச்சியார்கோவில் கமலவல்லி நாச்சியாரை வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பிரிந்த தம்பதி கூட விரைவில் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்.

    • திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில்.
    • அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.

    ஊடல் இல்லாத உறவுகளே இல்லை. ஊடலும் அதற்குப் பிறகான சமாதானமும் இன்னும் புரிதலையும் நெருக்கத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்தும். இந்த ஊடல் இறைவனுக்குள்ளேயே நிகழ்ந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருக்கும் ரங்கனுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடலும் அதன் பிறகான புரிதலும் விவரிக்கும் புராணம், நாம் அறிந்ததுதானே.

    அந்தக் காலத்தில் பரந்துவிரிந்த சோழ தேசத்தின் தலைநகரம் உறையூர். இந்தப் பகுதியில், நந்தசோழன் எனும் மன்னன் ஆட்சி செய்துவந்தான். குறைவற நல்லாட்சி புரிந்து வந்தான். இறைப்பணியிலும் ஈடுபட்டு, சிறந்த பக்திமான் என்று பேரெடுத்தான். ஆனால் என்ன, அள்ளியெடுத்துக் கொஞ்சி மகிழ, ஒரு வாரிசு இல்லை அவனுக்கு.

    திருமாலின் மீது மாறா பக்தி கொண்டிருந்த மன்னனின் மனநிலையை, ஏக்கத்தை அறியாமலா இருப்பார் மகாவிஷ்ணு? அவனின் பக்தியில் மகிழ்ந்த பரமன், தன் இல்லாள் மகாலக்ஷ்மியையே மன்னனுக்கு மகளென அவதரிக்கச் செய்தார். தாமரைத் தடாகத்தில், தாமரை மலர் மீது தங்கமென ஜொலித்த குழந்தையைக் கண்டான். குதூகலமானான். அரண்மனைக்குக் கொண்டு வந்தான். ராணியிடம் கொடுத்து மகிழ்ந்தான். நெகிழ்ந்து போனாள் அரசி. 'கமலவல்லி' எனப் பெயர் சூட்டி வளர்த்தார்கள்.

    உலகத்துக்கே நாயகியான மகாலக்ஷ்மி, சோழ தேசத்தின் இளவரசியாக வளர்ந்தாள். வலம் வந்தாள். தன் துணைவனான பரம்பொருளுடன் மகாலக்ஷ்மியும் சேரும் தருணமும் வந்தது.

    வேட்டைக்காரனைப் போல் வந்தான் அரங்கன். அதுவொரு பலாச வனம். அங்கே தன் தோழியருடன் இருந்த கமலவல்லி, அரங்கனைக் கண்டாள். அவனழகில் தேஜஸில் மயங்கினாள். மகளின் கலக்கத்தையும் வாட்டத்தையும் காதலையும் கண்டு செய்வதறியாது தவித்தான் மன்னன்.

    ஆட்டத்தை முடித்துக்கொள்ள திருவுளம் கொண்டான் அரங்கன். அன்றிரவு... மன்னனின் கனவில் அரங்கன் வந்தான். தன் தேவியையே மகளாக வளர்த்து வந்தாய் எனும் உண்மையைச் சொல்லியருளினார் அரங்கன். 'சந்நிதிக்கு அழைத்து வா' எனப் பணித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்து போனான் மன்னன். திருவரங்கம் இருக்கும் திசை நோக்கி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.

    விடிந்ததும் பரந்தாமனின் அருளுரைப்படி, மணமகள் போல் மகளை, மகாலக்ஷ்மியை அலங்கரித்து, அரங்கநகருக்கு ஊர்வலமாய் அழைத்து வந்தான். சந்நிதியில் நின்ற கமலவல்லியை, தனக்குள் ஐக்கியப்படுத்தி, மன்னனுக்கு அருளினார் அரங்கன். தன் பக்திக்கும் குணத்துக்கும் இறைவன் வழங்கிய கொடை என்று நெக்குருகிய மன்னன், உறையூர் வந்த கையுடன்... ஓர் ஆலயம் அமைக்கத் தீர்மானித்தான்.

    மகாலக்ஷ்மியே மகள் கமலவல்லியாக அவதரித்ததால், அவளின் நினைவாகவே ஆலயம் அமைத்தான் மன்னன். மகாலக்ஷ்மியை மகளாக வளர்த்தவனாயிற்றே. அரங்கனை தன் மாப்பிள்ளையாகவே பாவித்து பூஜித்தான். அதனால்தான், இங்கே உள்ள பெருமாளுக்கு அழகிய மணவாளன் என்றே திருநாமம் சூட்டி மகிழ்ந்தான். தாயாரின் திருநாமம்... சொல்லவா வேண்டும். கமலவல்லி நாச்சியார்.

    திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில். அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.

    உரிய வயது வந்தும், இன்னும் திருமணமாகவில்லையே என்று கலங்கித் தவிப்பவர்களுக்கு, கமலவல்லித் தாயார் கல்யாண வரத்தைத் தந்தருள்கிறார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மாதந்தோறும் வருகிற ஆயில்யம் நட்சத்திர நாளில், வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார் கமலவல்லித் தாயார்.

    தொடர்ந்து, கமலவல்லித் தாயாரை வணங்குங்கள். மணமாலை தோள் சேரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    • செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம்.
    • அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி, பொதுமக்களின் தொழில் வளர்ச்சி, குடும்ப நிம்மதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார். இவர் கருங்காலி மாலைகள் குறித்த அரிய தகவல்களை கூறி அதை பக்தர்களுக்கு அளித்து வருகிறார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    நம் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியை கொண்டு வர நவக்கிரக நாயகரான செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் மிக முக்கியம். அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்புபவர்கள் கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் பகவானுக்கு உரிய இந்த கருங்காலி மாலை அணிபவர்களுக்கு செவ்வாய் பகவான் அளிக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.

    மேலும் எந்தவிதமான பிரச்சினைகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள், மன உறுதி அதிகமாவதுடன், உடல் பிரச்சினைகள் நீங்கும். குலதெய்வ அருள் பெருகும். செல்வவளம் அதிகமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    மாங்கல்ய பலம் பலப்படும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்தால் தோஷம் நீங்குவதுடன், திருமண தடை நீங்கும். கணவன்-மனைவிக்குள் பிரச்சினைகள் இருந்தால் அந்த பிரச்சினைகள் அகன்று கணவன்-மனைவி உறவு மேம்படும்.

    பைரவ பீடத்தில் கருங்காலி மாலைகள் முறைப்படி பூஜை செய்யப்பட்டு, மந்திரங்களால் உரு ஏற்றி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அணிந்து கொண்டால் தொழில் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் முன்னேற்றம் பெறும்.

    இவ்வாறு பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி கூறினார்.

    • ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது.
    • 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள்.

    ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு சுப நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் எளிமையாக நடந்து விடும்.

    ஏழரை சனியின் காலத்தில் தான் ஆணிற்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பார்? பெண்களுக்கு கணவர், புகந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார்.

    சுய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தசா புக்தி சாதகமாக இருந்தால் ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது. தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரை சனியின் மேல் பழிபோடுகிறார்கள். அல்லது சுயவிருப்பு வெறுப்பு காரணமாக ஏழரை சனி வந்தால் திருமணம் செய்யக் கூடாது என 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு கூட ஏழரை சனியின் காலத்தில் திருமணம் தானாக நடந்து விடும்.

    அஷ்டமச் சனியும் திருமணமும்

    ராசிக்கு எட்டாம் இடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம்,வாக்கு, குடும்பஸ்தானத்திற்கு இருப்பதால் வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப் போல தேவையற்ற வம்புக்கு சென்று தானே அதில் மாட்டிக் கொள்வர். அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்பட வேண்டிய இன்பமான நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.மேலும் ஜனன கால ஜாதக ரீதியாக சாதகமற்ற தசை புத்தி நடப்பவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத இடர்களை சந்திக்க நேரும் என்பதால் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்

    எனவே ஏழரை சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும்.ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஜனன கால ஜாதக ரீதியான சனி பகவானால் திருமணத் தடை இருப்பவர்கள், சரியான திருமண வாழ்வு அமையாமல் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட திருமணத் தடை அகலும். திருமணத்திற்குப் பிறகு இல்லறம் நல்லறமாகும்.

    • குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும்.
    • சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது.

    திருமண வயதை எட்டும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு குரு பலம் வந்து விட்டதா என்று ஜோதிடரிடம் கேட்டு அதற்கேற்ப திருமணம் செய்வது பலரின் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் வரவில்லை என்றால், அவரது திருமணத்தை தள்ளிப்போடுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் 'குரு பலம் மட்டுமே திருமணத்தை தீர்மானிக்கிறதா?' என்றால், 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் திருமணமே செய்துகொள்ளாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் எல்லாம் குரு பலம் வராமல் இருந்திருக்குமா?

    கோச்சாரப்படி ஒருவருடைய ஜாதகத்தில், அவரது ராசிக்கு 2, 5, 7, 9 ஆகிய இடங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும் போது, குரு பலம் ஏற்படுகிறது. அப்படி பார்த்தால், குரு பலம் ஏற்படும் வேளையில், திருமண வயதில் உள்ள அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நிகழ்கிறதா? என்றால், அது கேள்விக் குறிதான். ஏனெனில் அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளின் படிதான் திருமணம் என்பது நடைபெறும்.

    எனவே குரு பலத்திற்கும், திருமணம் நடப்பதற்கும் சம்பந்தம் இல்லை. எப்படி என்றால், ஒரு ஜாதகருக்கு குரு பலம் சிறு வயதிலும் வரும், நடுத்தர வயதிலும் வரும், வயதான பிறகும் வரும். அப்படி இருக்கும்போது, குரு பலம் வரும்போதெல்லாம் திருமணம் நடைபெறுவதில்லைதானே. எனவே, திருமணம் நடைபெறும் காலம் என்று பார்க்கும் போது, அவரவர் ஜாதகத்தில் வரும் திசை, புத்தி, அந்தரத்தினைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது.

    அதாவது ஜாதகத்தின் படி குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் ஆகியவற்றில் வீற்றிருக்கும் கிரகம், களத்திரகாரகனான சுக்ரன் இருக்கும் இடத்தை பார்க்கும் கிரகம் போன்றவற்றைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது. மேலும், திருமண ஸ்தானங்களான 2-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் போன்ற இடத்தின் ஸ்தானாதிபதி சாரத்தில் கிரகங்கள் இருந்தாலும், அந்த கிரகங்களின் திசை, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும். மேற்சொன்ன விதிகளின் படி குரு சம்பந்தம் பெறுமேயானால், அந்த குருவின் திசை, புத்தி காலங்களிலும் திருமணம் நடந்தேறும்.

    அப்படி என்றால் குருவால் என்னதான் பயன் என்கிறீர்களா?.. அதையும் பார்ப்போம்.

    புத்திரகாரகன், தனகாரகன், ஒழுக்கம், அறிவு விருத்தி அடைவது, உயர் பதவி யோகம் பெறுதல், மரியாதை, ஆசிரியன், ஆலோசனை வழங்குபவர் போன்ற காரகங்களின் அடிப்படையில் குரு பகவான் பலன் தருவார். குரு பார்க்க கோடி நன்மை என்பது அனைவருக்கும் தெரியும். குரு பகவான் இருந்த இடங்களை விட பார்க்கும் இடம் நன்மை அடையும். ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் குரு பார்வை இல்லாதவர்கள், குரு பகவானிடம் சரணடைதல் மிகுந்த நன்மையைத் தரும்.

    அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று குரு பகவானை தரிசிப்பது நல்லது. குருவிற்கு உகந்த நாள் வியாழன். அன்றைய தினம் குரு பகவானை உள்ளார்ந்து நினைத்து விரதம் மேற்கொள்ளும் போது, குருவின் அனுக்கிரகம் கிடைக்கும். குரு பகவானுக்கு உகந்த பொன்னிறம் அல்லது மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால், அவரால் ஏற்படும் தோஷங்கள் விலகி நன்மைகள் கிடைக்கப்பெறும். உதாரணமாக கல்வி விருத்தி அடைதல், உயர்பதவி கிடைத்தல், தனகாரகன் என்பதால் செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.

    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அல்லது புத்திர தோஷம் உள்ளவர்கள், குரு பகவானை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கொண்டைக் கடலையை மாலையாக கோர்த்து, குரு பகவானுக்கு அணிவித்தலும் மிகவும் நன்மையைத்தரும். குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆதலால் சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது. குரு ஸ்லோகம், குரு மந்திரம், குரு காயத்ரியை உச்சரிப்பதால், குருவின் அனுகிரகம் முழுமையாக நமக்கு கிடைக்கும். இவற்றை வியாழன் தோறும் 30 அல்லது 108 முறை பாராயணம் செய்வது நன்மையைத் தரும்.

    'ஜோதிடச்சுடர்' என்.ஞானரதம்,சென்னை.

    • ஏழில் ராகு இருப்பவர்களுக்கு  கவனமாக திருமணப் பொருத்தம்  பார்க்க வேண்டும்.
    • நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

    ஏழில் ராகு நிச்சயமாக திருமணத்தை தடை செய்ய மாட்டார். திருமணத்தை நடத்தி பிரச்சினையை தருவார். காதல் கலப்பு திருமணத்தால் பிரச்சினை தருவார். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை நடத்தி பிரச்சினை தருவார். முதல் மனைவி இருக்கும் போதே சட்டத்திற்கு எதிராக இரண்டாம் திருமணத்தை தருவார்.

    தனித்த ராகுவும், குரு பார்வை பெற்ற ராகுவும் பெரிய தொந்தரவை தருவதில்லை. எனினும் தனித்த ராகு இருப்பவர்களுக்கு திருமண வாழ்வில் மாமியார், நாத்தனார் அல்லது நெருங்கிய உறவுகளின் தலையீட்டால் மண வாழ்வில் நெருடல் இருந்து கொண்டே தான் இருக்கும்.

    ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கையால் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருமண வாழ்வில் இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை இருப்பவர்களுக்கு கணவரிடம் இருந்து கிடைக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கிடைக்காததால் பிரச்சினை பிரிவினையை ஏற்படுத்துகிறது. சந்திரன் ராகு சேர்க்கை இருக்கும் ஆண்கள் மனைவியை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.

    சனி ராகு சம்பந்தம் கர்ம பந்தத்தால் இணைந்து கர்ம வினையை கழிக்க முயன்று கர்ம வினையை அதிகப்படுத்துபவர்கள். ஏழில் ராகு இருப்பவர்களுக்கு  கவனமாக திருமணப் பொருத்தம்  பார்க்க வேண்டும். நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். சென்ற பிறவியில் தம்பதிகளுக்குள் இருந்த நிறைவேறாத ஆசையின் பிரதி பலிப்பாக இப்போதைய வாழ்வு அமையும்.

    பரிகாரம்

    கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்ந்து வாழ வைக்க முயற்சி செய்வது மிகச் சிறந்த பரிகாரம்.

    பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்ய வேண்டும்.

    தினமும் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் சென்று வழிபட வேண்டும்.

    • ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
    • திருமணம் கால தாமதமாகவே நடக்கும்.

    ஒருவரின் வாழ்க்கை தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிக முக்கிய காரணமாகும். சனி என்றால் கர்ம பந்தம் . கர்ம பந்தம் இல்லாத ஒருவருடன் சம்பந்தம் ஏற்படாது. அந்த வகையில் ஏழில் சனி முழுமையான கர்மபந்தம். பூர்வ ஜென்ம விட்ட குறையின் தொடர்ச்சி. சென்ற பிறவியில் தம்பதிகளாக வாழ்ந்தவர்களே இந்த பிறவியிலும் தம்பதிகளாக வாழ்வார்கள். குறைந்தது 27 வயதிற்குப் பிறகே திருமணம் நடக்கிறது.

    சனி நின்ற நட்சத்திர சார அடிப்படையில் திருமணம் நடக்காத நிலையும் உண்டு. ஒருவர் மற்றவருக்கு செய்த நல்ல, தீய செயல்களின் பதிவுகள்படி வாழ்க்கை இருக்கும். சனி தாமதத்தை குறிக்கும் கிரகம். சனி தான் நின்ற பாவகத்தின் மூலம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய பலனை தாமதப்படுத்துவார். திருமணம் கால தாமதமாகவே நடக்கும். ஜாதகரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை குறைந்த களத்திரமே கிடைக்கும்.

    சனி நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்கள் மற்றும் செவ்வாய், ராகு, கேதுக்களுடன் சம்பந்தம் இருப்பவர்களும் தொழில் நிமித்தம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சனி மந்ததன்மை மற்றும் பொய் பேசுவதற்கு காரணமாக இருப்பதால் வெறுப்பால் பிரிவு ஏற்படுகிறது.  கடக, சிம்ம லக்னத்திற்கு சனி மன நிறைவான மண வாழ்க்கையை தருவதில்லை.ஏழாம் இடத்தோடு சனி சம்மந்தம் இருந்தால் எளிதில் விவாகரத்தும் கிடைக்காது. வயதான பிறகே புரிதல் ஏற்பட்டு அன்னியோன்ய தம்பதிகளாக வாழ்வார்கள்.

    பரிகாரம்

    திருமணம் முடியும் வரை சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். பித்ருக்கள் வழிபாடு மிக அவசியம்.

    சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வர வேண்டும்.

    பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள்,தொழிலாளிகள், துப்புரவுதொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலனை தரும்.

    சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு.

    • ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
    • ஆண்கள் ஜாதகத்தில்  சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகமாகும்.

    ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குரு பார்வை ஆதர்சன தம்பதிகள்.பெண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சம்பந்தம் தம்பதிகளிடையே கருத்து பரிமாற்றம் அன்பு மிகுதியாகும். உரிய வயதில் திருமணம் நடைபெறும். இனிய இல்லறம் அமையும். ஆண்கள் ஜாதகத்தில்  சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகமாகும்.

    ஆண் ஜாதகத்தில் குரு சம்மந்தம் இல்லாத சுக்கிரன் ஏழில் இருக்கும் போது காரகோ பாவகநாஸ்தி. ஆடம்பரத்திற்கும், அதிகப்படியான சந்தோஷத்திற்கும் சுக்கிரன் காரண கிரகமாக இருப்பதால் தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வாழ்க்கை இழந்தவர்களும் விவாகரத்தானவர்களுமே அதிகம்.

    சுக்கிரன் வக்கிரம், நீசம் அஸ்தமனமாகும் போதும் ராகு, கேதுக்களுடன் சம்பந்தம் பெரும் போதும் கணவனால் மனைவிக்கு பிரயோஜ னமற்ற நிலை அல்லது  மனைவியை பராமரிக்க முடியாத நிலை அல்லது பிரச்சினைக்கு உரிய மனைவியை அடைவார்கள்.  சென்ற பிறவியில் மனைவியை அலட்சியம் செய்தவர்களுக்கு இது போன்ற வினைப் பதிவு இருக்கும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு மல்லிகை மாலை அணிவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    6 வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு 9 வாரம் மங்கலப் பொருட்களான பூ, மஞ்சள், குங்குமம் , வளையல், வெற்றிலை, பாக்கு கொடுத்து ஆசி பெற வேண்டும்.

    ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை  செய்ய வேண்டும்.

    • ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
    • பலருக்கு திருமணத்திற்கு பின்பே பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

    ஏழில் அமர்ந்த குரு லக்னத்தை பார்க்கும் என்பதால் அது பெரிய பாதிப்பைத் தராது. சிலருக்கு கால தாமதமாக திருமணம் நடக்கும். பலருக்கு திருமணத்திற்கு பின்பே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மேஷ லக்னத்திற்கு ஏழாமிடமான  துலாத்தில் நிற்கும் குருவும், மகர லக்னத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் உச்சம் பெறும் குருவும்  காலதாமதம் மற்றும் பிரிவினையைத் தருகிறது. கடக லக்னத்திற்கு ஏழில் வக்ரம் பெற்ற குருவும் திருமணத்தில் தடை அல்லது திருமணத்திற்கு பின்  பிரிவினையைத் தருகிறது.

    ஏழில் நின்ற குரு லக்னத்தைப் பார்ப்பதால் பிரச்சினை இருந்தாலும் கவுரவத்திற்காக பிரியாமல் விட்டுக் கொடுக்காமல் வாழ முயற்சிக்கிறார்கள்.பெண்கள் ஜாதகத்தில் குரு செவ்வாயுடன் சேருவதோ அல்லது செவ்வாயைப் பார்ப்பதோ சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் குரு சுக்கிரனை பார்ப்பதோ அல்லது சுக்கிரனுடன் சேர்வதோ சிறப்பு அல்லது தம்பதிகளின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியுடன் சேர்வதோ அல்லது ஏழாம் அதிபதியை பார்ப்பதோ சிறப்பு. மேற்கண்ட எந்த நிலையும் இல்லாத போது திருமண வாழ்க்கை கடமைக்காக வாழ்வது போல் இருக்கும். 

    திருமணத்திற்குப் பின் குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்படும் பிரிவினைகளுக்கு குரு முக்கிய காரணமாகிறது குழந்தை நல்ல நிலையில் உருவாக காரணமாக குரு இருப்பதால் குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது குழந்தையை வளர்க்க முடியாமை போன்ற காரணங்களால் பிரிவினை ஏற்படுகிறது. நம்பிக்கை, நாணயத்திற்கு காரக கிரகம் குருவாகும். ஒருவருக்கு மற்றவர் மேல் நம்பிக்கை, நாணயம் குறைவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும்  காரணமாகிறது. கருக்கலைப்பு மற்றும் குரு துரோகம் செய்தவர்களுக்கும் இது போன்ற வினைப் பதிவு இருக்கும்.

    பரிகாரம்

    16 வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வாசனை மலர்களால் அர்ச்சித்து 16 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 16 அந்தணர்களுக்கு 16 வாரம் சமைக்கத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும்.

    திருச்செந்தூர்சென்று முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும்.

    • திண்டுக்கல் மேலக் கோட்டையில் உள்ளது இந்த கோவில்.
    • இந்த கோவிலில் இந்த பரிகாரத்தை செய்தால் திருமண தடைகள் அகலும்.

    திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது, மேலக் கோட்டை. இங்கு 'தலை வெட்டி பிள்ளையார்' அருள்பாலித்து வருகிறார். கல்யாணத் தடையால் கலங்கி தவிப்பவர்கள், இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.

    மேலும் பச்சரிசி, எள், வெல்லம் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும்.

    விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டு, திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது ஐதீகம்.

    • ஏழில் புதன் விவாகரத்திற்கு பிறகு கூட சேர்ந்து வாழ்வார்கள்.
    • புதனின் சேட்டைகளை கணிப்பது கடினம்.

    புதன் புத்திசாலித்தனத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஏழில் தனித்த புதன் இருப்பவர்களுக்கு எளிதாக இளம் வயதில் திருமணம் நடக்கும். தாய்மாமன் வழி உறவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். தன் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வாழ்க்கைத் துணையை சந்தோசமாக வைத்து இருப்பார்கள்.

    வாழ்க்கை துணை இளமைப் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள. இது ஒரு அலி கிரகம் என்பதால் ஆண்களுக்கு காதலியையும் பெண்களுக்கு காதலனையும் குறிக்கும் கிரகம் என்பதால் திருமணத்திற்கு பிறகும் காதலர்களாக ஆதர்சன தம்பதியராக வாழ்வார்கள். தனுசு மற்றும் மீன லக்னமாக இருக்கும் போதும் ரிஷப லக்னததிற்கு ஏழாம் அதிபதி புதனின் நட்சத்திரமான கேட்டையில் நின்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை தரும்.

    மற்றபடி தனித்த புதன் எந்த தொந்தரவும் தராது. புதனுடன் பகை கிரகங்களான செவ்வாய், சந்திரன், ராகு, கேதுக்கள் சேரும் போது உலகப் போரே நடந்த பாதிப்பு வாழ்கையில் இருக்கும். ஊருக்காகவும் உறவுக்காவும் கணவன்-மனைவியாக நடிப்பார்கள். வாழ்க்கை துணை இருக்கும் போதே அவரை அலட்சியப்படுத்தி மற்றவரோடு சிரித்து பேசி வாழ்க்கை துணையை வெறுப்படைய செய்வார்கள்.

    அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். ஏழில் புதன் விவாகரத்திற்கு பிறகு கூட சேர்ந்து வாழ்வார்கள். புதனின் சேட்டைகளை கணிப்பது கடினம். சென்ற பிறவியில் இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றிய குற்றத்தின் பதிவால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பரிகாரம்

    17 வாரம் புதன் கிழமை மகா விஷ்ணுவிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 17 திருமணம் ஆகாத இளம் பெண்களுக்கு 17 வாரம் இனிப்பு உணவு தானம் தர வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

    • தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.
    • களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம்.

    முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும் வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.

    பரிகாரம்: இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோ‌ஷமாக இருந்தாலும் அந்தத் தோ‌ஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோ‌ஷம்தான். அந்த சந்தோ‌ஷம் மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி வலு குறைந்து 11-ம் அதிபதி பலம் பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்த வேண்டும்.

    நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.

    ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரன் இல்லை. எப்படியாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்து விடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக் கூடாது.

    ×