search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    திருமண தடை நீக்கும் கருங்காலி மாலை
    X

    கருங்காலி மாலை

    திருமண தடை நீக்கும் கருங்காலி மாலை

    • செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம்.
    • அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி, பொதுமக்களின் தொழில் வளர்ச்சி, குடும்ப நிம்மதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார். இவர் கருங்காலி மாலைகள் குறித்த அரிய தகவல்களை கூறி அதை பக்தர்களுக்கு அளித்து வருகிறார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    நம் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியை கொண்டு வர நவக்கிரக நாயகரான செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் மிக முக்கியம். அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்புபவர்கள் கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் பகவானுக்கு உரிய இந்த கருங்காலி மாலை அணிபவர்களுக்கு செவ்வாய் பகவான் அளிக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.

    மேலும் எந்தவிதமான பிரச்சினைகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள், மன உறுதி அதிகமாவதுடன், உடல் பிரச்சினைகள் நீங்கும். குலதெய்வ அருள் பெருகும். செல்வவளம் அதிகமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    மாங்கல்ய பலம் பலப்படும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்தால் தோஷம் நீங்குவதுடன், திருமண தடை நீங்கும். கணவன்-மனைவிக்குள் பிரச்சினைகள் இருந்தால் அந்த பிரச்சினைகள் அகன்று கணவன்-மனைவி உறவு மேம்படும்.

    பைரவ பீடத்தில் கருங்காலி மாலைகள் முறைப்படி பூஜை செய்யப்பட்டு, மந்திரங்களால் உரு ஏற்றி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அணிந்து கொண்டால் தொழில் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் முன்னேற்றம் பெறும்.

    இவ்வாறு பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி கூறினார்.

    Next Story
    ×