search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஏழில் ராகு இருந்தால் ஏற்படும் திருமண தடையும்.... பரிகாரமும்...
    X

    ஏழில் ராகு இருந்தால் ஏற்படும் திருமண தடையும்.... பரிகாரமும்...

    • ஏழில் ராகு இருப்பவர்களுக்கு  கவனமாக திருமணப் பொருத்தம்  பார்க்க வேண்டும்.
    • நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

    ஏழில் ராகு நிச்சயமாக திருமணத்தை தடை செய்ய மாட்டார். திருமணத்தை நடத்தி பிரச்சினையை தருவார். காதல் கலப்பு திருமணத்தால் பிரச்சினை தருவார். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை நடத்தி பிரச்சினை தருவார். முதல் மனைவி இருக்கும் போதே சட்டத்திற்கு எதிராக இரண்டாம் திருமணத்தை தருவார்.

    தனித்த ராகுவும், குரு பார்வை பெற்ற ராகுவும் பெரிய தொந்தரவை தருவதில்லை. எனினும் தனித்த ராகு இருப்பவர்களுக்கு திருமண வாழ்வில் மாமியார், நாத்தனார் அல்லது நெருங்கிய உறவுகளின் தலையீட்டால் மண வாழ்வில் நெருடல் இருந்து கொண்டே தான் இருக்கும்.

    ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கையால் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருமண வாழ்வில் இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை இருப்பவர்களுக்கு கணவரிடம் இருந்து கிடைக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கிடைக்காததால் பிரச்சினை பிரிவினையை ஏற்படுத்துகிறது. சந்திரன் ராகு சேர்க்கை இருக்கும் ஆண்கள் மனைவியை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.

    சனி ராகு சம்பந்தம் கர்ம பந்தத்தால் இணைந்து கர்ம வினையை கழிக்க முயன்று கர்ம வினையை அதிகப்படுத்துபவர்கள். ஏழில் ராகு இருப்பவர்களுக்கு கவனமாக திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும். நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். சென்ற பிறவியில் தம்பதிகளுக்குள் இருந்த நிறைவேறாத ஆசையின் பிரதி பலிப்பாக இப்போதைய வாழ்வு அமையும்.

    பரிகாரம்

    கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்ந்து வாழ வைக்க முயற்சி செய்வது மிகச் சிறந்த பரிகாரம்.

    பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்ய வேண்டும்.

    தினமும் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் சென்று வழிபட வேண்டும்.

    Next Story
    ×