search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mark Zuckerberg"

    • மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
    • சமீபத்தில் தான் மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன.

    இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ, அதே எண்ணிக்கையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் சுமார் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய பணி நீக்க நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் மார்க் ஜூக்கர்பர்க் தனது மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் மார்க் ஜூக்கர்பர்க் 2023 ஆண்டு நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

    ஏற்கனவே ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது. இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பணியாற்றி வந்தனர். நிதி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ‌ஷகர் பெர்க் தனது மனைவி இடையூறு எதுவும் இன்றி தூங்குவதற்கு ஒளிரும் மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார். #MarkZuckerberg
    நியூயார்க்:

    இறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ‌ஷகர் பெர்க் உயிருடன் இருக்கும் தனது மனைவிக்காக மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.

    மார்க் ஷூகர் பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா. இரவு நேரத்தில் இவர் இடையூறு எதுவும் இன்றி தூங்க வசதியாக ஒளிரும் தன்மை வாய்ந்த மரப்பெட்டி தயரிக்கிறார். தூங்கும் போது அந்த பெட்டிக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாது.

    மனைவி தூங்குவதற்கு வசதியாக ஷூகர்பெர்க் தயாரித்துள்ள மரப்பெட்டி

    காலை 6 மணிக்கும், 7 மணிக்கும் அந்த பெட்டி மங்கலா ஒளியை உமிழ்கிறது. காலையில் அவர் கண் விழித்து எழ வசதியாக 6 மணி மற்றும் 7 மணிக்கு பெட்டியில் இருந்து மங்கலான ஒளி கிளம்புகிறது. ஏனெனில் அப்போதுதான் ஷுகர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழுந்து கண் விழிப்பார்கள்.

    இந்த பெட்டி தங்களது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது என ஷூகர்பெர்க் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பயன்படுத்தும், வகையில் பிரபலப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். #MarkZuckerberg
    ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 156 கோடியை செலவிட்டுள்ளது. #Facebook
    ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு செலவிடும் தொகையை இருமடங்காக அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு 22.6 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.156 கோடி) செலவிட்டுள்ளது.

    மார்க் சூக்கர்பர்க் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு டாலர் எனும் மிகக்குறைந்த தொகையை வருவாயாக பெறுகிறார். 2017 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு ரூ.62 கோடி செலவிடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இது பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

    இதுதவிர தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்தியதில் மார்க் சூக்கர்பர்க் ரூ.18 கோடி செலவிட்டிருக்கிறார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு சார்ந்த பிரச்சனையில் சிக்கியது முதல் அந்நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.



    ஃபேஸ்புக்கின் மூத்த நிர்வாக அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் 2018 ஆம் ஆண்டு ரூ.164 கோடிகளை வருவாயாக பெற்றிருக்கிறார். முந்தைய ஆண்டில் இவர் ரூ.174 கோடிகளை சம்பளமாக பெற்றிருந்தார். இதுதவிர நெட்ஃப்ளிக்ஸ் மூத்த அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் ஃபேஸ்புக்கின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவார் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியிருப்பதை தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் அந்நிறுவனத்தில் இருந்து விலகுகிறார். ஃபேஸ்புக் நிறுவன நிர்வாக குழுவில் 2011 ஆம் ஆண்டு முதல் ஹேஸ்டிங்ஸ் இடம்பெற்றிருக்கிறார். #Facebook
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் பதிவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார். #Facebook #MarkZuckerberg



    ஃபேஸ்புக் நிறுவனத்தில் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

    இது குறித்த கேள்விக்கு, தற்சமயம் 'ஃபேஸ்புக் தலைமை பொறுப்பில் இருந்து பதவி விலகுவது குறித்து எந்த திட்டமும் இல்லை' என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பதில் அளித்து இருக்கிறார்.

    'இத்துடன் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான ஷெரில் சான்ட்பெர்க்கும் தன்னுடன் தொடர்ந்து பணியாற்றுவார் என அவர் தெரிவித்தார். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஷெரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், பல முக்கிய திட்டங்களுக்கு அவர் தலைமை வகிக்கிறார்,' என அவர் தெரிவித்தார். 



    'கடந்த பத்து ஆண்டுகளாக ஷெரில் எனக்கு மிகவும் முக்கியமான சக பணியாளராக இருக்கிறார். அவரது பங்களிப்பு மற்றும், நாங்கள் இருவரும் மேற்கொண்ட பணிகளை பார்த்து பெருமை கொள்கிறேன், மேலும் நாங்கள் இருவரும் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றுவோம் என நம்புகிறேன்,' என அவர் தெரிவித்தார்.

    2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டு, வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய உதவியாக இருந்தது என்ற குற்றச்சாட்டு அந்நிறுவனத்தின் நற்பெயருக்கு முதல் அடியாக அமைந்தது. பின் இதில் தொடர்புடைய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சட்ட நடவடிக்கையில் பலர் தொடர்ந்து சிக்கியதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் களவாடப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி, இவற்றில் சிலவற்றை ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டு அவற்றை சரி செய்வதாக தெரிவித்து இருக்கிறது.

    ஃபேஸ்புக்கில் மிகப்பெரும் பிரச்சனைகள் இருக்கிறது, அதை நான் இல்லை என்று கூறவில்லை.. எனினும், ஃபேஸ்புக் பற்றி வெளியாகும் செய்திகளில் உண்மை இருந்தாலும், அவை அனைத்தும் உண்மை இருப்பதாக என நான் நினைக்கவில்லை. என அவர் தெரிவித்தார்.
    ஃபேஸ்புக் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலக மார்க் சூக்கர்பர்க்கிற்கு அந்நிறுவன பங்குதாரர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சூக்கர்ப்ர்க் விலக வேண்டும் என அந்நிறுவன பங்குதாரர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

    பங்குதாரர்களாக பொருளாலர்கள், மூத்த முதலீட்டு அலுவலர்கள், டிரில்லியம் அசெட் மேனேஜ்மென்ட் எனும் தனியார் நிறுவனம் உள்ளிட்டவை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பதவிகள் பிரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

    ஃபேஸ்புக் நிறுவன துணை நிறுவனரான மார்க் சூக்கர்பர்க் தற்சமயம் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட இரண்டு பொறுப்புகளை வகிக்கிறார்.

    "ஃபேஸ்புக்கின் நிர்வாக அமைப்பு முதலீட்டாளர்களுக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. முதலீட்டாளர் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பங்குதாரர் மதிப்பை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்," என இல்லினியோஸ் மாநில பொருளாலர் மைக்கேல் ஃபிரெரிக்ஸ் தெரிவித்துள்ளார். 



    தொடர் சர்ச்சைகளை ஃபேஸ்புக் கையாண்ட விதம் தான் பங்குதாரர்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கிறது.

    ஃபேஸ்புக் தொடர் சர்ச்சைகளின் துவக்கம் கேம்பிரிட்ஜ் அனாலடிகா விவகாரமாக அமைந்தது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 8.7 கோடி பேரின் விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது அம்பலமானது. இதைத் தொடர்ந்து ஹேக்கர்கள் கைவரிசையால் சுமார் மூன்று கோடி பேரின் விவரங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து திருடப்பட்டது.

    தற்சமயம் எழுந்து இருக்கும் கோரிக்கைக்கான வாக்கெடுப்பு மே 2019 இல் நடைபெற இருக்கும் ஃபேஸ்புக் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் நடைபெறலாம், எனினும் இந்த கோரிக்கை நிறைவேறும் வாய்ப்புகள் குறைவே. சூக்கர்பர்க் மற்றும் சிறு நிறுவனங்கள் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமைகளில் சுமார் 70 சதவிகிதத்தை கொண்டுள்ளனர்.

    முன்னதாக இதேபோன்ற சூழல் கடந்த ஆண்டு ஏற்பட்ட போது சுமார் 51 சதவிகித பங்குதாரர்கள் ஆதரவளித்தனர்.
    ஃபேஸ்புக் நிறுவன நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஃபேஸ்புக் இந்த ஆண்டு 42% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #Facebook #socialmedia


    ஃபேஸ்புக் நிறுவன நிதிநிலை அறிக்கை ஜூன் 30, 2018 வரையிலான காலக்கட்டத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஃபேஸ்புக் நிறுவனம் 1323 கோடி டாலர்களை வருவாய் ஈட்டியிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் 932 கோடி அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்த நிலையில், மொத்தம் 42% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

    ஃபேஸ்புக் மொத்த வருமானத்தில் அதன் விளம்பர பிரிவு மட்டும் 1303 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. ஜூன் 2018, வரையிலான காலக்கட்டத்தில் தினசரி ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 147 கோடியாகும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% அதிகரித்திருக்கிறது. 

    இதேபோன்று மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜூன் 30, 2918 வரையிலான காலக்கட்டத்தில் 223 கோடி ஆகும். 2018 இரண்டாவது காலாண்டில் மட்டும் ஃபேஸ்புக் மொபைல் விளம்பர பிரிவு வருவாய் அந்நிறுவன விளம்பர வருவாயில் 91% ஆகும். இது 2017 இரண்டாவது காலாண்டில் 87% ஆக இருந்தது.

    ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் வியாபாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மக்களை ஒன்றிணைப்பதில் தொடர்ந்து அர்த்தமுள்ள வழிகளை கட்டமைப்பது மற்றும் மக்களை பாதுகாப்பாக வைப்பதில் தொடர்ந்து முதலீடு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.

    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையிலும் வியாபாரத்தில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரென் பஃபெட்-ஐ பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.



    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக அறியப்படும் ஃபேஸ்புக் தளத்தின் நிறுவனர் உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரென் பஃபெட்-ஐ பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். 

    தற்சமயம் உலக பணக்காரர்கள் பட்டியல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளனர். பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் 2.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.

    உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவர்கள் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். உலகின் மூன்றாவது பணக்காரர் ஆன மார்க் சூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு தற்சமயம் 8160 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது வாரென் பஃபெட்-ஐ விட 37.3 கோடி டாலர்கள் அதிகம் ஆகும்.

    எட்டு மாதங்களில் இல்லாத அளவு ஃபேஸ்புக் பங்கு மதிப்பானது மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி வெகுவாக குறைந்து 152.22 டாலர்களாக இருந்தது. அதன்பின்னர் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்ற பங்குச்சந்தையில் ஃபேஸ்புக் பங்கு மதிப்பு 203.23 டாலர்கள் ஆக அதிகரித்து இருக்கிறது.

    உலகில் தொழில்நுட்ப துறை வளர்ச்சி மற்ற துறைகளை விட அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பர்க் தெரிவித்து இருக்கிறது. இந்த பட்டியலில் உலகின் 500 பணக்காரர்கள் இடம்பெற்று இருக்கும் நிலையில், நியூ யார்க்கில் ஒவ்வொரு நாளும் பங்கு சந்தை நிறைவுறும் வேளையில் பட்டியல் மாற்றம் செய்யப்படுகிறது.
    பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். #europeanparliament #markzuckerberg
    பிரசல்ஸ்:

    கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், பேஸ்புக் நிறுவனமும் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

    இந்நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆலோசனை நடத்தி உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

    இதுதொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற அவைத்தலைவர் அந்தோனியோ டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வாரத்தில் 8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Facebook #europeanparliament #markzuckerberg
    ×