search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cambridge Analytica"

    ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் விவரங்களை கையாள்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. #Facebook



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கனடா நாட்டு விதிகளை மீறியதாக சட்டவிரோத நடவடிக்கைகளை கண்கானிக்கும் தனியுரிமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து கனடா நாட்டு தனியுரிமை ஆணையர் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான தனியுரிமை ஆணையர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

    ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதற்கு பயனரிடம் இருந்து அனுமதி பெறவில்லை. பயனர் விவரங்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விவரங்களை கட்டுக்குள் வைப்பதற்கு எவ்வித பொறுப்பையும் ஏற்கவில்லை. என கூறப்பட்டுள்ளது.



    "ஃபேஸ்புக் கையாளும் அதிகப்படியான பயனர் விவரங்களை பாதுகாப்பதில் அந்நிறுவனம் கவனம் செலுத்தாது தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக்கின் தனியுரிமை கட்டமைப்பு காலியாகவே இருக்கிறது. அதன் விதிகள் தனியுரிமை பாதுகாப்பிற்கு அர்த்தமற்றதாக மாற்றுகிறது." என கனடாவுக்கான தனியுரிமை ஆணையர் டேனியல் தெரியன் தெரிவித்தார்.

    ஃபேஸ்புக் நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளை நிராகரித்து விட்டதாகவும், கனடா நாட்டு விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க தனக்கு அதிகாரம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இதுபற்றி ஃபேஸ்புக் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்ததாக புது தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை மூடி மறைக்க ஃபேஸ்புக் முயற்சித்ததா? என்ற கோணத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதற்கென ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்க தனி ஊழியர்களை நியமித்ததா என ஃபெடரல் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை முழுமையாக மறைக்க முயற்சித்ததாக ஃபெடரல் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் தொடர்புடைய கிரிஸ்டோபர் வைல் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என ஃபெடரல் அதிகாரிகள் கருதுகின்றனர். 



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் கிட்டத்தட்ட 8.7 கோடி பேரின் தகவல்கள் ஃபேஸ்புக் மூலம் கைமாறியைது தனக்கு தெரியாது என்றவாக்கில் அந்நிறுவனம் நீண்ட காலமாக மறுத்து வருகிறது. ஃபேஸ்புக் மூலம் சேகரிக்கப்பட்ட பயனர் விவரங்களை கொண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பளித்து, விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது பல்வேறு அரசு துறைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீதான விசாரணைக்கு ஃபேஸ்புக் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை தெரிவித்து வருகிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் பயனர் விவரங்களை வழங்கிய விவகாரத்தில், அந்நிறுவனம் மீது புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Facebook

     

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் சூக்கர்பர்க் நடந்த விவகாரத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார்.

    இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. 



    இந்த நிலையில், கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் பேஸ்புக் நிறுவனத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பகிர்ந்து கொண்டதற்காக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட அட்டார்னி ஜெனரல் கால் ரேசின் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். 

    இந்த வழக்கின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர் விவரங்களை அதிக கவனமாக கையாளும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என தான் நம்புவதாக ரேசின் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பயனர் விவரங்களின் பாதுகாப்பு குறித்து வழக்கு தொடுத்திருக்கும் அட்டார்னி ஜெனரல் கால் ரேசின் மற்றும் பல அட்டார்னி ஜெனரல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களது குற்றச்சாட்டுகளை பரிசீலனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பேஸ்புக் பயன்படுத்தும் இந்தியர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #CambridgeAnalytica
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக பேஸ்புக் சமூக வலைதளத்திலிருந்து பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டன. 

    பல லட்சம் மக்களின் அரசியல் தொடர்பான விருப்பு மற்றும் வெறுப்புகளை அறிந்து, அதற்கேற்ப அரசியல்வாதிகள் பிரசார யுக்தியை வகுக்கும் வகையில் பிரிட்டனைச் தலைமையிடமாக கொண்ட கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமெரிக்கா மட்டும் அல்லாமல் இந்தியா உள்பட பல நாடுகளின் தேர்தல்களிலும், அனலிடிகா நிறுவனத்தின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

    பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் 5.62 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனமே கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, பேஸ்புக் மற்றும் அனாலிடிகா நிறுவனங்களுக்கு, மத்திய அரசு ஏற்கெனவே நோட்டிஸ் அனுப்பியிருந்தது. 



    இந்நிலையில், மத்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று கூறுகையில்,  இந்தியர்களின் தகவல் திருட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவத்திற்கு மத்திய அரசு தொடர்சியாக அனுப்பிய  பல நோட்டிஸ்களுக்கு அந்நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை. 

    எனவே, கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் சட்டவிரோதமாக இந்தியர்களின்  தகவல்களை திருடியிருக்கலாம் எனும் சந்தேகம் எழுவதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். #CambridgeAnalytica
    தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பிரிட்டன் தகவல் ஆணையம் அபராதம் விதிக்க உள்ளது. #Facebook #databreaches



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் இணைந்து பல லட்சம் பயனர்களின் தகவல்களை சட்ட விரோதமாக பயன்படுத்த அனுமதியளித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சட்ட வல்லுநர்கள் முன் ஆஜராகி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் எவ்வாறு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவிற்கு வழங்கப்பட்டது குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.


    அரசியல் பிரச்சாரங்களில் தகவல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணையை தொடர்ந்து ஃபேஸ்புக் மீது 5,00,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட இருப்பதாக பிரிட்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹாம் தெரிவித்து இருக்கிறார்.

    மக்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் தவறவிட்டதாகவும், தகவல் பயன்பாடு மற்றும் மற்றவர்கள் எவ்வாறு தகவல்களை பெறுகின்றனர் என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை வழங்கவில்லை எனவும் டென்ஹாம் தெரிவித்திருக்கிறார்.


    கோப்பு படம்

    “சமூக வலைதளத்தின் குறிப்பிட்ட பகுதி பயனர்களை, புதுவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்சார நிறுவனங்களை வாக்காளர்களிடம் தொடர்பு கொள்ள வைக்கின்றன. எனினும், இதுபோன்ற வழிமுறைகள் சட்டத்திற்கு எதிரானது,” என டென்ஹாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

    இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் முன் ஃபேஸ்புக் பதில் அளிக்க முடியும். அந்த வகையில் பிரிட்டன் தகவல் ஆணையரின் அறிக்கையில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இதற்கு பதில் அளிப்பதாகவும் ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இதர நாட்டின் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை போன்றே பிரிட்டன் தகவல் ஆணையத்துக்கும் வழங்குவோம்.” என ஃபேஸ்புக் நிறுவன மூத்த பாதுகாப்பு அலுவலர் எரின் எகான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.  #Facebook #databreaches
    ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களுக்கு வாடிக்கையார்களின் தகவல்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் பதில் அளித்துள்ளது. #Facebook #databreach
    வாஷிங்டன்:

    ஸ்மார்ட்போன் தயாரிக்கும் 60 நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் ஒப்பந்தமிட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், சாம்சங், பிளாக்பெரி, அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் ஒப்பந்தமிட்டிருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, இதுவரை பலகட்ட விசாரணைகளில் ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் அந்நிறுவன உயர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். 

    கேம்ப்ரிடஜ் அனாலிடிகா விவகாரம் இன்றளவும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் நிலையில், நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் புதிய குற்றச்சாட்டுக்கள் ஃபேஸ்புக் நிறுவனம் மீது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

    இந்நிலையில் நி யார்க் டைம்ப்ஸ் வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை ஃபேஸ்புக் மறுத்திருக்கிறது. நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்து இருப்பது போன்று ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் அதிகபட்ச தகவல்களை பயன்படுத்த எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் மிக கடுமையாக பாதுகாக்கப்படுவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கும் மென்பொருள் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த மென்பொருளின் தகவல்களை அமேசான், ஆப்பிள், பிளாக்பெரி, ஹெச்டிசி, மைக்ரோசாஃப்ட் மற்றும் சாம்சங் போன்ற 60 நிறுவனங்கள் பயன்படுத்தி வந்ததாக ஃபேஸ்புக் சேவை பிரிவு துணை தலைவர் ஐம் ஆர்கிபாங் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில் வாடிக்கையாளர் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்ததற்கு மாற்றாக ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் நண்பர்கள் தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி பகிர்ந்து கொள்கிறது என குறிப்பிடப்பட்டது. 

    மேலும், சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்களது நண்பர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாமென கேட்டு கொண்ட பின்பும் ரகசியமாக பயன்படுத்தியதாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களை முற்றிலும் மறுக்கும் வகையில், நண்பர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட பயனர்கள் தங்களது சாதனங்களில் அதற்கான அனுமதி அளித்திருந்தால் மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக ஐம் ஆர்கிபாங் தெரிவித்துள்ளார். #Facebook #databreach #SocialMedia
    வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தர முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. #facebook #cambridgeanalitica #facebookcompensation
    பிரசல்ஸ்:

    கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

    இதுதொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய சட்ட வல்லுனர்கள் முன்னிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்தார். அவரது விளக்கத்தில் சட்டவல்லுனர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் சட்டவல்லுனர்களுக்கு இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நம்பிக்கை துரோகம் தான் என்றும், இருப்பினும் வங்கி விவரங்கள் ஏதும் பரிமாறப்படவில்லை என்றும், ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது எனவும் தனது அறிக்கையில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. #facebook #cambridgeanalitica #facebookcompensation
    பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். #europeanparliament #markzuckerberg
    பிரசல்ஸ்:

    கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், பேஸ்புக் நிறுவனமும் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

    இந்நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆலோசனை நடத்தி உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

    இதுதொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற அவைத்தலைவர் அந்தோனியோ டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வாரத்தில் 8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Facebook #europeanparliament #markzuckerberg
    ×