என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ma Subramanian"
- கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
- கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை.
செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த துறையை சேர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை அடுத்தப்படியாக செங்கல்பட்டில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதனை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை, ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் 2, 3 சதவீதத்திலேயே பாதிப்பு விகிதம் உள்ளது. கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்த போதிலும், 12 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 77.02 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அவர்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
15 மாவட்டங்களுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி 80 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருக்கிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிற 12-வது மெகா தடுப்பூசி முகாமுக்கு பிறகு, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மேலும், இனி வாரத்துக்கு ஒரு முறை தடுப்பூசி முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 920 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4,527 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 573 பேர் தற்போது சிகிச்சையில் இருக்கின்றனர்.
சென்னை திருவொற்றியூர் எண்ணூரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசியை 38 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி ஏறத்தாழ 72 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு பட்டியல் தயாரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை நடந்த 9 மெகா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரத்து 883 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 97.5 சதவிகிதம் உயிர் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே 4-வது அலை, 5-வது அலை என்று வந்தாலும் உயிரிழப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும்.
அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் 2 ஆயிரம் இடங்களில் தொடங்கப்படும் என்று முடிவெடுத்து 1,700 இடங்களில் நிறுவினார்கள். இவர்களுடைய நோக்கம் 2 ஆயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக் என்று பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதுதான். ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்பதோ, மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதோ நோக்கம் கிடையாது. 1,700 அம்மா மினி கிளினிக்குகளில், 1,700 டாக்டர்களை தற்காலிகமாக நியமித்தார்கள். ஆனால் அதில் ஒரு மினி கிளினிக்கில் கூட ஒரு நர்சு கூட நியமிக்கவில்லை.
அம்மா மினி கிளினிக்குகளில் நியமித்த டாக்டர்களை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பழிவாங்கவில்லை. மாறாக அவர்களை கொரோனா பணிக்கு பயன்படுத்தினார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கிய அம்மா மினி கிளினிக் மூலம் எத்தனை பேர் பயன்பெற்றார்கள், என்னென்ன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற கணக்கை எடப்பாடி பழனிசாமி காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், நாள்பட்ட நோய்கள், டயாலிசிஸ், பிசியோதெரபி போன்ற நோய்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை மற்றும் மருத்துவம் பார்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 41 லட்சத்து 42 ஆயிரத்து 843 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயன் அடைந்திருக்கிறார்கள். டெங்குவினால் 4 ஆயிரத்து 381 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 541 பேர் மட்டும்தான் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் 2017-ம் ஆண்டு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சென்னை நொச்சிக்குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தடுப்பூசி போடும் பணிகள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகளின் வாயிலாக சுமார் 2,800 இடங்களில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்பிறகு வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை தொடங்கி இதுவரை 7 தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டு அது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.
கடந்த 2-ந் தேதி மதுராந்தகம் அருகே சித்தாமூர் பக்கத்தில் உள்ள நல்லம்பாளையம் கிராமத்தில் வீடு தேடி நடமாடும் வாகனங்களின் மூலம் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் பணி இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில்தான் முதன் முதலாக தொடங்கப்பட்டது.
மேலும் விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கிராமங்கள் தோறும் வாகனங்களில் சென்று தடுப்பூசி போடும் பணியினை கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கினார்கள்.
தடுப்பூசி போடும் பணியில் ஒருவரைகூட தவற விட்டுவிடக்கூடாது என்ற வகையில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அதற்கு ஏற்ப கடந்த 2-ந்தேதி நல்லாம்பாளையம் கிராமத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. அதற்கு மறுநாள் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு காணொலி கூட்டத்தில் வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை அவரும் வலியுறுத்தினார்.
அந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். ஓரிரு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 70 ஆயிரத்து395 பேர். கோவேக்சின் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 9 ஆயிரத்து 903 பேரும், கோவிஷீல்டு 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 60 ஆயிரத்து 392 பேரும் ஆவர்.
சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சி கமிஷனர் இன்று சென்னை பல்வேறு பகுதிகளில் யாருக்கெல்லாம் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டும், யாருக்கெல்லாம் முதல் தடுப்பூசி போட வேண்டும் என்ற பட்டியலை தயாரித்து இருக்கிறார்.
அந்த வகையில் இன்று நொச்சிக்குப்பம் பகுதியில் 536 வீடுகள் இருக்கிறது. இதில் 24 வீடுகள் கதவு அடைக்கப்பட்டு இருக்கிறது. 2956 பேர் இருக்கிறார்கள்.
771 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. 557 பேருக்கு 2-வது தவணை போடப்பட்டு இருக்கிறது. இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 998. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியினை நாங்கள் நொச்சிக்குப்பத்தில் தொடங்கி வைத்து இருக்கிறோம். அலுவலர்கள் வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணியினை நிறைவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பொறுமையாக எடுத்து பேசி தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை அலுவலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் தினமும் 30 ஆயிரத்தை கடந்த அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் நேற்று 75 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ரஷ்யாவில் 40 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இங்கிலாந்தில் 36 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. சிங்கப்பூரில் 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. பிரான்சில் 9 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ஜெர்மனியில் 30 ஆயிரம், துருக்கியில் 26 ஆயிரம் என உலக அளவில் பெரிய அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்று. எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த பணியை தொடர்ந்து பெசன்ட்நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்.
தினந்தோறும் வார நாட்களில் இந்த பணி நடைபெறும். வருகிற 14-ந்தேதி 8-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் தாராளமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 100 சதவீத வாக்காளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். அதனால்தான் வாரங்கள் தோறும் வீடுகளில் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
ஆகஸ்டு 5-ந்தேதி தமிழக முதல்வர் கிருஷ்ணகிரியில் “மக்களை தேடி மருத்துவம்” என்று ஒரு திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் இதுவரை 32 லட்சத்து 36 ஆயிரத்து 622 பேர் பயன் அடைந்துள்ளனர். அந்த திட்டத்தின்படி பயனாளிகளை கண்டறிவதற்கு வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணி ஒரு பயன் உள்ள திட்டமாக அமையும்.
பல்வேறு வீடுகளில் கேட்டு வருகிற போது ஒரு பெண் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது என்று கூறினார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து அளிக்க தயாராக உள்ளார்.
வீடு தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளோம். தவறு தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என்பதையும் கண்டறிய சொல்லி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தொடக்க பள்ளியிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று வருகை தந்தனர்.
அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்பு வழங்கி வரவேற்றார். அப்போது தென்சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 31 சதவீதம் பேருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. முதல் தவணை 100 சதவீதம் பேருக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2-வது தவணை தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் இந்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. வழங்கியதும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த மாதங்களில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடபட்டது. தற்போது வார நாட்களில் கொரோனா தடுப்பூசி போடுகிறவர்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்ற வகையில் 70 முதல் 80 கிராமங்களுக்கும் டாக்டர், செவிலியர் என மருத்துவ குழு வாகனத்தில் நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை நாளை (இன்று) செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்க உள்ளேன். அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. எனவே கட்டுப்பாட்டை தற்போது தளர்த்த வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு தடுப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...கனமழை எதிரொலி - கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாரத்தான் ஓட்டத்தில் சதம் அடித்து, பெருமிதம் அளித்திடும் சாதனை படைத்திருக்கும் தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியனுக்கு எனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரிடம் நாம் கற்றுக்கொண்ட கொள்கை நேர்த்தியும், மன உறுதியும், நேர்மையும் தான் நம் எல்லோரையும் எப்போதும் எள்ளளவும் சோர்வின்றி வழி நடத்துகிறது.
அதில் மா.சுப்பிரமணியன் தனிச்சிறப்புக்குரியவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். காலையில் உடற்பயிற்சி செய்வதை நான் தவறாமல் பின்பற்றி வருகிறேன். நடைப்பயிற்சி மேற்கொள்வதும் இயல்பு. அப்போது என்னுடன் வரக் கூடியவரான மா.சுப்பிரமணியன், இணையாகவும் வேகமாகவும் நடந்து வருபவர். உடற்பயிற்சியால் உடல் நலத்தைப் பேணிக்காப்பதில் அக்கறை உள்ளவர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோயினை எதிர்கொண்டு வரும் மா.சுப்பிரமணியன், 2004-ம் ஆண்டில் சாலை விபத்தில் சிக்கி வலது கால் மூட்டு துண்டுகளாக சிதறும் நிலைக்கு ஆளானவர். அதன்பிறகு அறுவை சிகிச்சைகளினால் மீண்டவர்.
அப்படிப்பட்ட நிலையிலும், மன உறுதி தளராமல் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி முதன் முதலாக 21.1 கி.மீ. தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 18 மாநிலங்களில் நடந்த பல மாரத்தான் போட்டிகளிலும், 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடந்த மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று ஓடியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் 99 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை பெசன்ட் நகரில் தனது 100-வது மராத்தான் போட்டியை நிறைவு செய்திருப்பது அவருக்கான தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்ல, இளைய தலைமுறைக்கு எந்நாளும் ஊக்கம் தரும் ஏற்றமிகு முயற்சியாகவும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாரத்தான் போட்டியுமே ஏதோ ஒரு சமூக விழிப்புணர்வுக்காகவே நடந்துள்ளது. அதில் நீண்ட தூரம் ஓடுவதன் முலமாக அந்த உணர்வை பொதுமக்களும் பெறச் செய்வதுடன், இளைஞர்களும் தன்னைப் பின் தொடர்ந்து இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் ஊக்கத்தையும் மா.சுப்பிரமணியன் ஏற்படுத்தி இருக்கிறார்.
பொதுநல நோக்கத்துடன் ஒவ்வொரு முறையும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல கிலோ மீட்டர் தூரம் ஓடி வரும் மா.சுப்பிரமணியன் தனது 100-வது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்திருப்பது, அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் உயிர்த்துடிப்புள்ள சாதனையாகும்.
மா.சுப்பிரமணியனுக்கு தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், கழக இளைஞர்களும் தமிழ் நாட்டின் இளைய தலைமுறையினரும் தங்கள் உடல் நலனைத் தக்கப்படிப் பேணி, அதனை பொதுநலனுக்கு உரிய முறையில் நெடுங்காலம் பயன்படும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #Marathon #MaSubramanian #MKStalin
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் இன்று பெசன்ட்நகரில் நடந்த 21.1 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினார்.
பெசன்ட்நகர் ஆல்காட் பள்ளியில் போட்டி தொடங்கியது. 21.1 கிலோ மீட்டர் தூரம் ஓடி அதே இடத்தில் போட்டியை நிறைவு செய்தனர். இந்த தூரத்தை மா.சுப்பிரமணியன் 2.31 மணியில் ஓடி முடித்தார்.
மா.சுப்பிரமணியனுக்கு இது 100 வது போட்டி ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருப்பவர். 2004-ல் நடந்த சாலை விபத்தில் கால் உடைந்தது.
5 ஆண்டுகளில் 25 முறை 21.1கி.மீ. தூரம் பங்கேற்று ஓடியதற்காக, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற 21.1 கி.மீ. தூரம் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு 29-வது மாரத்தான் போட்டியை முடித்து ஆசியா புக் ஆப் ரெக்கார்டு 50-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்து, வேல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டியால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார்.
மேலும் இண்டர் நேஷனல் கோல்டன் டிஸ்க் விருதை வேல்டு ரெக்கார்டு யூனியன் வழங்கியது. வேல்டு கிங் டாப் ரெக்கார்டு 2018 எனும் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
இம்மாரத்தான் சாதனைகளைப் பாராட்டி திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
மாரத்தான் போட்டிகளில் சாதனை படைத்த மா.சுப்பிரமணியனுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். #Marathon #MaSubramanian
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்