என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

மாரத்தான் ஓட்டத்தில் சாதனை - மா.சுப்பிரமணியனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாரத்தான் ஓட்டத்தில் சதம் அடித்து, பெருமிதம் அளித்திடும் சாதனை படைத்திருக்கும் தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியனுக்கு எனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரிடம் நாம் கற்றுக்கொண்ட கொள்கை நேர்த்தியும், மன உறுதியும், நேர்மையும் தான் நம் எல்லோரையும் எப்போதும் எள்ளளவும் சோர்வின்றி வழி நடத்துகிறது.
அதில் மா.சுப்பிரமணியன் தனிச்சிறப்புக்குரியவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். காலையில் உடற்பயிற்சி செய்வதை நான் தவறாமல் பின்பற்றி வருகிறேன். நடைப்பயிற்சி மேற்கொள்வதும் இயல்பு. அப்போது என்னுடன் வரக் கூடியவரான மா.சுப்பிரமணியன், இணையாகவும் வேகமாகவும் நடந்து வருபவர். உடற்பயிற்சியால் உடல் நலத்தைப் பேணிக்காப்பதில் அக்கறை உள்ளவர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோயினை எதிர்கொண்டு வரும் மா.சுப்பிரமணியன், 2004-ம் ஆண்டில் சாலை விபத்தில் சிக்கி வலது கால் மூட்டு துண்டுகளாக சிதறும் நிலைக்கு ஆளானவர். அதன்பிறகு அறுவை சிகிச்சைகளினால் மீண்டவர்.
அப்படிப்பட்ட நிலையிலும், மன உறுதி தளராமல் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி முதன் முதலாக 21.1 கி.மீ. தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 18 மாநிலங்களில் நடந்த பல மாரத்தான் போட்டிகளிலும், 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடந்த மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று ஓடியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் 99 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை பெசன்ட் நகரில் தனது 100-வது மராத்தான் போட்டியை நிறைவு செய்திருப்பது அவருக்கான தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்ல, இளைய தலைமுறைக்கு எந்நாளும் ஊக்கம் தரும் ஏற்றமிகு முயற்சியாகவும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாரத்தான் போட்டியுமே ஏதோ ஒரு சமூக விழிப்புணர்வுக்காகவே நடந்துள்ளது. அதில் நீண்ட தூரம் ஓடுவதன் முலமாக அந்த உணர்வை பொதுமக்களும் பெறச் செய்வதுடன், இளைஞர்களும் தன்னைப் பின் தொடர்ந்து இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் ஊக்கத்தையும் மா.சுப்பிரமணியன் ஏற்படுத்தி இருக்கிறார்.
பொதுநல நோக்கத்துடன் ஒவ்வொரு முறையும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல கிலோ மீட்டர் தூரம் ஓடி வரும் மா.சுப்பிரமணியன் தனது 100-வது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்திருப்பது, அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் உயிர்த்துடிப்புள்ள சாதனையாகும்.
மா.சுப்பிரமணியனுக்கு தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், கழக இளைஞர்களும் தமிழ் நாட்டின் இளைய தலைமுறையினரும் தங்கள் உடல் நலனைத் தக்கப்படிப் பேணி, அதனை பொதுநலனுக்கு உரிய முறையில் நெடுங்காலம் பயன்படும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #Marathon #MaSubramanian #MKStalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
