search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khalistan Supporters"

    • காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சீக்கியர் ஒருவருக்கு சொந்தமான கார்கள் சேதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இங்கிலாந்தில் உணவகம் நடத்தி வருபவர் ஹர்மன் சிங். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டு முன்பு 2 கார்களை நிறுத்தி வைத்து இருந்தார். இந்த கார்களை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. மேலும் கார்களின் முன்புறத்தில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிகப்பு நிற பெயிண்டும் அடிக்கப்பட்டு இருந்தது. இந்த செயலின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியா பதிவிட்டு வந்ததால் கடந்த 6 மாதங்களாக எனக்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் வந்தது. 8 மாதங்களில் 4 முறை நான் தாக்கப்பட்டு உள்ளேன். எனது மனைவி மற்றும் மகளுக்கு பாலியல் தொடர்பாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர் பாக உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. போலீசார் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 

    சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். #RahulGandhi
    லண்டன்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    மேற்கு லண்டனில் உள்ள சவுத் ருசிப்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் உள்ளூர் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். 1,500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் ஆதரவாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்த போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு தொந்தரவு செய்வதற்காக அவர்கள் உள்ளே செல்ல முயன்றனர்.

    பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஓட்டலுக்குள் அனுமதிக்காததால் அவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக ஓட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். #RahulGandhi


    ×