search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kennedy MLA"

    • புதுவை அரசுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கண்டனம்
    • தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் வன்மு றை கலாச்சாரத்தை ஒழிக்க, புதுவை அரசு காலியாக இருக்கின்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு களை ஏற்படுத்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதன் விளைவாக அரசு அறிக்கை வெளியிட்டது.

    குறிப்பாக புதுவை அரசில் இருக்கின்ற குருப்"பி" பணியிடங்களில் எம்.பி.சி. எனப்ப டும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு போலீஸ்துறை உதவியாளர் பணியிடங்கள், போக்குவரத்து துறை ஆய்வாளர் பணியிடங்கள், வேளாண்துறையில் பொறியாளர், வேளாண் அதிகாரி மற்றும் பல்வேறுநிலை அதிகாரிகள், புள்ளியியல் துறையில் திட்டமிடல் அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதன் விளைவாக எதிர்க்கட்சிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியதன் பலனாக என்.ஆர். காங்கிரஸ் அரசு குருப்"பி" பணியிடங்களில் மிகவும் பின்தங்கிய வகுப்பி னருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தது.

    ஆனால் தற்போது வேளாண்துறை அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான தேர்வில் எம்.பி.சி. இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்வு நடத்த கோப்புகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும்

    தலைமை அதிகாரிகள் பா.ஜனதாவின் சித்தா ந்தங்களை செயல்படுத்தும் நோக்கிலே இருக்கிறார்கள் என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும். அதுமட்டு மல்லாமல் சமூக நலத்துறை அமைச்சகம் தேர்வுகள் நடத்த இருக்கின்ற அனைத்து துறைகளுக்கும் குருப் "பி"பணியிடங்களில் எம்.பி.சி. அரசாணை வெளி யிட்டதை அத்துறைகளுக்கு அனுப்பி அதன் அடிப்படை யில் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். இம்மாதிரியான குளறுபடிகள் நடக்கின்றனவோ என்று ஐயம் கொள்ளத் தோன்றுகிறது. முதல்-அமைச்சர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்கள் புதுவை அரசில் தேர்வுகள் நடத்தபட இருக்கின்ற குருப்"பி" பணியிடங்களில் எம்.பி.சி. அடிப்படையில் தேர்வு நடத்திட உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பயனாளிகளுக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதையும் பயனாளிகளிடம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
    • பயனாளிகள் ஒவ்வொருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் உதவித் தொகைக்கான ஆணையை

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ராஜீவ் காந்தி திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவர் இறந்தோருக்கு அரசு உதவித்தொகைக்கு உப்பளம் தொகுதியில் இருந்து 25 பயனாளிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    இந்நிலையில் பயனாளிகள் ஒவ்வொருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் உதவித் தொகைக்கான ஆணையை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.

    பயனாளிகளுக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதையும் பயனாளிகளிடம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தி.மு.க பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், காளப்பன் விநாயகம், ராகேஷ், கோபி, ராஜி, பாஸ்கல், மோரிஸ், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • மழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி பாரதி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் இவ ரது சிமெண்ட் ஓடுபோட்ட வீடு சேதமடைந்து சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த குடும்பத்தினருக்கு வீட்டை சீரமைக்க கென்னடி எம்.எல்.ஏ ரூ.10 ஆயிரம் மற்றும் தார்பாய் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கி ஆறுதல் கூறினார்.

    நிகழ்ச்சியின் போது தி.மு.க கிளை செயலாளர்கள் பஸ்கல், விநாயகமூர்த்தி, இருதயராஜ், ரகேஷ், கவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி, முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் நேதாஜி விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இப்போட்டியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி, முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் நேதாஜி நகர் பெரியபாளையத்தம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் நேதாஜி விளையாட்டு கழக நிர்வாகிகள் தி.மு.க.ஆதிதிராவிட துணை அமைப்பாளர் தங்கவேலு நேதாஜி நகர் தி.மு.க. கிளை செயலாளர்கள் காத்தலிங்கம், ராகேஷ், மற்றும் செழியன், மோகன், பாலாஜி, இசை, பிரதீப், ராஜீ, முத்து, வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெயில் நிலைய அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலைய அதிகாரியை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உப்பளம் தொகுதி க்குட்பட்ட வாணரப்பேட்டை சாலை மற்றும் அம்பேத்கர்சாலை ரெயில்வே லைனையொட்டி உள்ளது. இந்த சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்து ள்ளது. இந்த சாலைகள் வழியேதான் அரசு அலுவலகத்துக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் மாணவர்கள் சென்று வருகிறார்கள். இந்த குண்டும் குழியுமான சாலைகளால் தினமும் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நிகழ்ச்சியின் போது தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதி திராவிடர் துணை அமைப்பா ளர் தங்கவேலு மற்றும் தி.மு.க. கிளை செயலாளர் காத்தலிங்கம், செல்வம், ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து நிலுவையில் உள்ள உதவித்தொகையை பயனாளிகளுக்கு விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு ஆதிதிராவிடர் நல துறை மூலம் தொடர் நோய் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது.

    இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து நிலுவையில் உள்ள உதவித்தொகையை பயனாளிகளுக்கு விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும் உப்பளம் தொகுதியை சேர்ந்த புதிதாக தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இக்கோரிக்கையை ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவன் ஏற்று கொண்டார். அதன்படி உப்பளம் தொகுதியை சேர்ந்த தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜீ, தி.மு.க மூத்த நிர்வாகி ரவி, மீனவர் அணி விநாயகம், கிளை செயலாளர்கள் காத்தலிங்கம், சங்கரநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரியிடம் மனு
    • பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகளுக்காக கல்யாண மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சிக்கு சொந்தமான குபேர் மண்டபம் உள்ளது.

    இந்த மண்டபத்தை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புரணமைக்க இந்த நிதி ஆண்டில் டெண்டர் விட வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டிருந்தார்.

    இக்கோரிக்கையை ஏற்று டெண்டர் விடப்பட்டு 2024 கட்டுமான பணி முடித்து தரப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார். ஆனால் டெண்டர் இன்னும் விடப்படவில்லை. இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    மனுவில் விரைவில் டெண்டர் வைத்து பணியை தொடங்க நடவடிக்கை எடுப்பதோடு உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகளுக்காக கல்யாண மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    நிகழ்ச்சியின் போது தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம் ராகேஷ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இருதயராஜ், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ராகேஷ், கழக சகோதரர்கள் சக்திவேல், பத்தாவச்சலம், பஸ்கல் ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தெப்பக்குளம் வீதியில் உள்ள தட்சணா மூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், புத்தகங்கள் மற்றும் சீருடை களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊர் பஞ்சாயத்தாரர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ராஜி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் காலப்பன் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் சக்திவேல், பத்தாவச்சலம், பஸ்கல் ஆகியோர் பங்கேற்றனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • குழந்தைகளுக்கு உணவும், செவித்திறன் குறைந்த மாற்று திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக உப்பளம் தொகுதி தி.மு.க. பிரமுகர் நோயல் ஏற்பாட்டின் பேரில் புதுவை கிருஷ்ணாநகரில் உள்ள ஜாலிஹோம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவும், செவித்திறன் குறைந்த மாற்று திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கினார்.

    இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்தி, நிர்வாகிகள் ராகேஷ், செல்வம், மரி, பஸ்கல், ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உறுதுணையாக இருந்த சமூக, பசுமை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
    • நகராட்சி சுகாதார துறை அதிகாரி துளசிராமன், கோத்ரெஜ் நிறுவனத்தின் மேலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    இந்தியாவில் தூய்மை யான கடற்கரை நகரங்களில் ஒன்றாக புதுவையை மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்திட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தூய்மையான புதுைவயை உருவாக்க கடந்த ஆண்டு நம்ம பாண்டி கிளீன் அறிமுகம் செய்திருந்தது.

    அதன் தொடர்ச்சியாக செயல்திட்டத்தினை அறிவித்ததை போல 75-வது நிகழ்ச்சிகளை நிறைவு செய்தது. இந்நிகழ்ச்சிக்கான உறுதுணையாக இருந்த சமூக, பசுமை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. க்கள் அனிபால் கென்னடி, சம்பத், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி சுகாதார துறை அதிகாரி துளசிராமன், கோத்ரெஜ் நிறுவனத்தின் மேலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரசு விழாவில் கென்னடி எம்.எல்.ஏ. பேச்சு
    • நகர்ப்புற பகுதி யில் நிலத்தடி நீரில் உள்ள டி.டி.எஸ். அளவு குறைய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதுவை நகர்ப்புறத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. நகர்ப்புற மக்களை கிராமப்புற மக்களால்தான் காப்பாற்ற முடியும்.

    கர்நாடகா தான் நமக்கு தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள் என்றால், கிராமப்புறத்தில் உள்ள மக்கள் கூட தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள்.

    கிராமப் புற மக்கள்தான் நகர்ப்புறத் திற்கு வருகிறார்கள். குடிநீர் மிகவும் முக்கியம். எனவே நகர்ப்புற பகுதியில் நிலத்தடி நீரில் உள்ள டி.டி.எஸ். அளவு குறைய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினையையும் தீர்த்து வைக்க வேண்டும்.

    உப்பனாறு வாய்க்கால், பெரிய வாய்க்காலை தூர் வாரவேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் உத்தரவு போட வேண்டும். அவர் உத்தரவிட்டாலும் அதிகாரிகள் செய்யாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.

    இதுகுறித்து கேட்டால் நிதி இல்லை என்கிறார்கள். சுற்றுச்சூழல்தினவிழா நடத்தினால் மட்டும் போதாது. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் போடும் உத்தரவுபடி அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    வம்பாகீரப்பா ளையத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் கடற்கரையோ ரம் கற்களை கொட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் அதிகாரிகளை அழைத்து ஊரை சுத்தமாகவும், அழகா கவும் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செல்லப்பன், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியை சேர்ந்த மீனவர் மற்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்ட மீனவ முதியவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரி அய்யனார், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், பொருளாளர் மணிமாறன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செல்லப்பன், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்

    ×