என் மலர்
நீங்கள் தேடியது "Kennedy MLA"
- உப்பளம் தொகுதி அகத்தியர் நகர் விரிவு திருவள்ளுவர் வீதியில் பல ஆண்டுகளாக அங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதாள வடிகால் இல்லாமல் இருந்தது.
- இதையடுத்து, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளரிடம், எம்.எல்.ஏ. தெரிவித்து, பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி அகத்தியர் நகர் விரிவு திருவள்ளுவர் வீதியில் பல ஆண்டுகளாக அங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதாள வடிகால் இல்லாமல் இருந்தது. இதனை அப்பகுதி மக்கள், ஒப்பந்ததாரர் சிவா, உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் தெரிவித்து, பாதாள வடிகால் அமைத்து தர கோரினர்.
இதையடுத்து, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளரிடம், எம்.எல்.ஏ. தெரிவித்து, பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தார். மேலும், ெதாடர்ச்சியாக பொதுப் பணித்துறையை அணுகி, பாதாள வடிகால் அமைத்துத்தர வலியுறுத்தினார்.
எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று, பாதாள வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜை திருவள்ளுவர் வீதியில் நடந்தது. இப்பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் பிரிவு துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி, துணை அமைப்பாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ், கவுதமன், பீட்டர், பாலாஜி, மோரிஸ், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாக்கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப-வடிவ வாய்க்கால் மழைக்காலங்களில் தொட ர்ச்சியாக அடைப்புகள் ஏற்பட்டு அங்குள்ள வீடுகளில் அடிக்கடி தண்ணீர் நிரம்பி விடும்.
- ரூ.10 லட்சம் செலவில் ப-வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாக்கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப-வடிவ வாய்க்கால் மழைக்காலங்களில் தொட ர்ச்சியாக அடைப்புகள் ஏற்பட்டு அங்குள்ள வீடுகளில் அடிக்கடி தண்ணீர் நிரம்பி விடும்.
இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் சட்டமன்ற நிதியின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் ப-வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர் மணிகண்டன், மணிமாறன், காலப்பன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உப்பளம் தொகுதி நேதாஜிநகர் 1-ல் அசோகன் வீதியில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்தனர்.
- இதை தொடர்ந்து 500கி.லோ வாட் கொண்ட புதிய மின் தாங்கி உடனடியாக பொருத்தப்பட்டது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி நேதாஜிநகர் 1-ல் அசோகன் வீதியில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்தனர். இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் மின் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.
இதை தொடர்ந்து 500கி.லோ வாட் கொண்ட புதிய மின் தாங்கி உடனடியாக பொருத்தப்பட்டது. மின் துறை செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சுரேஷ், ஆகியோரது முயற்சியால் புதிய மின் தாங்கி பொருத்தப்பட்டது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வீரவள்ளி, பெரியபள்ளி ஆகிய இடங்களில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
- மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அனைத்து வாய்க்கால்களையும் சீர் செய்து தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.அறிவுறுத்தினார்.
புதுச்சேரி
புதுவையில் கனமழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியது.
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வீரவள்ளி, பெரியபள்ளி ஆகிய இடங்களில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அடைக்கப்பட்டு இருந்த வாய்க்கால்களை தி.மு.க.வினரின் உதவியுடன் சுத்தம் செய்தார்.
அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் உடனிருந்தனர்.
அதேபோல், குபேர் மன்றம் எதிரேவுள்ள வய்க்கால் குப்பைகளால் அடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், இதனை சரிசெய்து கொடுக்கும்படி, சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் கென்னடி எம்.எல்.ஏ. முறையிட்டார்.
மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அனைத்து வாய்க்கால்களையும் சீர் செய்து தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.அறிவுறுத்தினார்.
3நாட்களுக்குள் அனைத்தையும் சரி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, தொழில்நுட்ப அணி சுகுமார், கிளை செயலாளர் அசோக், ரகுமான், பாரதி வீதி ராஜா சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள கழிவுநீர் சாக்கடை அம்பேத்கர் சாலை மட்டத்தை விட உயரமாக அமைந்துள்ளது.
- மேலும் இதனால் வாக னங்கள் நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் குறைந்து போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள கழிவுநீர் சாக்கடை அம்பேத்கர் சாலை மட்டத்தை விட உயரமாக அமைந்துள்ளது.
எனவே கழிவுநீர் சாக்கடையை சீரமைத்து சாலை மட்டத்திற்கு அமைத்து கொடுக்கும்படி பெத்தி செமினர் முதல்வர் பஸ்கல் ராஜ் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர் மற்றும் இளநிலை பொறியாளர் வேல்முருகன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
மேலும் இதனால் வாக னங்கள் நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் குறைந்து போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும்.
எனவே உடனடி நடவடிக்கை எடுத்து சாக்கடையை சீரமைத்து தருமாறு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளை வைத்துக்கொண்டு பஸ்கல் ராஜியிடம் செல்போனில் பேசி இதற்கான தீர்வு காணப்பட்டது.
அதாவது பள்ளியின் இரு நுழைவு வாயில்களிலும் இரும்பு பாலம் அமைத்து போக்குவரத்து தடையின்றி இயங்கிட பள்ளி நிர்வாகமே செலவிட ஒப்புக்கொண்டது. இதில் அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ் கவுதமன், லாரன்ஸ், ரகுமான், மதி ஆகியோர் உடன் இருந்தனர்.
- புதுவை விடுதலை நாளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாநிலம் முழுமையான விடுதலை அடைய மாநில அந்தஸ்தினை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
- மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை விடுதலை நாளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாநிலம் முழுமையான விடுதலை அடைய மாநில அந்தஸ்தினை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. புதுவை சட்டப்பேரவையில் ஏறக்குறைய 13 முறை தீர்மானங்கள் பல்வேறு அரசுகளால் மாநில அந்தஸ்து வேண்டி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுகளுக்கு அனுப்பியும் இதுவரை நமக்கான அதிகார விடுதலை இன்னும் கிடைக்கவில்லை.
புதுவை மாநிலம் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் பல நெருக்கடிகளை தற்பொழுது சந்தித்து வருகிறது. புதுவை மாநிலத்தை நிதிக் குழுவில் சேர்த்து, நமக்கான வரி வருவாய் பங்கினை முறையாக, உரிமையாக, அளிப்பதில் கூட மத்திய அரசு இதுநாள்வரை முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய செயலாகும்.
மாநிலத்தில் நிலவுகின்ற பல்வேறு முக்கியமான பிரச்சனைகளை உடனுக்கு டன் தீர்ப்பதற்கு, நமக்கு நிதி அதிகாரமும் இல்லை. நிர்வாக அதிகாரமும் இல்லை என்பதனை உணர்ந்துதான் முதல்-அமைச்சர் நமது மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார்.
கூடாநட்பு கேடாய் முடியும்! என்பது போல மாநிலத்தின் அரசு வேலை வாய்ப்பு பணியிடங்களை ஏதோ மத்திய அரசு சொல்லித்தான் நிரப்பப்பட உள்ளது போன்ற ஒரு தவறான கண்ணோட்டத்தினை மக்கள் மத்தியில் விதைக்க பா.ஜனதாவினர் முயல்வது போன்ற ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் புதுவை முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.
சென்ற 2 சட்டமன்ற கூட்டத் தொடர்களிலும் தி.மு.க. மற்றும் பிரதான கட்சிகள் வைத்த கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் அரசு பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சார் முயற்சி எடுப்பதை கூட பா.ஜனதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி மத்திய உள்துறை மந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கை மனுவை நேரடியாக அளிக்க வேண்டும்.
பொது வெளியில் மாநில அந்தஸ்து வேண்டும் என கூறுவதை விட்டுவிட்டு அதற்கான முன்னெடுப்புகளை உண்மையாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் பாதாள வடிக்கால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து நீச்சல் குளம் போல் காட்சியளிக்கும் கழிவு நீரில் அப்பகுதி குழந்தைகள் குளித்து வரும் சுகாதார குறைவு ஏற்பட்டது.
- பாதாள வடிகால் மாதா கோவிலில் இருந்து தெப்பக்குளத்தில் இணைகிறது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் பாதாள வடிக்கால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து நீச்சல் குளம் போல் காட்சியளிக்கும் கழிவு நீரில் அப்பகுதி குழந்தைகள் குளித்து வரும் சுகாதார குறைவு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு அவர் நேரில் சென்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதனிடம் தெரிவித்துவிட்டு இளநிலை பொறியாளருடன் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.
பாதாள வடிகால் மாதா கோவிலில் இருந்து தெப்பக்குளத்தில் இணைகிறது. அதனை அதற்கு மாறாக மாதா கோவிலில் இருந்து லெசார் கோவிலில் இணைத்து விட்டால் வடிகால் மழை நீரில் கலந்து தேங்கி நிற்காது என்று ஆய்வின் போது தெரிந்து கொண்டனர்.
இப்பணியை விரைவாக முடிக்குமாறு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதி காரியிடம் அறிவுறுத்தினார்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி மூலம் எல்-வடிவ வடிகாலை அப்பகுதியில் அமைத்து கொடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
அப்பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும். என்று தெரிவித்தார் இது குறித்து உதவி பொறியாளர் பிரபாகரனுடன் ஆலோ சனை மேற்கொண்டார்.
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட கத்தினால் புஷெட் வீதியில் உள்ள சூர்யா ஹோமில் பாதாள வடிகால் வழிந்து நிரம்புவதாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. கென்னடியிடம் அந்நிறுவனம் புகார் அளித்தது.
- வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் மற்றும் முதல் குறுக்கு தெரு யூ வடிவ மற்றும் எல் வடிவ வாய்க்கால் மற்றும் பாதாள வடிக்கால் நிரம்பி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட கத்தினால் புஷெட் வீதியில் உள்ள சூர்யா ஹோமில் பாதாள வடிகால் வழிந்து நிரம்புவதாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. கென்னடியிடம் அந்நிறுவனம் புகார் அளித்தது.
மேலும் கவுசீக பாலசுப்பிரமணியர் கோவில் பகுதி, மோரிசன் வீதி, பாதர் சாஹிப் வீதி, பாரதி வீதி, வ.உ.சி வீதி, ஜீவானந்தம் வீதி, ராசு உடையார் தோட்டம், ரெயில் நிலையம் இணைப்பு வாய்க்கால், சுப்பையா சாலை, தூய இருதய ஆண்டவர் பள்ளி ஆகிய இடங்கள், வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் மற்றும் முதல் குறுக்கு தெரு யூ வடிவ மற்றும் எல் வடிவ வாய்க்கால் மற்றும் பாதாள வடிக்கால் நிரம்பி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.
உடனே பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வரவழைத்து பாதாள வடிகால் கழிவு நீரை உறிஞ்சி எடுக்கும் இயந்திர வாகனம் மூலமும், மற்றும் பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வாய்க்கால் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
இப்பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- புதுவையில் பருவ மழையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயார் நிலையில் உள்ளார்களா? அவர்களுக்கு அடிப்படை தேவை ஏதேனும் தேவைப்படுகின்றதா?
- அப்பொழுது சாய்ந்த மரங்களை அவர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் கொண்டு அப்புறப்படுத்தினார்.
புதுச்சேரி:
புதுவையில் பருவ மழையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயார் நிலையில் உள்ளார்களா? அவர்களுக்கு அடிப்படை தேவை ஏதேனும் தேவைப்படுகின்றதா? என்று புதுவை மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி ஆய்வு மேற்கொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.
உப்பளம் தொகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா! மரம் எங்காவது சாய்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறதா! என்று கள நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார். அப்பொழுது சாய்ந்த மரங்களை அவர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் கொண்டு அப்புறப்படுத்தினார்.
மேலும் இத்தொடர் மழை பொழிவு நேரங்களில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை , சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறை ஆகிய அதிகாரிகள் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதுகாப்பு அளித்து துரிதமாகவும், போர்க்கால அடிப்படை யிலும் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.
இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் காலப்பன் மற்றும் ராகேஷ் கவுளதம், ஹரிகிருஷ்ணன், செழியன், பாலாஜி, முத்து, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்த விதமான தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சரிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தோம்.
- புதுவை அரசு தலைமை செயலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தலைமை செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க . துணை அமைப்பாளர் அனி பால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக முதல்-அமைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அரசின் நிர்வாகம் சென்று கொண்டுள்ளது. பொருளாதாரத்தின் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீடு, மின்துறை தனியார் மயம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளில் மாநில நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்த விதமான தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சரிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தோம். அதிகாரிகளை அழைத்து பேசியும் இதுவரை தீர்வு எதுவும் காணப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்பது துரதிஷ்டவ சமானது.
தமிழகத்தில் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நூற்றாண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அனைத்து கட்சி கூட்டத்தில் சொல்லிய தோடு நில்லாமல் மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் ஒருபோதும் இந்த இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்படாது என திட்டவட்டமாக கூறி விட்டார்.
புதுவை அரசு தலைமை செயலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தலைமை செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பது நியாயமா? பா.ஜனதா கூட்டணி அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பா.ஜனதா ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தின் அரசு வேலை வாய்ப்பில் அமல் படுத்தப்படவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் மாநிலங்கள் இதனை அமல்படுத்த வேண்டும் என்று கட்டாய உத்தரவும் பிறப்பிக்கவில்லை. புதுவை மாநிலத்தில் ஏழை என்பவர்கள் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமானம் உள்ளவர்கள் என்று அரசு நிர்ணயித்துள்ளது.
ஆனால் மத்திய அரசோ முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் ஏழைகள் என்பவர்கள் ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் என்று புதுவிதமான கணக்கினை வகுத்துள்ளது. இந்த கணக்கை மாநில அரசு அமல்படுத்திட முடியுமா?
எனவே முதல்-அமைச்சர் கடந்த 4-ந் தேதி அனைத்து கட்சி தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டார் பெரும்பான்மை மக்களின் கோபத்துக்கு இந்த அமைச்சரவை ஆளாக நேரிடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3-ல்அறப்பணிஅவ்வை தோட்டத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இருந்த மண்டபம் பழுதடைந்து இடிந்து விழுந்தது.
- அதனை நகராட்சியை சட்டரீதியாக அணுகி துரிதமான முறையில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3-ல்அறப்பணிஅவ்வை தோட்டத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இருந்த மண்டபம் பழுதடைந்து இடிந்து விழுந்தது. தற்போது அங்கு அரசமரம் வளர்ந்து அருகில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர்.
அவ்விடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முயற்சியால் வர இருக்கிறது.
அதனை நகராட்சியை சட்டரீதியாக அணுகி துரிதமான முறையில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.
இதில் அப்பகுதியை சுற்றியுள்ள ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.க. காளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் அசோகன் வீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
- இதற்கான பூமி பூஜையில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டுபணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் அசோகன் வீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து புதுவை நகராட்சி மூலம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சம் செ லவில் அசோ கன் வீதியில் சிமெண்டு சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டுபணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






