என் மலர்
புதுச்சேரி

புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த காட்சி.
புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் -கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
- உப்பளம் தொகுதி நேதாஜிநகர் 1-ல் அசோகன் வீதியில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்தனர்.
- இதை தொடர்ந்து 500கி.லோ வாட் கொண்ட புதிய மின் தாங்கி உடனடியாக பொருத்தப்பட்டது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி நேதாஜிநகர் 1-ல் அசோகன் வீதியில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்தனர். இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் மின் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.
இதை தொடர்ந்து 500கி.லோ வாட் கொண்ட புதிய மின் தாங்கி உடனடியாக பொருத்தப்பட்டது. மின் துறை செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சுரேஷ், ஆகியோரது முயற்சியால் புதிய மின் தாங்கி பொருத்தப்பட்டது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Next Story






