என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
    X

    கென்னடி எம்.எல்.ஏ. ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய காட்சி.

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • குழந்தைகளுக்கு உணவும், செவித்திறன் குறைந்த மாற்று திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக உப்பளம் தொகுதி தி.மு.க. பிரமுகர் நோயல் ஏற்பாட்டின் பேரில் புதுவை கிருஷ்ணாநகரில் உள்ள ஜாலிஹோம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவும், செவித்திறன் குறைந்த மாற்று திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கினார்.

    இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்தி, நிர்வாகிகள் ராகேஷ், செல்வம், மரி, பஸ்கல், ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×