என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
    X

    ரெயில் நிலைய அதிகாரியை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு அளித்த காட்சி.

    குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

    • ரெயில் நிலைய அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலைய அதிகாரியை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உப்பளம் தொகுதி க்குட்பட்ட வாணரப்பேட்டை சாலை மற்றும் அம்பேத்கர்சாலை ரெயில்வே லைனையொட்டி உள்ளது. இந்த சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்து ள்ளது. இந்த சாலைகள் வழியேதான் அரசு அலுவலகத்துக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் மாணவர்கள் சென்று வருகிறார்கள். இந்த குண்டும் குழியுமான சாலைகளால் தினமும் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நிகழ்ச்சியின் போது தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதி திராவிடர் துணை அமைப்பா ளர் தங்கவேலு மற்றும் தி.மு.க. கிளை செயலாளர் காத்தலிங்கம், செல்வம், ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×