search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kennedy MLA"

    • நீர்பாசனக்கோட்டம் சார்பில் தாவரவியல் பூங்காவில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
    • செந்தில் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ஆட்டுப்பட்டி, ரோடியர்ப் பேட் மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிதண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏஎ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த னர்.

    இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணி த்துறை அதி காரிகளிடம் உடனடியாக தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று வலியுறு த்தினார். இதையடுத்து பொதுப்பணித் துறை நீர்பாசனக்கோட்டம் சார்பில் தாவரவியல் பூங்காவில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளநிலைப்பொறியாளர் வெங்க டேசன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர்கள் ஆறுமுகம், செந்தில் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் வினியோக குழாயுடன் இணைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது.
    • ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி த்துறையால் தொடங்கப்பட்டன.

    புதுச்சேரி:

    வாணரப்பேட்டை, தாமரைநகர் ஜெகநாத படையாட்சி வீதி, கம்பன் வீதி, கோவிந்த செட்டி தோட்டம், அன்னை தெரேசா நகர், ஜெ.ஜெ நகர், பல்லவன் வீதி, இன்ஜினியர் தோட்டம், அன்னை தெரேசா வீதி, காளியம்மன் தோப்பு, அலேன் வீதி, சித்தி விநாயக தோப்பு, கஸ்தூரிபாய் நகர், முருகசாமி நகர், ஈஸ்வரன் கோயில் தோப்பு, ஜெயவிலாஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மோட்டார் பொருத்துதல் மற்றும் குடிநீர் வினியோக குழாயுடன் இணைத்தல் ஆகிய பணிகள் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி த்துறையால் தொடங்கப்பட்டன.

    இந்த பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை , தலைமைப்பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர், பாஸ்கர், உதவி பொறியாளர், வாசு, இளநிலை பொறியாளர். வெங்கடேசன்மற்றும் ஊர் பொதுமக்கள் நாராயணன், ராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன், சேகர், ஜெய ராமன், ஆரோக்கியதாஸ், கலிய பெருமாள், கழக அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
    • செயற்பொறியளர் சிவபாலன், உதவி பொறி யாளர் யுவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு அங்கமாக என்னுடைய மண், என்னுடைய தேசம் என்ற நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் சுதந்திர வீரர்களை நினைவு கூறும் வகையில் அவர்களின் தியாகத்தைப் பற்றி பேசினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், டாக்டர் துளசிராமன், செயற்பொறியளர் சிவபாலன், உதவி பொறி யாளர் யுவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிக சரக்கு கப்பல்கள் வந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்.
    • கிளை செயலாளர் ராகேஷ், தொகுதி இளைஞரணி மரி ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக சரக்கு கப்பல் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  பெரிய அளவிலான சரக்கு கப்பல் துறைமுகத்துக்கு வந்தது.

    இதுகுறித்து அறிந்த உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. துறைமுகத்துக்கு நேரில் சென்று சரக்கு கப்பலை ஆய்வு செய்தார். அப்போது கப்பல் கேப்டன், துறைமுக செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    அப்போது கென்னடி எம்.எல்.ஏ. கூறும்போது, இதுபோல் அதிகப்படியாக சரக்கு கப்பல் போக்குவரத்து சென்று வந்தால் அரசுக்கும் லாபம், தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அமையும். மேலும் அதிக சரக்கு கப்பல்கள் வந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றார்.

    ஆய்வின்போது, தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளை செயலாளர் ராகேஷ், தொகுதி இளைஞரணி மரி ஆகியோர் உடனிருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
    • உப்பளம் தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    மழைக்காலங்களில் புஸ்சி வீதியில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரை சந்தித்து வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என நேரில் சென்று கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்று தற்போது புஸ்சி வீதியில் கழிநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதுபோல் உப்பளம் தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது.

    இதனையும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரிடம் கென்னடி எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

    இந்த சந்திப்பின் போது தி.மு.க. தொகுதி துணை செயலாளர் ஆரோக்கிராஜ், கிளைச்செயலாளர்கள் செல்வம், ராகேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில தி.மு.க. துணை அமை ப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நிர்வாக சீர்திருத்த துறை தற்போது நடந்த மேல்நிலை எழுத்தர் தேர்வில் 116 பணியிடங்கள் மட்டுமின்றி கூடுதலாக 146 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பாணை வெளியிட்டது.

    ஆனால் 116 மேல்நிலை எழுத்தர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

    அரசிடம் ஏற்கனவே உதவியாளர் பணியை தற்போதுள்ள மேல்நிலை எழுத்தர்களை கொண்டு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

    அதுமட்டுமின்றி புதுவை அமைச்சக ஊழியர்கள் கடந்த ஓராண்டாக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பல கட்ட போராட்ட ங்களையும் நடத்தி உள்ளனர்.

    தற்போது அமைச்சக ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வருவதால் புதுச்சேரி நிர்வாக துறை அவர்களின் கோரிக்கையை ஏற்று உதவியாளர் பதவியை தற்போதுள்ள மேல்நிலை எழுத்தர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

    மேலும் முதல்-அமைச்சரும் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி இக்கோரிக்கையை நிறை வேற்றவேண்டும்.

    அதுமட்டு மல்லாமல் தற்போது துறை ரீதியான தேர்வு எனப்படும் யூ.டி.சி.தேர்வினை நடத்தினால் அது உதவியாளர் பணிக்கு நேரடி போட்டித்தேர்வுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே யூ.டி.சி.போட்டித்தேர்விற்கு கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்து வெறும் 116 இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    மேலும் உதவியாளர் தேர்வு நடத்தினால் அதில் வெளிமாநிலத்தவரும் பங்குபெறும் நிலைமை உருவாகும்.

    இது புதுச்சேரி மாநிலத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். எனவே முதல்-அமைச்சர் கடந்த காலங்களில் உள்ள நடைமுறையை பின்பற்றி அரசு ஊழியர்களின் கோரிக்கையை தீர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மின்துறை அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
    • கூடுதலாக ஐ-மாஸ் விளக்குகளை பொருத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி புதுவை மின்துறை அதிகாரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்த்தாய் நகர் பகுதியில் உள்ள புறா குளம், லால் பகதூர் சாஸ்திரி வீதி, மகாத்மா காந்தி வீதி பகுதியில் உள்ள ஐ-மாஸ் விளக்கை சரி செய்ய வேண்டும். அங்கு கூடுதலாக ஐ-மாஸ் விளக்குகளை பொருத்த வேண்டும். மேலும் அங்கு உள்ள காந்தி வீதி, நேதாஜி நகர் 2 ரங்கநாதன் வீதி, அழகர்சாமி வீதி சந்திப்பில் எரியாத தெருவிளக்குகளை சரி செய்வதோடு அப்பகுதியில் புதிதாக கூடுதல் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    மனுவை ஏற்று கொண்ட மின்துறை அதிகாரி இதனை உடனடியாக சரி செய்து தருவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் காளப்பன், ராகேஷ் கவுதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • தந்தை பிச்சை முத்து தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, துப்ராயப்பேட்டையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி காலை 7 மணிக்கு அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு தேர் பவனி நடந்தது.

    தொடர்ந்து, நேற்று முன்தினம் 22-ந் தேதி காலை 6.30 மணிக்கு இருதய ஆண்டவர் உதவி பங்கு தந்தை சின்னப்பன் தலைமையில் திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7 மணிக்கு புதுச்சேரி இருதய ஆண்டவர் பசிலிக்கா பங்கு தந்தை பிச்சை முத்து தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது.

    ஆடம்பர தேர் பவனியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். 

    • கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • கிருமி நாசினி தெளித்து அதன் தொடர்ச்சியாக பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை செயலிழக்க செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட உடையார் தோட்டம் பகுதியில் அப்துல் கலாம் அரசு குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகள் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பார்த்த சாரதி முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றன.

    அதனைத் தொடர்ந்து சுவற்றில் உள்பகுதியில் உள்ள படிந்த பாசிகள் கருவிகள் மூலம் அகற்றப்பட்டது. மேலும் கிருமிகளை அழிக்கும் சிறந்த அம்சங்கள் கொண்ட கிருமி நாசினி தெளித்து அதன் தொடர்ச்சியாக பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை செயலிழக்க செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மீனவரணி விநாயகம், கிளை செயலாளர்கள் சக்திவேல், செல்வம், ராகேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியில் புதுவை நகராட்சி மூலம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்து 40ஆயிரம் செலவில் வாய்க்கால் மற்றும் சிமெண்டு சாலை மேம்படுத்தல் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.

    தற்போது அங்கு வாய்க்கால் கட்டி கான்கிரீட் சிமெண்ட் போட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

    அப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறி யாளர் சண்முகம், பரமானந்தம், தொகுதி செயலாளர் சக்திவேல் அவைத்தலைவர் ஹரிகிரு ஷ்ணன், தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், மற்றம் கிளை செயலாளர்கள் உடன் இருந்தனர்.

    • மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வில்லை என புகார்
    • இது போல் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் புதுவை கடற்கரை சாலை பழைய கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற கென்னடி எம்.எல்.ஏ. தனது தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வில்லை. ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டம் குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என கூறி வெளிநடப்பு செய்தார்.

    உடனே அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய கென்னடி எம்.எல்.ஏ. மக்கள் வேண்டும் என்று கேட்கும் திட்டங்களை கொண்டு வராமல் மக்கள் எதிர்க்கும் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவது வேடிக்கையாக உள்ளது.

    பிரான்சுவா தோப்பில் நவீன கழிவறை கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டும் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அதுபோல் திப்புராயபேட்டையில் நவீன மின் தகன மையம் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இது போல் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் பேசும் போது ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் அளிக்க வேண்டியதும் அவர்களுக்கு பணி செய்வதும் எம்.எல்.ஏ.க்களின் கடமையாகும். எனவே எம்.எல்.ஏ.க்கள் சுட்டிக்காட்டிய பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்துத்தரவேண்டும் என்றார்.

    • பொதுப் பணித்துறை மூலம் சீரமைக்கப்பட்ட உள்ளது.
    • உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி முதலியார்பேட்டை உழந்தை குடியிருப்பில் உள்ள டைப் 2 மற்றும் டைப் 3 வகை குடியிருப்பு கழிப்பறைகளில் கதவுகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பழுதடைந்துள்ளது.

    இதனை ரூ.14.99 லட்சம் மதிப்பில் பொதுப் பணித்துறை மூலம் சீரமைக்கப்பட்ட உள்ளது. இப்பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தனது மனைவி ஜெசிந்தாவுடன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பொதுப்பணித்துறை செற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×