search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kennedy MLA"

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்
    • தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, செல்வம், ராகேஷ், ரகுராமன், மணி, ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு புதுச்சேரி அரசு ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலம் தொடர் நோய் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும் மாநில தி.மு.க. துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி கலந்து கொண்டு தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான அரசாணை யினை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, செல்வம், ராகேஷ், ரகுராமன், மணி, ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • புதிய கல்வி கொள்கையால் புதுவை மாநிலத்தில் உயர் கல்வித்துறையில் தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பல்வேறு துறை வகுப்புகளில் இது நாள்வரை முதல் 2 ஆண்டுகளுக்கு 4 பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

    மாணவர்களும் ஆர்வத்துடன் நமது தமிழ் மொழி மட்டும் இல்லாமல் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் கற்று வந்தனர். இந்தச் சூழ்நிலையில் மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையால் ஏற்கனவே 4 பருவங்களில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 ஆண்டுகளில் 2 பருவத்திற்கு மட்டும் தமிழ்மொழி பயிற்றுவித்தால் போதும் என்பது கண்டனத்திற்கு ரியதாகும். வேலைவாய்ப்பு கிடைக்காது.

    இதனால் ஒவ்வொரு கல்லூரிகளிலும் 2 தமிழ் பேராசிரியர்கள் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதே நிலை நீடித்தால் தமிழ் மொழி படித்தவர்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் இனிமேல் வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகி விடும். அதேபோல் 2 பிராந்திய மொழிகளும் சிதைக்கப்பட்டு விடும். தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள்- மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும் தற்பொழுது நடைமுறைப்படுத்தி உள்ள புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகமாக நேரிடும். 4 ஆண்டு படிப்பில் முதலாம் ஆண்டு நின்று விட்டால் சான்றிதழ் கொடுத்து அனுப்புகின்ற முறையும் 2 ஆண்டு நின்று விட்டால் பட்டயம் கொடுத்து அனுப்புகின்ற நிலை ஏற்படும்.

    இதனால் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் ஒரு குழப்பத்தினை மட்டு மல்லாமல் கொந்தளிப்பை யும் இந்த புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய கல்வி கொள்கையால் புதுவை மாநிலத்தில் உயர் கல்வித்துறையில் தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    எனவே புதுச்சேரி அரசு மத்திய பா.ஜனதா அரசினை அணுகி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    தமிழ் மொழியின் மாண்பு கண்டும் மாணவர்களின் போராட்டத்தினை கணக்கில் கொண்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த தமிழ்மொழிப்பாட முறையினை மீண்டும் அமல்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • படகு ஓட்டுநர் மற்றும் பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செய்யப்பட்டது.
    • கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று வருகிற 10-ந் தேதி இதற்கான சிறப்பு கூட்டம் நடத் தப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வம்பாகீரப் பாளையம் பாண்டி மெரினா அருகில் உள்ள உப்பனாற்றில் படகு சவாரி செய்வதற்கு வம்பாகீர ப்பாளையம் மீனவர்கள் சுற்றுலாத்துறை மூலம் விண்ணப்பி த்திருந்தனர்.

    விண்ணப்பத்தில் கேட்டது போல், படகு ஓட்டுநர் மற்றும் பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செய்யப்பட்டது.

    மேலும் படகு சர்வே ரிப்போர்ட், டிரைவர் லைசென்ஸ், லைப் ஜாக்கெட், லைப் போயா, தீ அணைப்பான் மற்றும் முதலுதவி சிகிச்சை பெட்டி என அனைத்தை சமர்ப்பிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை படகு சவாரி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட வில்லை. இதையடுத்து வம்பாகீரப்பாளையம் படகு உரிமையாளர் சங்கத்தினர் தொகுதி எம்.எல்.ஏ அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அவர்களை அழைத்து கொண்டு சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று வருகிற 10-ந் தேதி இதற்கான சிறப்பு கூட்டம் நடத் தப்படும்.

    அதில் துறை சார்ந்த அமைச்சர், இயக்குனர் மற்றும் அதிகாரிகள் வைத்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கேட்டிற்கு கீழ் உள்ள ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மக்களுக்கு ஒன்று மற்றும் 2 குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், உப்பளம் தொகுதியைச் சேர்ந்த 22 பயனாளிகளுக்கும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

    தி.மு.க தொகுதி செயலாளர் சக்திவேல், வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், தி.மு.க நிர்வாகிகள் தங்கவேல், ஹரிகிருஷ்ணன், விநாயகமூர்த்தி, ஜெயசீலன், ராகேஷ், ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ.நடவடிக்கை
    • விரைவில் பட்டா வழங்குவதற்கான ஆவணத்தை 2 வாரத்துக்குள் தயார் செய்கிறோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டம் பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, அலுவலகம் சென்று அவரை சந்தித்து பட்டா வழங்க வேண்டி 3 மாதத்திற்கு முன்பு கோரிக்கை வைத்தனர்,

    ராசு உடையார் தோட்டத்தில் சுமார் 150 க்கு மேற்பட்ட வீடுகள் பட்டா இல்லாமல் இருக்கிறது, இது குறித்து சட்டசபையில் முதல்- அமைச்சரிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பலமுறை பேசியுள்ளார். அதை தொடர்ந்து சர்வே டிபார்மெண்ட் நில அளவைத் துறை இயக்குனர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து 150-க்கு மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    விரைவில் பட்டா வழங்குவதற்கான ஆவணத்தை 2 வாரத்துக்குள் தயார் செய்கிறோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காலபான், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மாநிலத்தில் நிலவும்போதுஎப்படி மக்கள் முன்னதாகவே பணம் கட்டி மின்சாரத்தை உபயோகப்படுத்த முடியும் என்பதனை புதுச்சேரி அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை கவர்னர் மாநிலம் முழுவதும் இருக்கின்ற பழைய மின்மீட்டர்களை மாற்றி, புதிய கொள்கை முடிவாக மக்கள் முன்னதாகவே பணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்தும் முறையினை கொண்டு வருவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.

    இந்த புதிய கொள்கை முடிவினை மக்களின் கருத்தை அறியமாலும், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைகளை கேட்காமலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திட்டமிடும் கொள்கை முடிவினை புதுவை மாநில தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. ஏறக்குறைய ரூ. 360 கோடியில் திட்ட செலவினங்கள் இருக்கின்ற இந்தத் திட்டத்தினை அமுல்படுத்தும்போது அது மக்களுக்கு பயன் அளிக்குமா? அதனால் மக்கள் பாதிக்கப்ப டுவார்களா? என்பதனை கூட அறியாமல் அரசு இம்மாதிரி மக்கள் விரோத கொள்கைகளை வெளியிடுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஏற்கனவே புதுச்சேரி அரசு மின்துறையினை தனியார் மயமாக்க கடும் முயற்சி எடுத்து அமல்படுத்த முனைகின்றது. அந்த துறைக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்க வேண்டும் என்பதில் எங்களை போன்ற எம்.எல்.ஏ.க்கள் அல்லாமல் மக்களுக்கும் சந்தேகம் எழுகின்றது.

    புதுச்சேரி மாநிலத்தில் ஏறக்குறைய 1.75 லட்சம் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக அரசு கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

    மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக -அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்து நிலுவையில் காத்திருக்கின்றனர். வேலைவாய்ப்பின்மை பெருக்கம்- மக்களின் வாங்கும் சக்தி குறைவு போன்ற சூழல்கள் நமது மாநிலத்தில் நிலவும்போதுஎப்படி மக்கள் முன்னதாகவே பணம் கட்டி மின்சாரத்தை உபயோகப்படுத்த முடியும் என்பதனை புதுச்சேரி அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

    எனவே தொழில்நுட்பம் என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும்' ப்ரீபெய்டு"போன்ற திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று கொசு மருந்து அடிக்கும் பணி உப்பளம் தொகுதியில் தொடங்கப்பட்டது.

    இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மேலும் இப்பணியின் பொழுது அதிகாரிகள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    • தாசில்தாரிடம் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள்
    • பள்ளி- கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி பயில சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி புதுவை தாசில்தார் பிரதிவியை அவரது அலுவலத்தில் சந்தித்து பேசினார்.

    அப்போது உப்பளம் தொகுதியில் முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி பயில சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே பொதுமக்கள் கஷ்டம் இல்லாமல் விண்ணப்பம் அளித்த சில நாட்களிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தாசில்தாரிடம் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    இந்த சந்திப்பின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • சுகாதாரத் துறையில் மோசமான சூழல் நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் கென்னடி எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 2 பெண்கள் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு உயிர் இழந்து உள்ளனர். இது சுகாதாரத் துறையில் மோசமான சூழல் நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    அது மட்டுமல்லாமல் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் தொற்று காய்ச்சல் ஏற்பட்டு 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    புதுவையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கி ழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர். இவர்களால் புதுவை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதுவை அரசின் சுகாதாரத்துறை உடனடி யாக புதுச்சேரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஆய்வு பரிசோதனையை மேற்கொண்டு, புதுச்சேரி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்திட வேண்டும்.

    நிபா வைரஸ் புதுவையில் வராமல் இருக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் நெருங்க இருப்பதால் டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சல் ஏற்படு வதற்கு முன்பு தாலுகா வாரியாக சுகாதாரத்துறை ஊழியர்கள், பொதுப்ப ணித்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய சுகாதார நலனை கவனிக்கும் வண்ணம் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி சுகாதாரத்துறை கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை களுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை அளிக்கப்பட்டு வருவதில் காலாவதி ஆன மாத்திரைகள் வழங்கப்பட்ட தால் சுகாதார ஊழியர் ஒருவர் மட்டும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கு ஒருவர் மட்டும் காரணம் இல்லை. இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறும் போது துறை ரீதியான விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கென்னடி எம்.எல்.ஏ. அறிக்கை
    • அ.தி.மு.க.மாநில செயலாளர் உண்மைக்கு புறம்பாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவை தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    சனாதனம் என்பது ஒரு மதத்திற்கு சொந்தமானது அல்ல. அது, எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்கக் கூடியதும் அல்ல. இது தொடர்பாக கவர்னருக்கு நான் தெரிவித்ததில், எந்த இடத்திலும் எந்த ஒரு மதமோ மற்றும் சாதியை குறித்து சொல்லவில்லை.

    அ.தி.மு.க.மாநில செயலாளர் உண்மைக்கு புறம்பாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    கடந்த காலங்களில் வன் முறையை தூண்டிவிட்டு அரசியல் பிழைப்பு நடத்தியது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    சனாதனம் என்பது குறித்து அண்ணா கற்றுக் கொடுத்ததை அறியாமல் அண்ணா பெயரால் இயக்கம் நடத்துபவர்களும் அந்த இயக்கத்தின் பொறுப்புகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து விட்டு பின்னர் தி.மு.க.விற்கு பதில் அளிக்கலாம்.

    அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக நெறிகளை நெஞ்சில் ஏற்றி, இயக்கம் நடத்துவதால் அரசு விழாவில் சபை நாகரீகம் பதில் அளிக்கும் வகையில் அறிக்கையாக வெளியிட்டேன்.

    அரசு விழாவில் முறையற்ற வகையில் நடப்பது போன்று நாகரிகம் அற்ற வகையில் நடக்க எங்களுக்கு எங்கள் இயக்கம் கற்றுக் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • புதுவை கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே சுனாமி நினைவு சின்னம் அமைத்துத்தரவேண்டும்

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம் மற்றும அதனை சார்ந்த மீனவ சமுதாய மக்கள் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் புதுவை கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே சுனாமி நினைவு சின்னம் அமைத்துத்தரவேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. ஏற்கனவே மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் மீன் வளத்துறை இயக்குனரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதனை ஏற்று நினைவு சின்னம் அமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை நடக்க வில்லை.

    இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. மீன் வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயிலை மீண்டும் சந்தித்து சுனாமி நினைவுச்சின்னம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதனை ஏற்ற மீன்வளத்துறை இயக்குனர் சுனாமி நினைவுச்சின்னம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின் போது தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேலு சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகம், காலப்பன், ராகேஷ், செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • திருநங்கைகளுக்கு உதவிதொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வினாயக மூர்த்தி, பஸ்கால் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் சட்டமன்ற தொகுதியில் முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கைகளுக்கு உதவிதொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்று 122 பயனாளி களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், வினாயக மூர்த்தி, பஸ்கால் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×