search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthik Subburaj"

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்க இருக்கிறார்கள். #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. வரும் பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

    மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதுவரை இந்தப் படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேட்ட படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ரஜினியின் அறிமுக காட்சியான மரண மாஸ் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த பாடல் ஊலலலா இன்று மாலை இணையத்தில் வெளியாக இருக்கிறது.



    பேட்ட படத்தின் முழு பாடல்கள் வெளியீடு வருகிற 9-ந் தேதி (ஞாயிறு) அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. விழாவில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் இதை படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி நடக்க இருக்கும் தனியார் கல்லூரி தரப்பில் இருந்து இது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தில் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. #Petta #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினி காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் பல்வேறு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.

    அதில் விஜய் சேதுபதி தன் உடலை போர்வையால் மூடியபடி உட்கார்ந்து கொண்டு, கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கு பின்னால் ரஜினி நடந்து வருவது போன்று நிழலுருவமும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் படத்தில் அவரது பெயர் ஜித்து என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.

    முன்னதாக அனிருத் இசையில் `மரண மாஸ்' என்ற சிங்கிள் நேற்று 
    வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் 7-ஆம் தேதியும், படத்தின் முழு இசையும் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 9-ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.

    பேட்ட படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Petta #PettaAlbumParaak #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Petta #PettaAlbumParaak #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்திக் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அனிருத் இசையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதியும், இரண்டாவது சிங்கிள் 7-ஆம் தேதியும் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். படத்தை பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிவைக்கும்படி தயாரிப்பாளர்கள் பலர் கேட்டுவந்ததாக நேற்று தகவல் வெளியாகிய நிலையில், கார்த்திக் சுப்புராஜின் ட்விட் படத்தின் ரிலீஸை உறுதிப்படுத்தியுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Petta #PettaAlbumParaak #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பேட்ட'. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ரஜினியும் பொங்கல் ரேசில் இணைந்துள்ளார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி காப்பாளர் தாதா வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். #Petta #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தில் மலையாள நடிகை மாளவிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுகுறித்து மாளவிகா மோகனன் கூறும்போது,

    “ரஜினியுடன் நடிக்க இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்புக்கு காரணமான அனைவருக்கும் நன்றிகள். அவருடன் நடித்தது எனக்கு ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் பார்த்ததிலேயே அவர் தான் மிக எளிமையானவர்’ எனக் கூறியுள்ளார். மேலும், தமிழ் தெரியாததால் பக்கத்திலேயே ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 



    இப்படத்தில் மாளவிகா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு வில்லி என்பதால் வில்லனாக வரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிறார்கள். பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #MalavikaMohanan

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினியை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தார். #Petta #Rajinikanth #NawazuddinSiddiqui
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோருடன் இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் முதல் முறையாகத் தமிழில் நடித்து வருகிறார்.

    நவாசுதீன் ரஜினியுடனான தனது படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ’ரஜினிகாந்த் செம ஆச்சரியத்துக்குரிய மனிதர். அவருடன் நடிக்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன்.

    வட இந்தியாவின் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட அவரைத் தெரிந்திருக்கிறது. அவர்தான், நாட்டிலேயே பெரிய சூப்பர் ஸ்டார். அவரின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், இதை எதுவுமே பொருட்படுத்தாமல் அவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவரை முதன்முதலில் பார்த்தபோது மிகவும் யதார்த்தமாகப் பேசினார்.



    அவரும் நம்மைப் போன்றவர்தான் என்று நமக்கே உணர்த்துகிறார். ரஜினிக்கு வடக்கில் இருக்கும் மவுசு எங்கள் ஆட்களுக்குத் தெற்கில் இல்லை; இருந்தும் பாலிவுட் நடிகர்களான நாங்கள் 20, 25 பேரை கூட அழைத்துக்கொண்டு பெரும் பந்தாவுடன் சுற்றுகிறோம்“ என்று கூறியிருக்கிறார். #Petta #Rajinikanth #NawazuddinSiddiqui

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்தவரும், பிரபல இயக்குநருமான மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் பேட்ட. ரஜினியுடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி - திரிஷா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கியதாகவும், சசிகுமார் ரஜினியின் நண்பராக நடிப்பதாகவும் முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்த பிரபல இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    சமீபத்தில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Petta #Rajinikanth #Mahendran

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ரஜினியோடு விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்தின் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது.

    இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

    நேற்று படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றினார். #Petta #Rajinikanth #Sasikumar

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth
    ‘காலா’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட’.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது. இவர்களுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

    நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் சசிகுமார் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘பேட்ட’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முறுக்கு மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக கிராமத்து தோற்றத்தில் இருக்கிறார்.

    ரஜினியின் பிளாஷ்பேக் பகுதிகள் மதுரையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றம் தான் இது என்கிறார்கள். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரஜினி சமீபகாலமாக இளமையாக நடிப்பதை தவிர்த்து தனது வயதுக்கேற்ற தோற்றங்களில் நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு வெளியான லிங்கா படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நடித்த கபாலி, காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்தார்.
    ‘பேட்ட’ படத்தின் இந்த போஸ்டரில் இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகிறார். ரஜினியின் 1980-90 காலகட்ட தோற்றத்தை இது நினைவுபடுத்துவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

    ரஜினியின் இந்த தோற்றம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு பக்கம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. வேட்டி சட்டை தோற்றம் தேவர் மகன், வீரம் உள்ளிட்ட சில படங்களை நினைவுபடுத்துவதாகவும், மீசை சிங்கம் படத்தில் வரும் சூர்யாவை நினைவுபடுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ரஜினியின் பின்புறம் சூரியன் இருப்பது போல் அமைந்துள்ளதால் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ரஜினி, விஜய்சேதுபதி இணைந்து மிரட்டும் சண்டைக்காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன. அடுத்து இருவருக்கும் சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது.

    இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குவதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.



    ரஜினியோடு ஒரு ஹீரோ பாபிசிம்ஹா, இன்னொரு ஹீரோ விஜய்சேதுபதி நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், தற்போது இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார்.

    இதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. நடிகர் சசிகுமார் தான் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிக்கிறார். இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. #Petta #Rajinikanth #Sasikumar

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த், மிசா கைதியாக நடிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Petta #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.

    ரஜினிகாந்த் தாதா வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதிகளில் தொடங்கியபோது ரஜினியின் சில படங்கள் வெளியாகின.

    அந்த படங்களில் ரஜினியின் கையில் ஒரு செம்பு காப்பு இருந்தது. கையில் ஏதோ எழுத்துகள் பச்சை குத்தப்பட்டு இருந்தன. இன்று காலை வெளியாகி இருக்கும் படங்களில் அந்த பச்சையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    ஜிகர்தண்டா, அறம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ராமச்சந்திரன் துரை ராஜ் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படம் தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



    ரஜினி கையில் மிசா 109 என்று எழுதி இருப்பதால் மிசா கைதியாக நடிக்கலாம் என பேசப்படுகிறது.

    1975-ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது கொண்டு வந்த மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கட்சியினர் முதல் ரவுடிகள் வரை பலர் கைது செய்யப்பட்டனர்.

    1975 காலகட்டத்தில் ரஜினியும் அப்படி கைதானவராக காட்டப்படுகிறாரா? என்ற யூகங்கள் பரவுகின்றன. இது போட்டோ ஷாப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். #Petta #Rajinikanth #Misa109

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கு “பேட்ட” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதில் இந்தி நடிகர் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

    ‘பேட்ட’ படப்பிடிப்பு முதல் கட்டமாக டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்தது. அதன்பின் கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி பங்கேற்று நடித்தார்.

    இதையடுத்து அடுத்த கட்டமாக “பேட்ட” படப்பிடிப்பை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ரஜினி கடந்த 7-ந்தேதி சென்னையில் இருந்து லக்னோவுக்கு புறப்பட்டு சென்றார். அவரது பாதுகாப்புக்காக 40 பாதுகாவலர்களும் விமானத்தில் சென்றனர்.

    லக்னோ விமான நிலையத்தில் ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அவரது பெயரை உச்சரித்து கோ‌ஷம் போட்டனர். அங்கிருந்து ரஜினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.



    லக்னோவில் பேட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுமார் 500 பேர் வரை பணியாற்றி வருகிறார்கள். சவுக், மகினாபாத், சீதாபூர், பராபாஸ்கி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது.

    இதேபோல் வாரணாசி, சன்பாந்தராவிலும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    லக்னோவில் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினிகாந்த் பாதுகாப்புக்கு 25 போலீஸ் காரர்களை லக்னோ போலீஸ் உயர் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.

    போலீசார், ரசிகர்களை ரஜினி அருகே செல்லவிடாமலும், படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

    படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். இதற்காக செல்போனுக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. #Petta #Rajinikanth

    ×