search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnakata Assembly Election"

    • ராஜஸ்தானில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அம்மாநிலத்தில் மக்கள் விரும்பும் தலைவராக முன்னணியில் உள்ளார்.
    • வசுந்தரா ராஜே கடந்த ஒரு வருடமாக அம்மாநில காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பா.ஜனதாவுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    குறிப்பாக கர்நாடகாவில் கட்சியின் அடித்தளமாக விளங்கும் லிங்காயத்து சமூகத்தின் வாக்குகளை பா.ஜனதா பெருவாரியாக இழந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    அந்த சமூகத்தை சேர்ந்த கட்சியின் மூத்த தலைவராக எடியூரப்பா பதவி விலகியது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதேபோல காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடகா மாநில மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்ததும் அக்கட்சிக்கு கை கொடுத்துள்ளது.

    இந்நிலையில் கர்நாடகா தேர்தல் முடிவுகள் கற்று தந்த பாடத்தை அடிப்படையாக கொண்டு பா.ஜனதா கட்சி அடுத்து வர உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தலைமையின் பங்கு தொடர்பாக புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.

    குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் கட்சியின் தலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பலர் கட்சிக்குள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

    அம்மாநிலத்தில் செயல்படுத்தி உள்ள புதிய நலதிட்டங்கள் பற்றியும், அவற்றை பற்றிய பிரசாரத்தை வலுப்படுத்தவும் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல ராஜஸ்தானில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அம்மாநிலத்தில் மக்கள் விரும்பும் தலைவராக முன்னணியில் உள்ளார்.

    ஆனால் தேசிய தலைமை அவருக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை என்ற பொதுவான கருத்தும் உள்ளது. எனவே ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக யாரை முன்நிறுத்தலாம் என்பது தொடர்பாகவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

    குறிப்பாக வசுந்தரா ராஜே கடந்த ஒரு வருடமாக அம்மாநில காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதற்கிடையே அம்மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட்-துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் ஆகியோரிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்நிலையில் இதனை தங்களுக்கு, சாதகமாக பயன்படுத்தி மாநில தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து கட்சியை வலுப்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சியிலேயே இல்லாதவர் எப்படி கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியும்?
    • அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைக்கும்.

    சென்னை:

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழர்கள் அதிகமாக உள்ள புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த மாநில அவைத் தலைவர் டி.அன்பரசனை வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை அறிவித்துள்ளார். டி.அன்பரசனை எதிர்த்து அந்த மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதுபற்றி டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆட்சிமன்ற குழு கூடி தேர்வு செய்தது. ஆட்சிமன்ற குழு முடிவின் படி புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். அவர்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆவார்.

    ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்து இருப்பது பற்றி கவலை இல்லை. ஏனெனில் அவர் அ.தி.மு.க.வில் இல்லை. கட்சியிலேயே இல்லாதவர் எப்படி கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியும்?

    அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைக்கும். ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவார் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×