என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jitendra Singh"
- தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கல்வியில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு.
- சர்வதேச நலன் சார்ந்த விஷயங்களில் இணைந்து பணியாற்றவும் ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி பெட்ரி ஹொன்கோனென், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு துறை சார்ந்த குழுவினரும் கலந்து கொண்டனர்.
பின்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுடன் ஆராய்ச்சி பணிகளில் இணைந்து செயல்பட இந்தியா ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் அப்போது தெரிவித்தார். குறிப்பாக சென்னை ஐஐடி உட்பட 4 இந்திய கல்வி நிறுவனங்கள், பின்லாந்து நிறுவனங்களுடன் குவாண்டம் கணினி மேம்பாட்டு பணிகளுக்காக இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.
5ஜி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை தொழில்நுட்பங்கள், உயிரி சார்ந்த பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் செயல்பட பின்லாந்து ஆர்வமாக உள்ளது என்று ஹொன்கோனென் உறுதி அளித்தார்.
அறிவியல், புதுமை கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், எதிர்கால மொபைல் தொழில் நுட்பம், டிஜிட்டல் கல்வி உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது. மேலும் சர்வதேச நலன் சார்ந்த விஷயங்களில் இணைந்து செயல்படவும் இந்தியாவும், பின்லாந்தும் ஒப்பு கொண்டன.
- முதலமைச்சராக இருந்து, பிரதமராக பதவி ஏற்றது இந்தியாவில் முதல் முறை.
- உலக அளவில் இத்தகைய சிறப்பு பெறுவது அரிதானது.
சென்னை நுங்கம்பாக்கம் வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், தமிழை மேலும் பிரபலப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் கடந்த மே மாதம் இங்கு வந்த போது பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். தமிழகம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம் என்றும், தமிழ் மொழி நிரந்தரமானது, அதன் கலாச்சாரம் உலகளாவியது என்றும் பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்தார்.
தமிழ் மொழியின் சிறப்பையும், தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிரபலமான கவிதையை மேற்கோள்காட்டி பேசினார். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரோ ஒருவர் சிறந்து விளங்குகிறார் என்றும் அப்போது பிரதமர் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரதமர் மோடியின் ஆட்சி முறை, எதிர்காலத்திலும் நிலைத்து, நீடித்து உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தும். கடந்த 20 ஆண்டுகளின் முதலமைச்சராக இருந்து, பின்னர் பிரதமராக மோடி பதவி ஏற்றது இந்தியாவில் முதல் முறை என்றும், உலக அளவில் இத்தகைய சிறப்பு பெறுவது அரிதானது. இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.
- புதிய கல்விக் கொள்கை முற்போக்கானது, தொலை நோக்கு பார்வை கொண்டது.
- மாணவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறைக்கே முன்னுரிமை அளிக்கிறது.
மொரதாபாத்:
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள கிருஷ்ண மகா வித்யாலயாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:
இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும்.
புதிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இது மிகப்பெரிய சீர்திருத்தம். இது முற்போக்கானது, தொலைநோக்கு பார்வை கொண்டது. அது மட்டுமின்றி 21ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வியுடன் பட்டங்களை இணைப்பது நமது கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் சுமையாக உள்ளது. இதனால் படித்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கு தீர்வு காண, மாணவர்கள் பட்டம் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து. அவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறை ஆகியவற்றுக்கே தேசிய கல்விக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.
வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் பலவகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். நடப்பு கால திறன்களுடன் இருப்பவர்கள் உலகில் இன்று வியத்தகு செயல்களை செய்கிறார்கள் என்பதற்கு ஏரளாமான உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- விண்வெளித் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
- புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதலாம் ஆண்டுவிழா மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:
இந்திய விண்வெளித் துறையில், தனியார் துறையினருக்கு சுதந்திரம் வழங்குவது, இளம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.
செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் தொடங்கும். இந்திய இளம் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆற்றல் மற்றும் புதிய சிந்தனைகள் நமது விண்வெளி தொழில்நுட்பத்தை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி வருகிறது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளிக் கூட்டமைப்பு,முதலீடுகளையும் பெற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்ரோவின் சாதனைகள் மூலம் உலக அளவில் இந்திய விண்வெளி கூட்டமைப்பு அங்கீகாரத்தையும், புகழையும் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒரே ஆண்டுக்குள் 140 திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தற்போது டெல்லியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிரதமர் அலுவலக விவகாரத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
ஜம்மு- காஷ்மீருக்கு பிரதமர் மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் .வளர்ச்சி மற்றும் அமைதியின் புதிய விடியலை ஜம்மு-காஷ்மீர் கண்டு வருகிறது. 2022 ஜனவரி முதல் இதுநாள் வரை 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்துள்ளனர். 75 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இதுவே மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும்.
நாட்டில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக ஜம்மு-காஷ்மீரை மாற்றுவதற்கான பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், ரூ. 56 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஒரே ஆண்டுக்குள் 140 படப்பிடிப்புகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் திறமைமிக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
- மாநிலப் பணிகளில் 434 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களின் வருடாந்திர மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பணியாளர்துறை மந்திரி ஜிதேந்திர சிங், நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் மத்திய பணி என்பது ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார்.
மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார். மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அகில இந்திய பணி அதிகாரி என்பவர் மாநில, மத்திய அரசுகளை இணைக்கம் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் என்றும் தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ் உள்பட இதர அகில இந்திய பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப வகை செய்யுமாறு மாநில அரசுகளை அவர் வலியுறுத்தினார். நடப்பு ஆண்டில், குடிமைப்பணி தேர்வு மூலம் 180 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வெற்றிகரமாக பணிகளை ஒதுக்கியுள்ளது என்றார்.
மாநிலப் பணிகளில் இருந்து 434 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊழலில் சிக்குவோர் மற்றும் திறமையற்ற அதிகாரிகளை களையெடுக்க மாநில அரசுகள் உதவுமாறும் மந்திரி ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை இந்தியா ஆதரித்து வருகிறது.
பிட்ஸ்பர்க்:
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
போக்குவரத்தில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயோடெக்னாலஜி துறை மூலம் இந்தியா, மேம்பட்ட உயிரி எரிபொருள்கள் மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை ஆதரித்து வருகிறது.
நவீன உயிரித் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட நிலையான உயிரி எரிபொருளில் பணிபுரியும் ஒரு இடைநிலைக் குழுவைக் கொண்ட 5 உயிரி ஆற்றல் மையங்களை இந்தியா நிறுவியுள்ளது. காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
2030 ஆம் ஆண்டில் உமிழ்வு தீவிரத்தை 35% குறைக்கும் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை.
- சுயசார்பு தொழில் முனைவோராக பெண்கள மாறுவதற்கு வாய்ப்பு.
ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:
கடந்த 8 வருடங்களில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தம் மூலம் பெண்களின் பணிச்சூழலை எளிதாக்கியுள்ளது. பெண்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் பணியாற்றுவதற்கான பெரிய சமூக சீர்திருத்தம், மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எனது அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்புடனும் அவர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு வாய்ப்பளிக்கப் படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது.
- மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற கல்வி உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் மட்டுமல்ல முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இது உள்ளது. தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும்.
இது மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது. மனித நேயத்தை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான மற்றும் பலதரப்பட்ட பாடத் திட்டத்தை இது பரிந்துரைக்கிறது. சுவாமி விவேகானந்தரின் மனிதனை உருவாக்கும் கல்வி, ஸ்ரீஅரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வி ஆகியவற்றை தேசிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது.
இன்று சுமார் 40 மில்லியன் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து உள்ளனர், இது அமெரிக்காவை விட அதிகம். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் குறித்து பாடங்களை இணைக்க வேண்டும். இதை அர்த்தமுள்ள முறையில் செய்தால், குறுகிய காலத்தில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும்.
முந்தைய கல்விக் கொள்கையின்படி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனித வள அமைச்சகம் என்ற பெயரிடப்பட்டது. மோடி அரசு தற்போது அதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்தது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையில் இந்தியா முன்னேறியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்து 2021 இல் 46 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பு.
- தூய்மையான கடல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை.
கடந்த ஜூலை 5ந் தேதி அன்று தொடங்கப்பட்ட 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள் உள்பட வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றுள்ளதாகவும், இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
கடற்கரை தூய்மை இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த www.swachhsagar.org என்ற இணையதளத்தை நேற்று தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இயக்கத்தில் புவி அறிவியல் அமைச்சகத்தோடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், ஜல் சக்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், வெளியுறவு, தகவல் ஒலிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் தீவிரமாக பங்கேற்றுள்ளன என்றார்.
கடற்கரை தூய்மை இயக்கத்தின் கீழ் 20 நாட்களில் கடற்கரைகளிலிருந்து 200 டன் கழிவுகள் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த இயக்கத்திற்கு முழுமையான ஆதரவு அளிக்க உறுதி தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார். இதுவரை 24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த இயக்கம் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான செப்டம்பர் 17 அன்று நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
- ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் செலவு, டீசல் வாகனங்களை விட குறைவு.
- இது இந்திய சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும்.
முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்து வைத்தார். மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தியில் இயங்கக் கூடிய வகையில் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:-
பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இந்த எரிபொருள், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு, நீர் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக மாறும். நீண்ட தூர வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது.
இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டீசல் பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் டீசல் செலவுவை விட ஹைட்ரஜன் எரிபொருள் விலை குறைவாக இருக்கும். இது இந்தியாவில் சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொழில்நுட்பத் திறன் உலகிலேயே மிகச் சிறந்ததாக திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாசன மேலாண்மை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றப்படும்.
- 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
புனே:
மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய கட்டடம், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டட வளாகத்தை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
இதையொட்டி சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தானியங்கிமயமாக்கல் போன்ற துறைகள் சார்ந்த 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டார்ட்அப் நிறுவனத்தினருடன் மத்திய மந்திரி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ஜிதேந்திர சிங், உலகின் முதலாவது புகையில்லா சானிடரி பேட் அகற்றும் சாதனம் மற்றும் மறுசுழற்சி முறையை உருவாக்கவும், இரட்டை மின்சார வசதி கொண்ட இருகட்ட டெஃபிபிரில்லேட்டர்களை உருவாக்கவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
பாசன மேலாண்மையை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றி, அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கக் கூடிய சென்சார் தொழில்நுட்பம் மற்றும் அனைத்துப் பருவநிலைகளுக்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன்கொண்ட பயிர்களை உருவாக்க வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் அப்போது குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்