search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Education Policy"

    • தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவு பெற்றது.
    • ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் வேண்டும்.

    உடுமலை:

    தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதன் பயன்கள் குறித்து விளக்கவும் மாவட்டம் தோறும் ஒரு பிரதிநிதியை மத்திய கல்வி அமைச்சர் அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட பிரதிநிதியாக சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மேகநாதன் நியமிக்க ப்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர் உடுமலை கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:- தேசிய கல்விக் கொள்கை 21 ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப பரந்த நெகிழ்வான பல்துறை கல்வி வழங்குகிறது.

    இதனால் நமது நாட்டை ஒரு துடிப்பான அறிவு சார்ந்த சமூகமாகவும் உலகளாவிய அறிவு வல்லரசாகவும் மாற்ற முடியும். ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேசிய கல்விக்கொள்கையில் உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இதனை பின்பற்றி வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல்லடம் பஸ் நிலையம் முன்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
    • தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    தாராபுரம்:

    இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தாராபுரம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பிரசார இயக்கத்தின் போது புதிய தேசிய கல்வி கொள்கையினால் 3,5,6-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு பருவ தேர்வு என்பது நாட்டின் ஏழை-எளிய, கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்பை தட்டி பறிப்பதோடு, மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும். மும்மொழி கொள்கை குழந்தைகளின் கல்விச்சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழி வழிக்கல்வியை கேள்விக்குறியாக்கும். 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப்பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக்கல்வியை முற்றிலும் பாதிக்கும்.

    இடைநிலைக்கல்வி முடிந்தவுடன் கொண்டு வரப்படும் தொழிற்கல்வி, குலக்கல்வித்திட்டமாக அமையும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத்தும் தனியார் மயமாதலின் மூலம் கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்படும். தேர்வுகள் நடத்திட தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். எனவே தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வுக்கால வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரி பிரசாரம் நடைபெற்றது.

    பல்லடம் பஸ் நிலையம் முன்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • புதிய கல்விக் கொள்கை முற்போக்கானது, தொலை நோக்கு பார்வை கொண்டது.
    • மாணவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறைக்கே முன்னுரிமை அளிக்கிறது.

    மொரதாபாத்:

    உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள கிருஷ்ண மகா வித்யாலயாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: 


    இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும்.

    புதிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இது மிகப்பெரிய சீர்திருத்தம். இது முற்போக்கானது, தொலைநோக்கு பார்வை கொண்டது. அது மட்டுமின்றி 21ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    கல்வியுடன் பட்டங்களை இணைப்பது நமது கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் சுமையாக உள்ளது. இதனால் படித்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காண, மாணவர்கள் பட்டம் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து. அவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறை ஆகியவற்றுக்கே தேசிய கல்விக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

    வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் பலவகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். நடப்பு கால திறன்களுடன் இருப்பவர்கள் உலகில் இன்று வியத்தகு செயல்களை செய்கிறார்கள் என்பதற்கு ஏரளாமான உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • புதிய கல்விக்கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும்.
    • இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி வந்துள்ள மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக முழுமூச்சில் பணிகள் செய்து வருகிறோம். தேசிய கல்விக்கொள்கையில் உள்ளூர்மொழிக்கும், தாய்மொழிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    புதிய கல்விக்கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும். அனைத்து விஷயங்களையும் பள்ளிக்கல்வியிலேயே அறிய முடியும். இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும். தேசிய கல்விக்கொள்கையை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தேசிய கல்விக்கொள்கையில் ஆக்கப்பூர்வ முயற்சியை நாங்கள் தருகிறோம்.

    ஆனால், தேசிய கல்விக்கொள்கையை அரசியல் காரணங்களுக்காக தான் சிலர் எதிர்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். என்பது தனிப்பட்ட அமைப்பு. தசரா காலத்தில் அவர்கள் ஊர்வலம் செல்வது வழக்கம். இந்தியா ஜனநாயக நாடு. அவரவருக்கு உரிய தனிப்பட்ட பார்வைகளை வெளிப்படுத்த அனுமதியுண்டு. புதுவையில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். அது வரவேற்கத்தக்கது. மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து விரைவில் முடிவு தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்.
    • தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

    சென்னை :

    சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (ஐ.ஐ.ஐ.டி.டி.எம்.) 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    மாணவர் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும். அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் முன்னேற வேண்டும் என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    அவர் கூறியது போல ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான் மற்றும் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கு அவசியம். 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும்.

    தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். 2026-ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும். உலக அளவில் 58 சி.இ.ஓ.க்கள் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள்.

    சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள 25 சதவீத நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. 100 யூனிகான் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 760 மெய்நிகர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் இக்கல்வி நிறுவனத்தின் புதிய அரங்குக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் ஏ.ஐ.ஐ.ஓ.டி. ரோபோடிக்ஸ் மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    விழாவில் ஐ.ஐ.ஐ.டி.டி.எம். நிறுவன குழுத் தலைவர் பேராசிரியர் எஸ்.சடகோபன், இயக்குனர் டி.வி.எல்.எம்.சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேசிய கல்விக் கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த மாநாட்டில் ஆய்வு செய்கிறார்.
    சென்னை:

    மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் கல்வி மாநாடு நடைபெறுகிறது. புதியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி மாநாட்டில் விவாதம் நடைபெறுகிறது. தேசிய கல்விக் கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த மாநாட்டில் ஆய்வு செய்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.

    மாநாட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியோ பங்கேற்கவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை. 

    தமிழகம் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்கூட புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் வந்தது. 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கூட பொதுத்தேர்வு நடத்தும் நிலை புதிய கல்விக்கொள்கையில் இருக்கிறது, இதையெல்லாம் எப்படி ஏற்கமுடியும? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார். 

    புதிய கல்விக்கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை என தமிழக அரசு கூறிவரும் நிலையில், தேசிய கல்வி மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தகக்து.
    ×