search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspect"

    தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அமைச்சர் தங்கமணி அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர். #TNMinister #Thangamani
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தபப்ட்டது.

    இதனால் தற்போது 860 முதல் 890 மெகாவாட் வரையே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே 2-வது யூனிட் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதை மறுத்தனர். 6 நாட்கள் வரை மின்உற்பத்தி செய்வதற்கு போதுமான நிலக்கரி உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை’ என அதிகாரிகள் கூறினர்.

    அனல்மின் நிலையத்தில் நிலக்கரி குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

    இந்த நிலையில் தமிழக மின்வாரிய அமைச்சர் தங்கமணி இன்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின்உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற செய்ய உரிய ஆலோசனைகளை வழங்கினார். #TNMinister #Thangamani

    தேனி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருவது பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்றும் அந்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த கூட்டத்தில் தேனி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.

    குறிப்பாக பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் சரியான முறையிலும், விரைவாகவும் சென்று அடைகின்றதா என்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரியம் பல்லவி பல்தேவ், மற்றும் கண்காணிப்பு அலுவலர் கார்த்திக், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி, மற்றும் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ராதா கிருஷ்ணன், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன், மற்றும் கண்காணிப்பு அலுவலர் டேவிதார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மற்றும் கண்காணிப்பு அலுவலர் தீரஜ் குமார் ஆகியோரை ஆய்வு செய்தார்.

    இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, காமராஜ், துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் சத்ய கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நில நிர்வாக ஆணையர் ஜெயக்கொடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் பழனி சாமி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மதுமதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNCM #Edappadipalaniswami
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி சென்று முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் ஆற்று பாலத்தை பார்வையிடுகிறார். #MukkombuDam #EdappadiPalaniswami
    சென்னை:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள முக்கொம்பு அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாகத்தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 8 மதகுகள் திடீரென இடிந்தன. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

    இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மதகு (14-வது மதகு) இடிந்து விழுந்தது.



    முக்கொம்பு அணையில் அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் முக்கொம்பு சென்று உடைந்த கொள்ளிடம் ஆற்று பாலத்தை பார்வையிடுகிறார்.  

    முக்கொம்பில் கொள்ளிடம் பாலத்தில் உடைந்த பகுதியில் இன்று சீரமைப்பு பணிகள் தொடங்கின. இந்த பணி ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர். #MukkombuDam #EdappadiPalaniswami

    ×