search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi"

    அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தி முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #America #Hindi #India
    நியூயார்க்:

    அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வாழும் 5 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 21.8 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் அயல் மொழி பேசுவதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தியை 33 சதவீதம் பேரும், குஜராத்தி மற்றும் தெலுங்கை 17 சதவீதம் பேரும் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையின்படி கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

    அயல் மொழி பேசுவோரின் எண்ணிக்கை முக்கிய நகரங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருப்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. #America #Hindi #India
    சமீப காலமாக தென்னிந்தியாவில் இந்தி, பெங்காலி மற்றும் ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருவது தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி: 

    தென்னிந்தியாவில் இந்தி, பெங்காலி மற்றும் ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் வட இந்தியாவில் தென்னிந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் வருகிறதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிப்பது: தமிழர்களும், மலையாளிகளும் கணிசமான அளவு கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தென்னிந்தியர்கள் ஒருகாலத்தில் அதிக அளவில் மகாராஷ்டிராவுக்கு இடம்பெயர்ந்தனர். குறிப்பாக மும்பைக்கு சென்றனர். ஆனால் தற்போது கர்நாடகாவுக்கு அதிகம் செல்கின்றனர்.

    கேரளாவில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதிக்கு இடம்பெயரும் மலையாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குர்கானில் தமிழர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியேறும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இந்தி மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறி உள்ளனர். தென்னிந்தியாவில் நேபாளிகளின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் தமிழர்கள் குடியேறுவது 2001-ல் 8.2 லட்சமாக இருந்தது. இது 2011-ல் 7.8 லட்சமாக குறைந்தது. வட மாநிலங்களில் மலையாளிகள் குடியேறுவது 2001-ல் 8 லட்சமாக இருந்தது, இது 2011-ல் 7.2 லட்சமாக குறைந்திருக்கிறது. தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர்களின் எண்ணிக்கை 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
    மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலீஸ் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் அம்மாநிலத்தில் 312 கல்லூரிகள் உள்ளன. எம்.பி.பி.எஸ், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பல பட்டய படிப்புகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் பயிற்று விக்கப்படுகிறது. இந்நிலையில், இனிவரும் தேர்வுகளை மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலீஷ் ஆகிய மொழிகளில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஹிங்கிலீஸ் என்பது இந்தியையும் இங்கிலீஷையும் கலந்து எழுதும் வகையாகும். அதாவது பேசும் இந்தியை ஆங்கில எழுத்தில் எழுதும் முறை. தமிழ் உள்ளிட்ட எல்லா பிராந்திய மொழிகளும் இவ்வாறு எழுதப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் தங்களுக்கு பதில் தெரிந்தும் ஆங்கில புலமை இல்லாததால் பதில் எழுத சிரமப்படுகின்றனர்.

    இதன் காரணமாக இந்தியையும் ஆங்கிலத்தையும் கலந்து எழுத அனுமதித்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 
    பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர், சமூக வலைத்தளத்தில் எனக்கு பாலியல் மிரட்டல்கள் அதிகமாக வருவதாக புகார் கூறியுள்ளார். #SwaraBhaskar
    சினிமா வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு, இந்தி நடிகைகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய அமைப்புகளும் முளைத்துள்ளன. இதனால் செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அடங்கி இருப்பதாக பேசப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன. படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை வைக்கிறார்கள். பெண்மையை கேவலப்படுத்தும் வசனங்களும் உள்ளன. இதை கடுமையாக நான் எதிர்த்து வருகிறேன். சமூக வலைத்தளத்திலும் கருத்து பதிவிடுகிறேன்.

    இதனால் என்மீது பலர் ஆத்திரத்தில் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் மோசமாக திட்டுகிறார்கள். உன்னை கற்பழிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் மிரட்டுகிறார்கள். மோசமான வலைத்தள கருத்து பதிவுகளை கட்டுப்படுத்த அமைப்புகள் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் குடும்பம், பெயர், பிறந்ததேதி சாதி, மதம் போன்ற சொந்த விவரங்களையும் திரட்டி பதிவு செய்து மிரட்டுகிறார்கள். இதனால் சுயகவுரவம் பாதிக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்துவது இல்லை. புகார் அளிக்க சென்றால் உனக்கு ஏன் அவர்களுடன் வம்பு. ஒதுங்கிப்போ என்கிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகள் தடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
    ×