என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hemant Soren"
- ஹேமந்த் சோரனிடம் கடந்த 20-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நிலம் மோசடி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரி மாற்றத்தைச் செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக கடந்த 20-ம் தேதி அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.
ஹேமந்த் சோரன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக அவருக்கு அடுத்தடுத்து 8 தடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவற்றுக்கு சோரன் பதில் அளிக்கவில்லை.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி வீட்டுக்கு விசாரணைக்கு வருவதாக அமலாக்கத் துறையினர் கடிதம் அனுப்பினர். இதற்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை என்ற பெயரில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இருந்தார்.
இதற்கிடையே, முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். தெற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவர் தங்கியிருந்தார். தகவலறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து அவரது உதவியாளர்கள் தொலைபேசியிலும் அமலாக்கத் துறையினர் தொடர்பு கொண்டனர். ஆனால் அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.
என்றாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிலேயே காத்திருந்தனர். சுமார் 18 மணி நேரம் அவர்கள் காத்திருந்த நிலையில் ஹேமந்த் சோரன் திரும்பி வரவில்லை. அவர் அன்று மாலை டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்ப விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். விமான நிலையத்துக்கும் அவர் வரவில்லை. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டெல்லி மாநில எல்லைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டது.
என்றாலும் ஹேமந்த் சோரன் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரை தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹேமந்த் சோரன் காரில் வந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்துமாறு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநில போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியில் ஹேமந்த் சோரன் வீட்டில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தக் காரை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அது யார் கார், அது எப்படி அங்கு வந்தது என்பது பற்றி விசாரணை நடந்துவருகிறது.
அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணை தொடர்பாக முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் சட்ட ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே அவர் அமலாக்கத்துறை வளையத்துக்குள் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பவே ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஹேமந்த் சோரன் இன்று காலை வரை எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனும் தகவல்களை கேட்டறிந்தார். தன்னை அம லாக்கத் துறையினர் கைது செய்தால் ஹேமந்த் சோரன் தனது மனைவியை முதல் மந்திரியாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அருகே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம் என ஹேமந்த் சோரன் குறிப்பிட்டிருந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஏழு முறை சம்மன் அனுப்பியது. ஏழு முறையும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.
இதனால் அமலாக்கத்துறை 8-வது முறையாகவும் சம்மன் அனுப்பியது. அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது. என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த முடியும் என்றால், அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு பதில் தெரிவித்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை கடந்த வாரம் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியது. பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதிரிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வருகிற 27 முதல் 31-ந்தேதிக்குள் ஆஜராகி கேள்விளுக்கு பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை விசாரணை நடைபெற்ற பின் ஹேமந்த் சோரன் தனது கட்சி தொண்டர்களை சந்தித்தார். அப்போது "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
- எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம்.
- அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகவில்லை.
8-வது முறையாக அனுப்பியபோது, என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினால் ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப்பின் அவரது வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" என்றார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த சோரன் கைது செய்யப்படலாம். இதனால் அவரது மனைவியை முதலமைச்சாராக்க முயற்சி செய்து வருகிறார் என செய்திகள் பரவிய நிலையில், இந்த செய்தியை திட்டவட்டாக மறுத்து வந்தார் ஹேமந்த் சோரன்.
- ஹேமந்த் சோரன் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் பதவி விலகினார்.
- ஹேமந்த் சோரன் மீது பிடியை இறுகச்செய்து இருக்கும் அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சட்ட விரோதமாக சுரங்கம் நடத்தி பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பும், முறைகேடுகளும் செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நடந்த விசாரணையில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
அதன் அடிப்படையில் ஹேமந்த்சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. என்றாலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து 7 தடவை சம்மன் அனுப்பினார்கள்.
இதனால் கோபம் அடைந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் அது ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் பதவி விலகினார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவியை முதல்-மந்திரியாக்க வழிவகை செய்யும் வகையில் அந்த எம்.எல்.ஏ. பதவி விலகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இதை ஹேமந்த் சோரன் மறுத்தார். பாரதிய ஜனதாவின் கற்பனை நாடகம் இது என்று கூறினார். என்றாலும் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் எம்.எல்.ஏ. விலகலால் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே இன்று (புதன்கிழமை) அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தலைநகர் ராஞ்சியில் 10 இடங்களில் சோதனை நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் சோதனை நடந்து வருகிறது. இன்று சோதனை நடந்து வரும் இடங்கள் அனைத்தும் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு தொடர்புடைய இடங்கள் ஆகும். எனவே ஹேமந்த் சோரனை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இன்றைய சோதனையை அமலாக்கத்துறை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஹேமந்த் சோரன் மீது பிடியை இறுகச்செய்து இருக்கும் அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளது. ராஞ்சியில் இன்று ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாந்தும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கசரிபாக் நகரில் உள்ள போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர துபே என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் முறையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். கலெக்டர் ராம்நிவாஸ் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
இன்று சோதனை நடக்கும் இடங்களில் பெரும்பாலான இடங்கள் ஜார்க்கண்ட் சுரங்கத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்களின் வீடுகளாகும். இவர்கள் அனைவரும் ஹேமந்த் சோரனுக்கு மிக மிக நெருக்கமானவர்கள்.
இவர்களது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது ஹேமந்த் சோரனை மேலும் சிக்கலுக்கு கொண்டு செல்லும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹேமந்த் சோரனுக்கு ED பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது.
- இந்த நிலையில்தான் பத்திரிகை ஆலோசகர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்க வழக்கில் இவரை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. இருந்தபோதிலும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் இன்று ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகரான அபிஷேக் பிரசாத் என்ற பிந்து வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அபிஷேக் பிராசாத் வீடு உள்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சகேப்கஞ்ச் துணை கமிஷனர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அபிஷேக் பிரசாத் என்ற பிந்து
மத்திய அமைப்பின் விசாரணையை எதிர்கொள்ள இருக்கும் ஹேமந்த் சோரன், தனது மனைவியை முதலமைச்சராக்க இருக்கிறார் என பா.ஜனதா கூறி வந்தது. ஆனால் ஹேமந்த் சோரன் இதை முற்றிலும் மறுத்துள்ளார்.
- இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
- தற்போது 3-வது முறையாக இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை நில அபகரிப்புடன் தொடர்புடைய பண மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி மற்றும் 24-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. இரண்டு முறையும் அவர் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதற்கிடையே, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் கலந்த கொள்ளும்படி, ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு ஏற்று இன்று இரவு நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் 3-வது முறையாகவும் இன்றும் ஆஜராகமாட்டார் எனத் தெரிகிறது.
முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஹேமந்த் சோரன், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டில் கடந்த வரும் நவம்பர் 18-ந்தேதி, அமலாக்கத்துறை, சுமார் 9 மணி நேரம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர்.
- முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல்
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்புடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆகஸ்ட் 14ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி மாபியாக்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்புடைய இடங்கள், ஏழைகள், நலிவடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் நிலத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு அதிகாரியுடன் தொடர்புடைய இடங்கள் என 22 இடங்களில் சோதனை நடத்தியது.
இதில் ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த பண மோசடி வழக்கில் ஹேமந்த் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு கும்பலால் பிளாட்டுகள் அபகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
- சுரங்க முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர் பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முதல்-மந்திரி சுரங்க ஒதுக்கீட்டை பெற்றதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா மனு அளித்து இருந்தது. இதையடுத்து ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது.
சுரங்க முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முதல்-மந்திரியின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்து இருந்தது. கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட சோதனையில் மிஸ்ராவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11.88 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.5.34 கோடி பணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு அவர் கைதானார்.
மேலும் மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஹேமந்த் சோரனின் பாஸ்புக் மற்றும் அவர் கையெழுத்தட்ட சில காசோலைகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பங்கஜ் மிஸ்ரா தனது கூட்டாளிகள் மூலம் ஹேமந்த் சோரனின் தொகுதியில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தது.
பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர் பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாத்திடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பி உள்ளது.
ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு நாளை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.
- ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பேருந்துகள் முலம் பயணம்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வரும் நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தன் பெயரில் சோரன் பெற்றதாக அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில ஆளுநரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை ஆளுநர் ரமேஷ் பைஸ் கேட்டிருந்தார். இதையடுத்து சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பான தனது பரிந்துரையை ஜார்க்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும், ஜார்கண்ட் மாநில சட்டசபையை கலைத்து விட்டு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதனிடையே, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர முயற்சியில் எதிர்க்கட்சியான பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. ஹவுராவில் கார் ஒன்றில் கட்டுக்கட்டாக பணத்துடன் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிடிப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை' திட்டம் அம்பலமாகி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்ததுபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் சோரன் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை சோரன் அரசு மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து தலைநகர் ராஞ்சியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் லக்கேஜ்களுடன் எம்எல்ஏக்கள் குவிந்தனர். அவர்களுடன் ஹேமந்த் சோரன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இரண்டு பேருந்துகள் மூலம் எம்எல்ஏக்கள் புறப்பட்டுச் சென்றனர்.
குந்தி மாவட்டத்தில் உள்ள லத்ரது அணை பகுதிக்கு அமைச்சர்கள் மற்றும் ஏஎம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சென்ற காட்சி வெளியானது. அங்குள்ள விருந்தினர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நாங்கள் வேறு இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும், எங்கு செல்வோம் என தெரியவில்லை என்றும் அமைச்சர் சத்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் சத்தீஷ்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 49 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மட்டும் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்களும், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜார்க்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
- நிலக்கரி சுரங்கத்துக்கான ஒதுக்கீட்டை ஹேமந்த் சோரன் அவரது பெயரில் பெற்றுள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. முதல் மந்திரியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, நிலக்கரி சுரங்கத்துக்கான ஒதுக்கீட்டை தன் பெயரிலேயே ஹேமந்த் சோரன் பெற்றுள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில கவர்னரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை கவர்னர் கேட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று தன் பதிலை கவர்னருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பிரேம் பிரகாஷின் வீட்டில் பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.
- ராஞ்சி போலீசாருக்கு பாதுகாப்பு பணியின் போது துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ். இவரது வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை தேடிச் சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டக்கள் இருப்பதை கண்ட அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது.
அந்த துப்பாக்கிகள் ராஞ்சியை சேர்ந்த 2 போலீசாருக்கு பாதுகாப்பு பணியின் போது வழங்கப்பட்டது என ஆர்கோரா காவல் நிலைய ஆய்வாளர் வினோத் குமார் தெரிவித்தார். ஆகஸ்ட் 23 அன்று சம்பந்தப்பட்ட அந்த காவலர்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது, பிரேம் பிரகாஷின் வீட்டில் ஊழியராக இருந்த தங்களுக்கு தெரிந்த நபரை சந்தித்துள்ளனர்.
அப்போது மழை பெய்ததால் தங்களிடம் இருந்து துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் அங்கிருந்த ஒரு பீரோவிற்குள் வைத்து பூட்டி விட்டு சாவியை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். மறுநாள் துப்பாக்கிகளை எடுக்க சென்றபோது அந்த வீட்டில் சோதனை நடைபெற்றதை கண்ட அந்த காவலர்கள் அவற்றை எடுக்காமல் திரும்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக கூறி இரண்டு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ராஞ்சி காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்