என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சுரங்க முறைகேடு வழக்கு: ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு சம்மன்
- சுரங்க முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர் பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முதல்-மந்திரி சுரங்க ஒதுக்கீட்டை பெற்றதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா மனு அளித்து இருந்தது. இதையடுத்து ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது.
சுரங்க முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முதல்-மந்திரியின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்து இருந்தது. கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட சோதனையில் மிஸ்ராவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11.88 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.5.34 கோடி பணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு அவர் கைதானார்.
மேலும் மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஹேமந்த் சோரனின் பாஸ்புக் மற்றும் அவர் கையெழுத்தட்ட சில காசோலைகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பங்கஜ் மிஸ்ரா தனது கூட்டாளிகள் மூலம் ஹேமந்த் சோரனின் தொகுதியில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தது.
பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர் பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாத்திடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பி உள்ளது.
ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு நாளை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்