search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Soup"

    மூங்கில் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று மூங்கில் அரிசியுடன் காய்கறிகள் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப்,
    கேரட் - ஒன்று ,
    வேக வைத்த பட்டாணி - ஒரு கப்,
    பீன்ஸ் - 5,
    வெங்காயம் - ஒன்று,
    பூண்டு - 2 பல்,
    வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி தழை  - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை :

    பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மூங்கில் அரிசியில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.

    கடாயில் வெண்ணெய் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் அரிசியை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

    சத்தான மூங்கில் ரைஸ் வெஜிடபிள் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மாதுளை, பீட்ரூட் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாதுளை முத்துக்கள் - ஒரு கப்,
    துருவிய பீட்ரூட் - கால் கப்,
    தக்காளி - 2,
    சோள மாவு - 2 டீஸ்பூன்,
    வெண்ணெய் - அரை டீஸ்பூன்,
    கிராம்பு - 2,
    மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாதுளை முத்துக்கள், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து சூடானதும் கிராம்பு, சோள மாவு சேர்த்து லேசாக வறுக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

    உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான மாதுளை - பீட்ரூட் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டோஃபு, பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - ஒரு கப்,
    டோஃபு (சோயா பன்னீர்) - 100 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    செலரி - சிறிதளவு,
    கோஸ் - 100 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன்,
    சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    டோஃபுவை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, செலரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி - பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.

    பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும்.

    நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான டோஃபு பாலக் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிறு பிரச்சனை, அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை இருப்பவர்கள் இந்த சூப்பை அடிக்கடி செய்து குடிக்கலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முழுப்பூண்டு - 2,
    வெங்காயம் - ஒன்று,
    தண்ணீர் - அரை லிட்டர்,
    மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    பால் - ஒரு கப்,
    கெட்டித் தயிர் - சிறிதளவு,
    ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்த மைதாவையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

    பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான பூண்டு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவகேடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும். இன்று அவகேடோ சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவகேடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2,
    உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்,
    பூண்டு -  3 பல்,
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,



    செய்முறை:

    அவகேடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும்.

    பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் அவகேடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

    கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த அவகேடோ  கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.

    கடைசியாக அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி... பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

    சத்தான அவகேடோ கார்ன் சூப்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொண்டைக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய கொண்டைக்கடலை (கருப்பு) - ஒரு கப்
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் வேகவைத்து கொள்ளவும்.

    வேக வைத்த கொண்டைக்கடலையில் சிறிதளவு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கியதும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரைத்த கொண்டைக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்துவைத்த கொண்டைக்கடலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பருகவும்.

    குறிப்பு: இந்த சூப், வளரும் குழந்தைகளுக்கு நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும் சக்தி கொண்டது முள்ளங்கி. இன்று முள்ளங்கியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள்ளங்கி இலை - 1 கப்,
    சிறிய முள்ளங்கி - 1,
    சீரகம் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - சிறிது,
    மிளகுத்தூள் - சிறிது,
    உப்பு - தேவைக்கு,
    மஞ்சள்தூள் - சிறிது,
    எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    முள்ளங்கி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து சீரகத்தை போட்டு பொரிந்ததும், முள்ளங்கி இலை, முள்ளங்கி இரண்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, சூப் பதத்திற்கு தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.

    சூடாக ஃப்ரெஷ் கிரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    சத்தான முள்ளங்கி சூப் ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு வலு சேர்ப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். இன்று தூதுவளை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தூதுவளை இலைகள் - 20,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    சின்ன வெங்காயம் - 5,
    சீரகம் - 1/4 டீஸ்பூன்,
    முழு பூண்டு - 4 பல்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்.



    செய்முறை :

    கொத்தமல்லி, தூதுவளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லித்தழை, தூதுவளை இலையை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கி இறக்கவும்.

    வதக்கிய பொருட்கள் ஆறியதும் தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    சூடாக இருக்கும் போதே மிளகுத்தூளை தூவி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரையை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும். இன்று மணத்தக்காளி கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளி கீரை - அரை கட்டு,
    சின்ன வெங்காயம் - 10,
    பூண்டு - 3 பல்,
    தேங்காய்ப்பால் - அரை கப்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    மிளகுத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.  

    குக்கர் விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

    மணத்தக்காளி கீரை - தேங்காய் பால் சூப் ரெடி.

    வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பரங்கிக்காய் - சிறிய துண்டு
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

    தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இரும்பு சத்து நிறைந்த பசலைக்கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலை கீரை - ஒரு சின்ன கட்டு
    வெங்காயம் - ஒன்று
    பச்சைமிளகாய் - ஒன்று
    பூண்டு - மூன்று பல்
    சோள மாவு அல்லது அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    பட்டர் - இரண்டு டீஸ்பூன்
    பால் - 1 / 2 டம்ளர்
    தண்ணீர் - ஒன்று அல்லது இரண்டு டம்ளர்



    செய்முறை :

    பசலைக்கீரையினை சுத்தமாக அலசி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் பட்டர் போட்டு கரைந்த பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

    அடுத்து அதில் நறுக்கிய கீரையினை சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்றாக கீரை வெந்த பின்பு அதனை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

    கீரை ஆறிய பிறகு சிறுது தண்ணீர் ஊற்றி கீரையினை அரைத்து எடுக்கவும்.

    இதனை எடுத்து வைத்த தண்ணீருடன் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.

    சிறு பவுலில் பால், சோள மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கட்டி வராமல் கலந்து கீரை கலவையில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் சூடு செய்து இறக்கவும்.

    கடைசியாக தேவைக்கு மிளகுத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.

    சுவையான ஆரோக்கியமான சூப் ரெடி…

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு வலுசேர்க்க தினமும் ஏதாவது ஒரு சூப்பை குடிப்பது நல்லது. இன்று காளான், பார்லி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - 100 கிராம்
    பார்லி - 50 கிராம்
    பட்டர் / எண்ணெய் - தேவையான அளவு
    பூண்டு - 4 பல்
    தக்காளி - ஒன்று
    ரசப்பொடி - அரை தேக்கரண்டி
    மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கு
    சத்து மாவு - 2 தேக்கரண்டி
    ஃப்ரஷ் ஒரிகனோ - சிறிது
    கொத்தமல்லித்தழை - சிறிது



    செய்முறை :

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    தக்காளி, காளானை சிறுத்துண்டுகளாக நறுக்கவும்.

    பார்லியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஒரிகனோ சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, காளான் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் காளான் கலவையில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, வேக வைத்த பார்லி சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் சத்து மாவை கரைத்து ஊற்றி ரசப்பொடி தூசி இறக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும்..

    சத்து நிறைந்த காளான் பார்லி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×