search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "keerai soup"

    வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரையை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும். இன்று மணத்தக்காளி கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளி கீரை - அரை கட்டு,
    சின்ன வெங்காயம் - 10,
    பூண்டு - 3 பல்,
    தேங்காய்ப்பால் - அரை கப்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    மிளகுத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.  

    குக்கர் விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

    மணத்தக்காளி கீரை - தேங்காய் பால் சூப் ரெடி.

    வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இரும்பு சத்து நிறைந்த பசலைக்கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலை கீரை - ஒரு சின்ன கட்டு
    வெங்காயம் - ஒன்று
    பச்சைமிளகாய் - ஒன்று
    பூண்டு - மூன்று பல்
    சோள மாவு அல்லது அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    பட்டர் - இரண்டு டீஸ்பூன்
    பால் - 1 / 2 டம்ளர்
    தண்ணீர் - ஒன்று அல்லது இரண்டு டம்ளர்



    செய்முறை :

    பசலைக்கீரையினை சுத்தமாக அலசி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் பட்டர் போட்டு கரைந்த பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

    அடுத்து அதில் நறுக்கிய கீரையினை சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்றாக கீரை வெந்த பின்பு அதனை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

    கீரை ஆறிய பிறகு சிறுது தண்ணீர் ஊற்றி கீரையினை அரைத்து எடுக்கவும்.

    இதனை எடுத்து வைத்த தண்ணீருடன் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.

    சிறு பவுலில் பால், சோள மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கட்டி வராமல் கலந்து கீரை கலவையில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் சூடு செய்து இறக்கவும்.

    கடைசியாக தேவைக்கு மிளகுத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.

    சுவையான ஆரோக்கியமான சூப் ரெடி…

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறியவர் முதல் பெரியோர் வரை தினமும் ஏதாவது ஒரு கீரை சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெந்தயக் கீரை சூப் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயக் கீரை - ஒரு கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,  
    பூண்டு - 2 பல்,
    வெண்ணெய் - சிறிதளவு,
    காய்ச்சிய பால் - அரை டம்ளர்,
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை தட்டிக்கொள்ளவும்.

    கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.

    காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும்.

    எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

    இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான வெந்தயக் கீரை சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×