search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palak Soup"

    டோஃபு, பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - ஒரு கப்,
    டோஃபு (சோயா பன்னீர்) - 100 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    செலரி - சிறிதளவு,
    கோஸ் - 100 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன்,
    சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    டோஃபுவை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, செலரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி - பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.

    பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும்.

    நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான டோஃபு பாலக் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இரும்பு சத்து நிறைந்த பசலைக்கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலை கீரை - ஒரு சின்ன கட்டு
    வெங்காயம் - ஒன்று
    பச்சைமிளகாய் - ஒன்று
    பூண்டு - மூன்று பல்
    சோள மாவு அல்லது அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    பட்டர் - இரண்டு டீஸ்பூன்
    பால் - 1 / 2 டம்ளர்
    தண்ணீர் - ஒன்று அல்லது இரண்டு டம்ளர்



    செய்முறை :

    பசலைக்கீரையினை சுத்தமாக அலசி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் பட்டர் போட்டு கரைந்த பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

    அடுத்து அதில் நறுக்கிய கீரையினை சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்றாக கீரை வெந்த பின்பு அதனை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

    கீரை ஆறிய பிறகு சிறுது தண்ணீர் ஊற்றி கீரையினை அரைத்து எடுக்கவும்.

    இதனை எடுத்து வைத்த தண்ணீருடன் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.

    சிறு பவுலில் பால், சோள மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கட்டி வராமல் கலந்து கீரை கலவையில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் சூடு செய்து இறக்கவும்.

    கடைசியாக தேவைக்கு மிளகுத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.

    சுவையான ஆரோக்கியமான சூப் ரெடி…

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×